பூச்சி – 71

71

சமீபத்தில் எழுதியிருந்தேன் அல்லவா, சினிமா உலகில் போய் என்னால் குப்பை கொட்ட முடியாது என்று?  அங்கே போனால் கொஞ்சமாவது ஜால்ரா அடிக்க வேண்டும்.  நாம் ஹலோ சொல்வதற்குக் கூடத் தகுதியில்லாதவர்களையெல்லாம் சார் போட்டுப் பேச வேண்டும்.  அது நம்மால் முடியாது என்று எழுதியிருந்தேன்.  அதை எழுதிவிட்டுப் படுத்த போது என் கனவில் பாரதி காந்தியைச் சந்தித்த நிகழ்ச்சி வந்தது.  இங்கே சென்னையில் கதீட்ரல் சாலையில் ராஜாஜியின் பங்களாவில் காந்தி தங்கியிருந்தபோது.  அந்தச் சந்திப்பு பற்றி வ.ரா. எழுதியதை அப்படியே இங்கே தருகிறேன்: 

ரௌலட் சட்டத்தை ரத்து செய்வதற்காக நடந்த கிளர்ச்சியை முன்னிட்டு 1919-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தி சென்னைக்கு வந்தார். ராஜாஜி வீட்டில் தங்கினார். அப்போது ராஜாஜி சென்னை கதீட்ரல் ரோடு, இரண்டாம் நம்பர் பங்களாவில் வசித்தார்.

ஒருநாள் மதியம் இரண்டு மணி இருக்கும். காந்தி வழக்கம் போல் திண்டு மெத்தையில் சாய்ந்து கொண்டு ஏதோ சொல்லிக் கொண்டிருக்க மகாதேவ தேசாய் எழுதிக் கொண்டிருந்தார். சேலம் பாரிஸ்டர் ஆதி நாராயண செட்டியார் குடகுக் கிச்சிலிப் பழங்களை உரித்துப் பிழிந்து மகாத்மாவுக்காக ரசம் தயார் பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு பக்கத்துச் சுவரில் ஏ. ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியோரும், அந்தச் சுவருக்கு எதிர்ச் சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்து நின்று கொண்டிருந்தார்கள். நான் வாயில் காப்போன். யாரையும் உள்ளே விடக் கூடாது என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு.

அறைக்குள்ளே பேச்சு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்.

‘என்ன ஓய்!’ என்று சொல்லிக் கொண்டே, அறைக்குள்ளே நுழைந்து விட்டார். என் காவல் கட்டுக் குலைந்து விட்டது.

உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன். பாரதியார் காந்தியை வணங்கி விட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார். அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது. பாரதியார் சொன்னார்:

’மிஸ்டர் காந்தி, இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?’

எழுத்தாளன் தான் சமூகத்தின் ஒளியாக விளங்குபவன். அதனால்தான் தாகூரை மகாத்மா குருதேவ் என்று அழைத்தார். தான் இந்த சமூகத்தின் ஒளியாக விளங்குகிறோம் என்பதை அந்தத் தமிழ்க் கவிஞன் உணர்ந்திருந்ததால்தான் மகாத்மாவின் மெத்தையிலே போய் அமர்ந்து கொண்டு மிஸ்டர் காந்தி என்று அழைத்தான். இதை உணராததால்தான் சத்தியமூர்த்தியும் ராஜாஜியும் அப்போது பாரதியின் மீது எரிச்சல் அடைந்திருக்கிறார்கள். ”நாங்களே மகாத்மாவின் முன்னே பணிவுடன் நின்று கொண்டிருக்கும் போது இந்த ஆள் ஏதோ கவிதைகள் எழுதுகிறோம் என்ற ஹோதாவில் மேதாவியைப் போல் மகாத்மாவின் மெத்தையிலேயே அமர்ந்து கொண்டு விட்டாரே?” இதை அவர்கள் வாய் விட்டுச் சொல்லவில்லை. ஆனால் அவர்களின் உடல்மொழி சொல்லி விட்டது; அதை மகாத்மாவும் கவனித்து விட்டார் என்பதை அந்தச் சம்பவத்தின் கடைசியில் அவர் சொன்னதிலிருந்து நாம் இப்போதும் புரிந்து கொள்ளலாம்.

நடந்ததை மேலே சொல்கிறார் வ.ரா.
தன்னுடைய காரியதரிசி மகாதேவபாயிடம் அன்றைய தினம் மாலையில் வேறொரு நிகழ்ச்சி இருப்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் மகாத்மா, பாரதியிடம் “தங்கள் கூட்டத்தை நாளைக்கு ஒத்தி வைக்க முடியுமா?” என்று கேட்கிறார். அதற்கு பாரதி சொன்ன பதில்: “முடியாது; போய் வருகிறேன், மிஸ்டர் காந்தி. தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.”

கவனியுங்கள், மகாத்மாவை ஆசீர்வதிக்கிறார் பாரதி. தான் முன்பின் அறிந்திராத ஒரு ஆள், வாசலில் காவலுக்கு நின்று கொண்டிருந்தவரையும் மீறிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் அல்லாமல் தன் மெத்தையில் அமர்ந்து கொண்டு தன்னைப் பெயர் சொல்லி அழைத்து ஆசீர்வாதமும் செய்கிறார் என்றால் அவர் ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும் என்பது மகாத்மாவுக்குப் புரிந்து விட்டது. ஆனால் அங்கே நின்று கொண்டிருந்தவர்களோ அவரைப் பற்றித் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை என்பதையும் கவனித்தார். பிறகு அவர்களிடம் யார் இவர் என்று கேட்கிறார். யாருமே பதில் சொல்லாததால் ராஜாஜி, “அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” என்கிறார்.

அப்போதுதான் மகாத்மா தமிழர்களாகிய நம் எல்லோருடைய கன்னத்திலும் அறைகிறாற்போல் “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்று கேட்டார். அதற்கும் அங்கிருந்த யாருமே பதில் சொல்லவில்லை. எல்லோரும் மௌனமாக இருந்தார்கள் என்று முடிக்கிறார் வ.ரா.
மகாத்மா கேட்ட கேள்வி பற்றி நான் இன்னமும் பல இரவுகளில் உறங்காமல் யோசித்துக் கொண்டிருக்கிறேன். பாரதி வாழ்ந்த காலம் 1882 – 1921. மேலே சொன்ன சம்பவம் நடந்தது 1919. அப்போது பாரதியின் வயது 37. இன்னும் இரண்டு ஆண்டுகளே உயிரோடு இருக்கப் போகிறார். மகாத்மாவின் வயது 50.

***

நன்றாகக் கவனியுங்கள்.  ஒரு 37 வயது ஆள் இந்தியாவே கொண்டாடிய 50 வயது மகாத்மாவை மிஸ்டர் காந்தி என அழைக்கிறார் என்றால், அதில் உள்ள கவிச்செருக்கு எப்படிப் பட்டது!  இதே காரணத்தினால்தான் நான் சினிமா உலகில் நுழையவில்லை.  இன்னொரு முக்கியமான விஷயம்.  பாரதி சென்னையில் இருந்த போது சென்னை போலீஸ் கமிஷனர் எல்லாம் பாரதியின் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.  மாலை நேரத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள்.  வீட்டுக்கு வந்தால் அரிசி இல்லாமல் சாப்பாடு இருக்காது.  வெறும் தண்ணீரைக் குடித்து விட்டுத்தான் படுக்க வேண்டும்.  சமூகம் எத்தனை சுரணையற்றதாக இருக்கிறது என்பதற்கு அந்தச் சம்பவம் ஒரு உதாரணம். 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai