பூச்சி 67

நான் சந்தேகித்தபடியே அம்மா வந்தாள் நாவலில் உல்ட்டாவாகத்தான் எழுதி விட்டேன்.  உள்ளது உள்ளபடி கீழே:

அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்

தண்டபாணிக்கு ஹைகோர்ட் ஜட்ஜெல்லாம் சிஷ்யர்கள். வேதத்தில் சந்தேகம் என்றால் அவரிடம்தான் கேட்பார்கள். மெத்தப் படித்தவர். அவர் மனைவி அலங்காரம். மூத்த பிள்ளை அவனுடைய மனைவி, மகள் காவேரி, இளைய புதல்வர்கள் கோபு, வேம்பு – இவர்கள்தான் அந்தக் குடும்ப உறுப்பினர்கள். வேதம் படிக்க சென்றிருக்கும் அப்பு இரண்டாவது மகன்.

இந்தக் குடும்பத்தில் நுழைகிறான் சிவசு என்ற சிவசுந்தரம். விரைவிலேயே தண்டபாணி வீட்டுக்கு அவனுடைய போக்குவரத்து அதிகரிக்கிறது. ஒருநாள் தண்டபாணி குளியலறையில் இருக்கும்போது சிவசுவின் குரல் கேட்கிறது. இன்னும் சிறிது நேரம் கழித்துப் போகலாம் என்று குளித்துக் கொண்டே இருக்கிறார் தண்டபாணி. பிறகு ‘விரல் அழுக்கைக் கூட எடுத்தாகி விட்டது. எத்தனை நேரம்தான் குளிக்கிற உள்ளில் நிற்க முடியும்?’ என்று நினைத்தபடி வெளியே வருகிறார்.

பொதுவாக எழுத்தாளர்கள் பெண்களைப் பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதுவார்கள். அதிலும் தி.ஜா. தேவி உபாசகர். அவருக்கு எல்லாப் பெண்களுமே தெய்வத்தின் நடமாடும் உருக்கள்தான். ஆனால் ‘அம்மா வந்தாள்’ நாவலில் தண்டபாணியின் கையறுநிலையைக் கதறி கதறி எழுதியிருக்கிறார். சிவசு அலங்காரத்தைத் தன் வீட்டுக்கு அழைக்கிறான்.

‘அதெல்லாம் சரி மன்னி. நீங்க ஆத்துப் பக்கமே வரலியே. வந்து மாசக் கணக்கா ஆயிருக்கும் போலிருக்கே… ரங்கம் கூடப் போன வாரம் சொல்லிண்டேயிருந்தா, மன்னியைக் காணவேல்லியேன்னு…’

இந்தப் பேச்சை மாடியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார் தண்டபாணி.

‘பொய்! பொய்!’ என்று மூடின கண்ணை இடுக்கினார் தண்டபாணி. புருவம் சுளித்தது. ‘ரங்கம் அப்படிச் சொல்லி இருக்கவே மாட்டாள். நீதான் சொல்லுகிறாய். அலங்காரத்தைக் குழியை வெட்டிப் புதைக்க வேண்டும் என்றுதான் அவள் சொல்லியிருப்பாள்…’

அலங்காரம் என்ன பதில் சொன்னாள் என்று அவர் காதில் விழவில்லை.

அப்பு வண்டியிலிருந்து இறங்கி பெட்டி படுக்கையுடன் வீட்டின் உள்ளே நுழைகிறான். ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் சிவசுவைப் பார்த்து விட்டு ‘என்னடா கோபு, மீசையை எப்ப எடுத்தே?’ என்று கேட்கிறான். மறுகணமே சற்றுக் குழம்பி உற்றுப் பார்க்கிறான். தங்கை காவேரி அவன் குழப்பத்தைத் தீர்க்கிறாள். ‘சிவசு மாமாண்ணா!’

‘ஆ! மாமா… சௌக்யமா, சார்?’ என்றான் அப்பு.

(பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் – 2)

பூச்சி 66ஐப் படித்து பயமாக இருந்தது என்று எழுதியிருந்தார் புவனேஸ்வரி.  தருணைக் கொலை செய்ய முயன்றதா என்று கேட்டேன்.  இல்லை, பொதுவாக எழுத்தாளர்களின் நிலையைப் பார்த்து என்றார்.  ஆனாலும் பரவாயில்லை.  மகான் என்று அழைக்கப்பட்ட மகாப் பெரியவர் சந்திர சேகரேந்திரரே ஒரு  சமூகத்தின், பண்பாட்டின், மொழியின் அடையாளமே எழுத்தாளர்தான் என்று சொல்கிறார் என்றால், அதன் அடுத்த பக்க விளைவுகளையும் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்?  இன்று நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.  எழுத்தாளன் என்றால் யார் என்று தெரியும். 

வியாழக்கிழமையானால் மாலை நாலு மணிக்குள் குமுதத்துக்குக் கட்டுரை அனுப்பி விட வேண்டும்.  என்ன எழுதுவது என்று புதன்கிழமையே யோசித்து விடுவேன்.  வியாழன் அன்று காலையில் அமர்ந்தால் மாலைக்குள் முடித்து விடுவேன்.  சாருஆன்லைனில் 3000 வார்த்தைகள் எழுத மூன்று மணி நேரம் ஆகும்.  குமுதத்தில் 1000 வார்த்தைகள் எழுத ஆறு மணி நேரம் ஆகும்.  அந்த அளவு யோசிக்க வேண்டும்.  அவந்திகாவின் ஆன்மீக வகுப்பில் முக்கியமான உறுப்பினர் குடும்பம் ஒன்று, கணவர் 44 வயது, மனைவி 41 வயது, குழந்தை 5 வயது. மூவரும் தவறாமல் செவ்வாய்க்கிழமை நடக்கும் ஆன்மீக வகுப்புக்கு ஆஜராகி விடுவர்.  கடந்த இரண்டு மாதமாக ஸூம் மூலம் நடக்கிறது.  அந்த 41 வயதுப் பெண்மணிக்கு ஸைனஸ் போல இருக்கிறது.  அதற்காக மருத்துவம் பார்த்து வருகிறார்.  நேற்று ஏதோ லேசாக ரத்தம் வந்ததாம்.  லேசாக மயக்கம் வருவது போல் இருக்கிறது, தூங்குகிறேன் என்று படுத்தவர் தூக்கத்திலேயே போய் விட்டார்.  அப்பல்லோவுக்கு எடுத்துப் போனால் ஹார்ட் அட்டாக்கினால் மரணம் என்று எழுதிக் கொடுத்து விட்டார்கள்.  அவந்திகாவுக்கு போன்.  கணவர் போனில் அழுகிறார்.  குழந்தையும் அவந்திகாவிடம் அம்மா ஏன் பேச மாட்டேங்கிறாங்க என்று கேட்கிறான். 

கொரோனா காலமாக இருப்பதால் ரொம்பக் கம்மியாகத்தான் ஆட்கள் இருக்க வேண்டும், நண்பர்கள் கூடாது, பெற்றோர் மட்டும்தான் அனுமதி.  மதியம் பனிரண்டுக்குள் சடலத்தை எடுத்து விட வேண்டும்.  அரசு உத்தரவு.  அவந்திகாவினால் செல்ல முடியாது.  என்னிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.  எனக்கு எதுவுமே காதில் விழவில்லை.  நான் பாட்டுக்கு எந்திரம் போல் டைப் அடித்துக் கொண்டே இருக்கிறேன்.  டைப் அடிக்கும் போதே அடுத்த பத்தியை யோசிக்கிறேன்.  அவள் சொல்வதைப் பார்க்கிறேன்.  ஆனால் எதுவுமே என் உள்ளே போகவில்லை.  நாலு மணிக்குக் கட்டுரையை அனுப்பி விட்டுத்தான் அவளிடம் என்னம்மா இது அநியாயம் என்றேன்.  Ruthless கர்மயோகி.  இல்லாவிட்டால் காகிதமே கொடுக்காத சிறைச்சாலையிலும் மலம் துடைக்கும் டிஷ்யூ பேப்பரிலேயே ஒரு முழு நாவலையும் எழுதி முடித்திருப்பாரா மார்க்கி தெ ஸாத்? 

எழுத்தாளன் என்பவன் இப்படித்தான் இருக்க முடியும்.   

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai