Zoom meeting

வரும் 31-ஆம் தேதி (31.5.2020) இந்திய நேரம் காலை ஆறு மணி முதல் எட்டரை வரை வாசகர்களை Zoom meeting-இல் சந்திக்க இருக்கிறேன்.  இதுவரை மாயா இலக்கிய வட்டம் (சிங்கப்பூர்) சார்பாக நடந்த சந்திப்புகள் இந்திய நேரம் மாலை மூன்று மணிக்கு நடந்ததால் அதில் அமெரிக்க வாசகர்கள் கலந்து கொள்ள இயலவில்லை.  அங்கே அவர்களுக்கு அதிகாலையாக இருக்கும்.  அதை உத்தேசித்து அவர்களுக்காகவே இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  எட்டரைக்கு மேல் இங்கே cat factory ஆரம்பமாகி விடும்.  பாத்திரம் தேய்த்தல், காலை உணவு தயாரித்தால், மதிய உணவு தயாரித்தல், ஏனைய எடுபிடி வேலைகள் என்று கடும் பிரச்சினையான நேரம் காலை எட்டரையிலிருந்து பனிரண்டு வரை.  அதனால் காலை ஆறு மணியிலிருந்து எட்டரை வரை எனக்கு எந்த இடையூறுகளும் இருக்காது.  எட்டரை என்பது ஒன்பது வரை கூடப் போகலாம்.  அது வாசகர்களின் கேள்விகளில் அவர்களின் பங்களிப்பில் உள்ளது.  ஆனால் சரியாக ஆறு மணிக்கு ஆரம்பித்து விடலாம்.  அன்று மட்டும் காலை நடைப் பயிற்சியை மாலையில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டேன்.  ஒரு முழுநாளில் காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிதான் நான் அதி உற்சாகமாக இருக்கும் நேரம்.  அந்த நேரத்தில் அமெரிக்க வாசகர்களைச் சந்திப்பது மகிழ்ச்சிக்குரியதுதான்.  ஆனால் ஒரு தமிழரைக் கூட சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை.  எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.  பெண்கள் காலைச் சமையலில் ஈடுபட்டிருப்பார்கள்.  எனவே இது பெரும்பாலும் அமெரிக்க வாசகர்களுக்கான நேரம்தான்.  அவர்களுக்கு அது மாலை நேரம்.  சிங்கப்பூர் வாசகர்கள் கலந்து கொள்ள முடியும்.  அவர்களுக்கு அது ரொம்ப வசதியான நேரம்.  இந்தியாவிலிருந்து பின்னுக்கு இரண்டரை மணி நேரம்.  ஆஸ்திரேலியாவில் என்னை வாசிப்பவர்கள் இருக்கிறார்களா என்றே எனக்குத் தெரியவில்லை.  ஒருவர் கூடத் தொடர்பில் இல்லை.  இலங்கை வாசகர்களின் சுறுசுறுப்பு பற்றி எனக்குத் தெரியாது.  எனக்கு அதிக எண்ணிக்கையில் இலங்கையில் வாசகர்கள் இருந்தும் ஞாயிறு காலை ஆறு மணிக்கு ஒரு இலக்கியச் சந்திப்புக்கு வரும் அளவுக்குத் தீவிரமா என்று தெரியவில்லை.  ஐரோப்பிய வாசகர்களால் அது நினைத்துக் கூடப் பார்க்க இயலாது.  இங்கே ஆறு மணி என்றால், பெல்ஜியத்தில் நள்ளிரவு.  பாலாவினால் முடியாது என்றே நினைக்கிறேன்.  மேலும் ஸூம் சந்திப்பில் நூறு பேர்தான் கலந்து கொள்ள இயலும்.  சிங்கப்பூர் மாயா சந்திப்பில் நூறு பேர் சேர்ந்த பிறகு வந்த பலரையும் சேர்த்துக் கொள்ள இயலாமல் போனது என்று அறிந்தேன்.  எனவே கலந்து கொள்ள விரும்புபவர்கள் என் நண்பர் சதீஷ்வரனிடம் தகவல் சொல்லி விடுங்கள்.  சதீஷ்வரனை உங்களுக்குப் புத்தக மதிப்புரை மூலம் தெரிந்திருக்கலாம்.  அவருடைய புத்தக மதிப்புரை காணொலிகள் இணையத்தில் பிரபலம். 

அவரது மின்னஞ்சல் முகவரி:

puthinam2018@gmail.com

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  முதல் சந்திப்பில் சி.சு. செல்லப்பா பற்றிப் பேசலாம் என்று இருக்கிறேன்.  ஏற்கனவே பழுப்பு நிறப் பக்கங்களில் அவர் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன்.  ஆனாலும் பழுப்பு நிறப் பக்கங்கள் அமெரிக்காவில் பலராலும் வாசிக்கப்படவில்லை.   கூடிய சீக்கிரம் என்னுடைய எல்லா நூல்களும் அமெரிக்காவில் புத்தகமாகக் கிடைக்க ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூலம் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.  இடையில் கொரோனா குறுக்கிட்டு விட்டது.  இல்லாவிட்டால் இந்நேரம் கிடைத்திருக்கும்.  அப்படியே பழுப்பு நிறப் பக்கங்கள் புத்தகம் அமெரிக்காவில் கிடைத்தால் கூட சி.சு. செல்லப்பா பற்றி பத்து சந்திப்புகளில் பத்து மணி நேரம் பேசக் கூடிய அளவுக்கு ஒரு literary canon அவருடையது. எனவே பழுப்பு நிறப் பக்கங்களில் பேசாதவற்றைத்தான் பேசுவேன். 

ஒரு மணி நேரம் பேசலாம் என்று இருக்கிறேன்.  அதற்கு மேலும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளலாம்.  அதற்கு மேல் விவாதங்கள் கேள்வி பதில் எல்லாம் இடம் பெறும்.  சந்திப்பில் கலந்து கொள்ள செல்லப்பாவைப் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  என் உரையைக் கேட்டாலே ஓரளவுக்குப் போதுமான அறிமுகம் கிடைக்கும்.  “கலந்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா செல்லப்பாவைப் படிச்சதில்லை; படிக்காம கலந்துக்கிட்டு அப்றம் உங்க கிட்ட யாரு திட்டு வாங்குறது?”  என்று மட்டும் என்னிடம் சொல்ல வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.   என் உரையைக் கேட்ட பிறகு உங்களுக்கு செல்லப்பாவைப் படிக்க வேண்டும் என்றே தோன்றும். 

இதற்காக நான் ஒரு வார காலம் படித்தாக வேண்டியிருக்கும்.  பரவாயில்லை. செல்லப்பா பற்றிய என் உரை ஒரு ஆவணமாக இருக்கும் இல்லையா?  கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை.  கட்டணம் வைக்கலாம் என்று சிலர் யோசனை சொன்னார்கள்.  நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.  பணம் என்பதைப் பொறுத்தவரை நீங்கள் என்னோடு லகுவாக இருக்கலாம்.  அதாவது, பணத்துக்கும் உங்களுக்குமான உறவு எப்படிப்பட்டதாக இருந்தாலும், நமக்குள்ளான உறவில் பணம் குறுக்கிடவே கூடாது என நினைக்கிறேன்.  ஏனென்றால், நான் ஒரு துறவியின் மனநிலையில் வாழ்பவன்.  என் சிந்தனை உலகில் பணத்துக்குச் சற்றேனும் இடம் இல்லை.  நீங்களும் அப்படி இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவே மாட்டேன்.  இன்றைய பொருள் சார்ந்த உலகில் அது சாத்தியமும் இல்லை.  ஆனால் என்னோடு நீங்கள் பண விஷயத்தில் லகுவாக இருக்கலாம் என்று மட்டுமே சொல்லிக் கொள்கிறேன். அதாவது, பண விஷயத்தை அறவே மறந்து விடலாம்.  கட்டணம் கட்டித்தான் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது.  ஆனால் பணம் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையாய் இருக்கிறது என்பதால், பணம் கொடுப்பதில் விருப்பப்பட்டவர்கள் மட்டும் சந்திப்பில் கலந்து கொண்டதற்குப் பிரதியாக நீங்கள் நினைக்கும் தொகையை எனக்கு zoom மூலம் அனுப்பி வைக்கலாம்.  அல்லது வேறு வழிகளில்.  அதிலும் லகுவாக இருங்கள்.  ஒரு மாதம் அனுப்பினால் தொடர்ந்து அனுப்ப வேண்டும் என்று இல்லை.  ஒருமுறை அனுப்பி விட்டு பிறகு எப்போதாவது அனுப்பலாம்.  சிங்கப்பூர் ஸூம் சந்திப்பில் நூறு பேர் கலந்து கொண்டதில் நான்கு பேர் பணம் அனுப்பினார்கள்.  இந்த நான்கு சதவிகிதத்தை ஒரு வரவேற்கத்தக்க விஷயமாகவே கருதுகிறேன்.  ஒரு எழுத்தாளனுக்கு இப்படி அனுப்பலாம் என்று தோன்றியதே பெரிய விஷயம்.  அவர்கள் அனுப்பாவிட்டால் யாரும் கேட்கப் போவதில்லை. ”உங்கள் நேரத்தை எங்களுக்குக் கொடுத்திருக்கிறீர்கள்; அதற்குப் பிரதியாக இந்தச் சிறு தொகை” என்றே குறிப்பிட்டுக் கொடுத்தார்கள்.  மேலும், சாருஆன்லைனைப் படிப்பதற்காக எனக்கு சந்தாவோ நன்கொடையோ அனுப்பியிருக்கும் நண்பர்களும் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகப் பிரத்தியேகமாகப் பணம் அனுப்ப வேண்டாம்.  ஒருமுறை அனுப்பினால் போதும். 

சுருக்கமாகச் சொல்கிறேன்.  ஹைதராபாத் அமீர்பேட்டையில் உள்ள ஒரு அய்யங்கார் ஓட்டலில் நீங்கள் சாப்பிடலாம்.  சாப்பிட்டு விட்டுக் கிளம்பும்போது வாசலில் கேஷியர் உட்கார்ந்திருக்க மாட்டார்.  மாறாக திறந்த வாசல்தான் இருக்கும்.  போக விரும்பினால் நீங்கள் பாட்டுக்குப் போய் கொண்டிருக்கலாம்.  கேஷியர் உள்பக்கம் அமர்ந்திருப்பார்.  நீங்களாகத் தேடிப் போய்தான் அவர் கையில் காசைக் கொடுக்க வேண்டும்.  சமயங்களில் அங்கே நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தால் அவர்கள் போன பிறகுதான் நீங்கள் காசைக் கொடுக்க முடியும்.  நம்முடைய இலக்கியக் கடையும் அப்படிப்பட்டதுதான்.  விருப்பம் உள்ளவர்கள் பணம் அனுப்பலாம்.  மற்ற சாராரை ”அனுப்ப விருப்பம் இல்லாதவர்கள்” என்று என்னால் அழைக்க முடியவில்லை.  அது தவறு.  நமக்குப் பிடித்த எழுத்தாளனுக்கு ஒருசில டாலர்களைக் கொடுப்பதில் யாருக்கும் விருப்பம் இல்லாதிருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை.  லஜ்ஜைதான் முக்கியமான காரணம்.  பணம் என்று வந்து விட்டால் நாம் கூச்சப்படுகிறோம்.  லௌகீக வாழ்வை இன்னும் லகுவாக அமைத்துக் கொள்ள உதவும் ஒரு காகிதம் அது. (இப்போதைய இண்டர்நெட் பேங்கிங் வந்த பிறகு இனி பணத்தைக் காகிதமாகக் கூட பார்க்கத் தேவையில்லை போல் இருக்கிறது) அப்படிப்பட்ட காகிதத்தின் மீது நமக்குக் கூச்சம் தேவையில்லை.  பணம் அனுப்பத் தேவைப்படும் வங்கி விபரங்கள் கீழே கொடுத்திருக்கிறேன்.

சந்திப்பில் என்னென்ன கேள்விகள் கேட்க விரும்புகிறீர்கள் என்றும் எனக்கு நீங்கள் இப்போதே எழுதலாம்.

charu.nivedita.india@gmail.com  

ஒரு வாரம் படித்து தயார் செய்து ஏன் இந்த வேலை என்று கேட்டால் இது எனக்குப் பிடித்திருக்கிறது என்று மட்டுமே சொல்வேன்.  மே 31 ஞாயிறு காலை இந்திய நேரம் ஆறு மணிக்குச் சந்திப்போம்.

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai