zoom meeting 31 may

மே 31, ஞாயிறு காலை இந்திய நேரம் ஆறு மணிக்கு Zoom மூலமான இலக்கியச் சந்திப்பு பற்றி குறித்து வைத்துக் கொண்டீர்களா?  நண்பர் மனோகர் சொன்னார், நூறு பேர்தான் கலந்து கொள்ள முடியும் என்ற கணக்கெல்லாம் இல்லை, எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று.  மாயா இலக்கிய வட்டத்தில் நூறு என வரையறை செய்திருக்கலாம்.  நாம் எத்தனை பேரை உள்ளடக்கலாம் என்று சதீஷ்வரைக் கேட்டு எழுதுகிறேன்.  சில நண்பர்கள் சதீஷ்வரைத் தொடர்பு கொண்டதாக அறிந்தேன்.  நல்லது.  கேள்விகள் இருந்தால் எழுதும்படி எழுதினேன்.  இரண்டு பேர் மட்டுமே எழுதியிருந்தார்கள்.  இருவருமே என் நெருங்கிய நண்பர்கள்.  வேறு யாரும் எழுதவில்லை.

அன்புள்ள சாரு…

சி.சு. செல்லப்பாவின் அரிய நூலான சுதந்திர தாகம் நூல் குறித்து பழுப்பு நிறப் பக்கங்களில் உயர்வாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

அது ஒரு அரிய ஆவணம் என மதிப்பிடும் நீங்கள் அதற்கு இலக்கிய ரீதியாக எந்த இடத்தை அளிப்பீர்கள்?

அன்புடன்,

பிச்சைக்காரன்.

மிக நல்ல கேள்வி.  என் உரையின்போது பதில் அளிக்கிறேன்.  அடுத்து, வளன் பின்வரும் கேள்விகளை அனுப்பியிருக்கிறார்.

சி.சு. செல்லப்பா குறித்த உங்கள் உரையைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன். http://azhiyasudargal.blogspot.com/2011/11/blog-post.html இந்த இணைப்பில் செல்லப்பா குறித்து சுந்தர ராமசாமி எழுதியதைப் படித்தேன். ஒரு சந்தேகம், ‘எழுத்து’ போன்ற சிறுபத்திரிகைகளுக்கும் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கும் இருந்த வேறுபாடு என்ன? ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் தீவிர எழுத்து வெளிவர எது தடையாக இருந்தது? லா.ச.ரா. போன்றவர்கள் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதினார்கள்தானே? சிறுபத்திரிகைகளை மட்டம் தட்டுவதாக நினைக்க வேண்டாம், மேலே உள்ள இணைப்பில் உள்ள நிகழ்ச்சிகளைப் படித்தால் மனம் நடுங்குகிறது. வாழ்வைத் துறந்து சிறுபத்திரிகைகள் நடத்த வேண்டிய தேவை என்ன?

வளனின் கேள்விகளும் முக்கியமானவை.  அதையும் பேச்சில் சேர்த்துக் கொள்வேன்.  வளன், உன்னிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.  தமிழ் எழுதும்போது கவனம் தேவை.  முன்பெல்லாம் நான் உனக்குத் தனிப்பட்ட முறையில் இதை சுட்டிக் காட்டுவேன்.  ஆனால் இப்போது இது பொதுவான பிரச்சினையாகவே உள்ளதால் இந்த இடத்திலேயே எழுத வேண்டியிருக்கிறது.  உன்னுடைய பனிரண்டு வரிக் கேள்வியில் எட்டு இடங்களில் ஒற்றெழுத்துக்களை சேர்க்க வேண்டியிருந்தது.   மூன்று நான்கு என்றால் கண்டு கொள்ள மாட்டேன்.  வரிக்கு வரி ஒற்றுப் பிழை திருத்த வேண்டும் என்றால் கஷ்டம்.  என் தளத்தில் வெளியிடும் பெரும்பாலான கடிதங்கள் இன்ன பிற எல்லாம் என்னால் பிழை திருத்தம் செய்யப்பட்டவையே.  வெகுசிலர்தான் பிழையின்றி எழுதுகின்றனர்.  ஆனாலும் நீ பத்திரிக்கை என்று எழுதாமல் பத்திரிகை என்று எழுதி என்னை மகிழ்வித்ததற்கு மிகவும் நன்றி.  பெரும்பாலானவர்கள் பத்திரிக்கை என்று வாழ்கை என்றும் எழுதிக் கழுத்தை அறுக்கிறார்கள்.  எங்கே க் போடக் கூடாதோ அங்கே ஒரு க்.  எங்கே போட வேண்டுமோ அங்கே நொள்ளை. 

கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் சதீஷ்வரனுக்கு எழுதுங்கள்.  அவர் மின்னஞ்சல்:

puthinam2018@gmail.com

அன்றைய தினம் கலந்து கொள்ள முடியாதவர்கள் அதன் பிறகு அந்தப் பேச்சைக் கேட்க வேண்டுமானால் கட்டணம் கட்டித்தான் கேட்க வேண்டும்.  சாருஆன்லைனுக்கு சந்தா அல்லது நன்கொடை அளித்தவர்களுக்கு இலவசமாக அதை அனுப்பி வைக்கலாம்.  மற்றபடி எல்லோரும் இலவசமாகக் கேட்க முடியாது.  ஆனால் மே 31-ஆம் தேதி கலந்து கொள்பவர்களுக்குக் கட்டணம் எதுவும் இல்லை.  அவர்கள் விருப்பப்பட்டால் எனக்கு அனுப்பி வைக்கலாம்.  மற்றபடி கட்டாயம் இல்லை.

பொதுவாக எழுத்தாளர்களின் பேருரைகள், பேச்சுக்கள் எல்லாம் உடனுக்குடன் ஷ்ருதி டிவி மூலம் உங்களை வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.  மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் அதைச் செய்து வருகிறார் நண்பர் கபிலன்.  ஆனால் இனிமேல் என் பேச்சுக்களை இலவசமாக யூட்யூபில் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.  என் பேச்சு என்பது என்னுடைய intellectual property.  உதாரணமாக, பிச்சைக்காரனின் கேள்விக்கு நான் சுதந்திர தாகத்தை – அதன் 2500 பக்கங்களில் ஒரு ஆயிரம் பக்கமாவது மீண்டும் படிக்கத்தான் வேண்டும்.  ஒரு வாரம் தொடர்ந்து படித்தால்தான் ஒன்றரை மணி நேரம் பேச முடியும்.  செல்லப்பா அந்த அளவுக்கு எழுதிக் குவித்திருக்கிறார். 

யூட்யூபிலேயே அவ்வப்போது – வாரம் ஒருமுறை – பேசலாமா என்று கூட கொஞ்சம் யோசித்தேன்.  ஆனால் அதற்கு நான் வெகுஜனத் திரளை ஊடறுக்க வேண்டும்.  சித்தர் பீடம் சேனலில் நான் பேசியதை மூன்று லட்சம் பேர் கேட்டிருக்கிறார்கள்.  அதைக் கேட்டு விட்டுத்தான் ஏ.ஆர். ரஹ்மான் என்னைச் சந்திக்க விரும்பினார்.  கமல்ஹாசனுக்கு megalomania என்ற மனோவியாதி உள்ளது என்று நான் கூறியதை, கமலுக்கு அந்த நோய் இருக்கிறது என்று தலைப்புப் போட்டதால் அந்த விடியோவை இரண்டு லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.  இப்படி சினிமா, ஆன்மீகம், சமையல், ஆரோக்கியம், இப்போது கொரோனா காலகட்டத்தில் இயற்கை உணவு, மூலிகை மருத்துவம் போன்ற விஷயங்களில் பேசினால் பார்வையாளர் எண்ணிக்கை லட்சங்களில் அள்ளும்.  நமக்கெதற்கு அது?  இந்தப் பிராபல்யம் என்ற விஷயத்தைப் பற்றி ஏராளமாக எழுதி விட்டேன்.  சுஜாதா எழுத்தாளர்களில் சூப்பர் ஸ்டார். அவரைத் தெரியாதவர்களே இல்லை.  அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய நேர்ந்த போது மருத்துவமனை செலவுகளில் ஒரு பகுதியை மணி ரத்னம் கட்டியதாகப் படித்திருக்கிறேன்.  பிரபஞ்சனுக்கு மிஷ்கின்.  ஏனென்றால், சுஜாதாவின் புத்தகமாகவே இருந்தாலும் 5000 பிரதிகளுக்கு மேல் போகாது.  உண்மையில் சுஜாதாவின் நூல்கள் லட்சம் பிரதிகள் விற்றிருக்க வேண்டும்.  இன்னொரு depressing விஷயமும் இருக்கிறது.  ஒரு அழகான இளம் பெண் டூ பீஸ் ஆடையில் யோகா சொல்லிக் கொடுத்தால் அதை இரண்டு லட்சம் பேர் பார்த்திருப்பார்கள்.  கு.ப. ராஜகோபாலன் எழுதியதை ஒரு வார காலம் ராப்பகலாகப் படித்து நான் ஒன்றரை மணி நேரம் பேசினால் அதை யூட்யூபில் 300 பேர் பார்த்திருப்பார்கள்.  இதெல்லாம் நமக்கு வேண்டாத வேலை.  நம்முடைய இருப்பிடம் காடு.  அங்கே ராஜா போல் இருப்பதை விட்டுவிட்டு ஏன் சர்க்கஸில் போய் வேடிக்கை காட்ட வேண்டும்? 

ஏன் இப்படிக் கறாராக இருக்கிறேன் என்றால், தமிழர்களின் 4000 ஆண்டுப் பழக்கத்தை நான் முதல் ஆளாக மாற்ற முயற்சிக்கிறேன்.  ஞானத்தை இலவசமாகப் பெறாதீர் என்பதே என் செய்தி.  அதற்காகப் பணமே குறி என்றும் கிடையாது.  மாதம் ஒரு பத்து டாலர் என்று ஆண்டுக்கு நூறு டாலர் அனுப்பினால் கூடப் போதும்.  இப்படி நூறு பேர் முன்வந்தால் போதுமே? 

எஸ். ராமகிருஷ்ணனின் பேச்சுக்கள் யூட்யூபில் இலவசமாகக் கிடைக்கின்றன.  மூன்று மணி நேரமெல்லாம் பேசியிருக்கிறார்.  எல்லாமே இலவசம்.  இதெல்லாம் அநியாயம் இல்லையா என்று தோன்றுகிறது.  அவர் எழுதிய புத்தகம் என்றால் அதற்கு ஒரு விலை உள்ளது.  பேச்சு என்றால் இலவசமா?  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வில் முதலும் கடைசியுமாக மிகுந்த மன அழுத்தத்தில் கிடந்தேன்.  மாயா என்ற தலைப்பில் கவிதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்த காலம்.  ஒருநாள் தற்செயலாக எஸ்.ரா.வின் பேச்சு ஒன்றைக் கேட்டேன்.  யூட்யூப்.  இலவசம்.  தஸ்தயேவ்ஸ்கி பற்றிய உரை.  ஒன்றரை மணி நேரம் இருக்கும்.  பல மாதங்களாக இருந்த என் மன அழுத்தம் நீங்கி விட்டது.  அந்த வகையில் அந்தப் பேச்சு என் உயிரை மீட்டுக் கொண்டு வந்தது என்றே சொல்ல வேண்டும்.  (இது தவிர எனக்குப் பைத்தியம் பிடித்து விடாமல் காப்பாற்றியது ராம்ஜியின் நட்பு.)   இந்த வகையில் நான் எஸ்.ரா.வுக்கும் ராம்ஜிக்கும் பெரிதும் கடன்பட்டிருக்கிறேன்.  இது ராம்ஜிக்குத் தெரியும்.  எஸ்.ரா.வுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இப்படி அவர் கார்ல் மார்க்ஸ் பற்றியும் மற்றும் பல்வேறு ஆளுமைகளைப் பற்றியும் பேசியிருக்கிறார்.  பேசிக் கொண்டும் இருக்கிறார்.  எல்லாமே இலவசம்.  அந்த லக்‌ஷுரி எனக்கு இல்லை.  இதற்குமே நான் தான் முதல் முதலாக பூனைக்கு மணி கட்ட நேர்கிறது.  இதுவரை யூட்யூபில் கிடைக்கும் என் உரைகள் யாவும் இலவசம்தான்.  ஆனால் இனி பதிவு செய்யப்படும் உரைகள் யாவும் கட்டணத்துக்கு உரியது.  என் இணைய தளம் மட்டும் இலவசமாகப் படிக்க ஏதுவாகிறதே என்று கேட்டால், மீண்டும் ஹைதராபாத் அமீர்பேட்டை அய்யங்கார் உணவகத்தையே உதாரணம் காட்டுவேன்.  அங்கே சாப்பிடலாம்.  யாரும் உங்களிடம் காசு கேட்க மாட்டார்கள்.  கேட் திறந்தே கிடக்கும்.  நீங்களாகத் தேடிப் போய்தான் கேஷியரிடம் காசு கொடுத்து விட்டுப் போக வேண்டும்.  அங்கே வேறு கூட்டமாக இருக்கும்.  அதற்கும் காத்திருந்துதான் கொடுக்க வேண்டும்.  அப்படிப்பட்டது என் இணையதளம். 

சந்திப்போம் மே 31, ஞாயிறு, இந்திய நேரம் காலை ஆறு மணி.  தலைப்பு சி.சு. செல்லப்பா.  தொடர்புக்கு:

puthinam2018@gmail.com

உங்கள் கேள்விகளை, சந்தேகங்களை எனக்கு எழுதுங்கள். ஒற்றுப் பிழைக்காக வைவார் என நினைக்க வேண்டாம்.  வளன் என் வளர்ப்பு மகன்.  அதனால் எழுதினேன்.  உங்களை ஒன்றும் சொல்ல மாட்டேன். தயக்கம் வேண்டாம். 

charu.nivedita.india@gmail.com

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai