13. பத்து கட்டளைகளை இன்னும் நீட்டிக் கொண்டு போகலாம் போல் இருக்கிறது. இது பதின்மூன்றாவது கட்டளை:
Don’t stay where you are tolerated, go where you are celebrated.
இதை என் நண்பர் இளங்கோவன் எழுதியிருந்தார். இது பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய வாசகம். இந்தக் கொரோனா பேரிடர்க் காலத்தில் எனக்குப் பெண்களிடமிருந்து வரும் கடிதங்களில் ஒன்றைக் கூட என்னால் வெளியிட முடியாது. ஆனால் அவற்றைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் என்னால் சும்மா வாயை மூடிக் கொண்டும் இருக்க முடியவில்லை. தேவாலயத்தில் உள்ள Father Confessor நிலையில் இப்போது நான் இருக்கிறேன். மற்றவர்களின் வாக்குமூலங்களைக் கேட்பவர்தானே ஃபாதர் கன்ஃபெஸர்? என்னிடம் கதை சொல்லும் பெண்களெல்லாம் பாவம் புரிந்தவர்கள் அல்ல. பாவத்தின் பலியாடுகள். ஆனால் எல்லாமே ஒரே கதை. இரண்டு மாதமாக வீட்டில் இருந்து கொண்டு அவர் செய்யும் டார்ச்சரை சொல்லி மாளாது என்று காட்சி காட்சியாக எழுதுகிறார்கள். அதற்காக யாரும் சாட்டையை எடுத்துக் கொண்டு அடிப்பதில்லை. சொல்லப்போனால் மற்றவர் பார்வைக்கு அது டார்ச்சர் என்றே தோன்றாது. என்னைத் தவிர அந்தக் கதைகளை வேறு யார் கேட்டாலும் அந்தப் பெண்களை சைக்கோ என்றே கூறுவர். இதையும் அந்தப் பெண்களே உணர்ந்திருக்கிறார்கள், என்னிடமும் சொல்கிறார்கள். உங்களைத் தவிர இதை வேறு யாரிடம் சொன்னாலும் என்னைப் பைத்தியம் என்றே சொல்வார்கள். சொல்வார்கள் என்ன, என் அம்மாவிடம் சொன்னேன். நீதான் அவரை டார்ச்சர் செய்கிறாய் என்று என்னைத் திட்டினார்கள். அதாவது, இவ்வளவு நல்ல மனிதரைப் பற்றியே புகார் சொல்லும் நீ எவ்வளவு மோசமான பெண்ணாக இருக்க வேண்டும். உன்னை இப்படி வளர்த்து விட்டேனே! அவர் என்ன அடிக்கிறாரா, திட்டுவது கூட இல்லை. அவர் பாட்டுக்கு சிவனே என்று அவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். உனக்கு என்ன பிரச்சினை?
என்ன பிரச்சினை தெரியுமா? மூன்று வேளையும் சமையல். ஒழியும் நேரங்களில் கணவனோடு சேர்ந்து அசட்டு சீரியல் பார்க்க வேண்டும். போனைத் தொடக் கூடாது. யாரிடமும் பேசக் கூடாது. அதாவது, அந்தப் பெண்ணுக்கென்று ஸ்பேஸே (Space) கிடையாது. யாருக்காவது இங்கே நான் சொல்வது புரிகிறதா? புரிந்தால் இந்தச் சித்ரவதையை அனுபவிக்கும் பல ஆயிரம் பெண்களின் துன்பம் அடுத்த தலைமுறையில் மாறலாம். உனக்கு இங்கே என்ன குறை? இந்தக் கேள்விதான் ஒரு பெண்ணைப் பார்த்துத் திரும்பத் திரும்பக் கேட்கப்படுகிறது. அந்தப் பெண் ஒன்றும் யாரோ ஒருத்தனோடு கள்ள உறவு வைத்திருக்கவில்லை. அக்கடா என்று கையைக் காலை நீட்டிக் கூடப் படுக்க முடியவில்லை என்று ஒரு பெண்ணின் புகார். இதில் என்னம்மா பிரச்சினை? அது என்ன பகலில் தூக்கம்?
வந்து என்னோடு டிவி பார்.
இல்லைங்க, அது எனக்கு போர் அடிக்குது.
அப்போ நான்லாம் மடையன். நீ பெரிய புத்திசாலி. (புத்திஜீவி என்ற வார்த்தை அவனுக்குத் தெரியவில்லை) ம்… திமிரு.
அட அதெல்லாம் இல்லிங்க. வாங்க. பாப்போம்.
ஒண்ணும் தேவையில்லை. நாங்கள்ளாம் மடப்பசங்க. நீங்கள்ளாம் புத்திசாலி.
பிறகு நான் தான் ஏதோ தவறு செய்து விட்டதைப் போல பலவிதமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அந்தப் பாடாவதி சீரியலைப் பார்த்துத் தொலைக்க வேண்டும். இதை விடக் குடித்து விட்டு வந்து பெல்ட்டால் அடிக்கும் புருஷன் தேவலை. குறைந்த பட்சம் என் புருஷன் என்னை அடிக்கிறான் என்றாவது சொல்லலாம். ஆனால் இந்த ஆள் பண்ணும் கொடுமையைச் சொன்னால் யாருக்குமே புரிய மாட்டேன் என்கிறது. எப்போதடா ஆஃபீஸ் திறக்கும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.
இப்படி என் சக மனுஷி என்னைப் பற்றி நினைக்கிறாள் என்றால் நானெல்லாம் தூக்கு மாட்டிக் கொண்டு சாவேன். படுபாவிகள். கூட வாழும் பெண் என்ன நினைக்கிறாள் என்று கூடவாடா தெரியாது மடப்பயல்களா? எல்லாவற்றையும் விட சோகம் என்னவென்றால், ஊர் பேர் தெரியாத, நேரில் பார்த்தேயிராத ஒரு எழுத்தாளனிடம் இதையெல்லாம் கடிதமாக எழுத முடிகிறது. ஆனால் கூட வாழ்பவனிடம் இதைச் சொல்ல முடியவில்லை. அதற்கான space இல்லை. நீ அந்த ஸ்பேஸைக் கொடுக்கவில்லை. உன்னை விடப் பரிதாபத்துக்குரிய மனிதன் வேறு யாரும் இல்லை. இதைப் படிக்கும் ஆண்களே, சாருவை நீங்கள் ஒருமுறையாவது படித்திருந்தால் வேறு எதையுமே மாற்றிக் கொள்ள வேண்டாம், குறைந்த பட்சம் உங்கள் மனைவிக்கும் மகளுக்கும் மகனுக்கும் தங்கள் குறைகளை வெளியே சொல்வதற்கான ஸ்பேஸையாவது கொடுங்கள். ஆனால் இது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு நீங்கள் ஒட்டு மொத்தமாக மாற வேண்டியிருக்கும். ஸ்பேஸ் கொடுப்பது என்பது உங்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொடுப்பது போன்றது அல்ல. அது ஒரு நம்பிக்கை. அடுத்தவர், நீங்கள் வாழும் இடத்தில் சுதந்திரமான காற்றை அனுபவிப்பதற்கான ஸ்பேஸை நீங்கள் அனுமதிக்க வேண்டும். White Lines என்ற ஒரு வெப்சீரீஸ். இரண்டொரு எபிசோட்தான் பார்த்தேன். அதில் வரும் பெண் தன் கணவனோடு பதினைந்து ஆண்டுகள் இங்கிலாந்தில் வாழ்கிறாள். மனமொத்த தம்பதிகள். ஒரு பிரச்சினை, ஒரு சண்டை வந்ததில்லை. ஒருமுறை தன் சகோதரனின் துர்மரணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இபீத்தா என்ற தீவுக்குப் போகிறாள். Ibiza என்பதை ஸ்பானியர்கள் இபீத்தா என்றே அழைப்பார்கள். ஸ்பெய்னில் உள்ள இந்தத் தீவைப் பற்றித் தெரிந்து கொள்ளவே இந்தத் தொடரின் சில எபிசோடுகளைப் பார்த்தேன். சொர்க்கத் தீவு என்று சொல்லலாம். கிடக்கட்டும். அந்தத் தீவில் அவள் தன் அண்ணனின் கொலை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் அங்கே தங்கியிருப்பது அவள் கணவனுக்குப் பிடிக்கவில்லை. கவனியுங்கள், பதினைந்து ஆண்டுகளாக அவர்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் வந்ததில்லை. இதுதான் முதல். அவள் உஷாராகிறாள். அவளுக்கு இதுப் புதிய அனுபவம். அவளுடைய விருப்பத்துக்கு அவள் கணவன் தடையாக இருப்பது அவளுக்குப் புதிது. அவனோ ஏதோ அவள் தன்னை விட்டுப் பிரிந்து விட்டது போலவே நினைக்கிறான். இரண்டொரு நாள்தானே இருப்பாய் என்று நினைத்தேன்? நானும் உன் பெண்ணும் உனக்குத் தேவையில்லையா? (பெண்ணுக்குப் பதினான்கு வயது) இதைக் கேட்டு அவள் மிரண்டு போகிறாள். பதிலுக்கு அவள் சொல்லும் வசனத்தைத்தான் எனக்குக் கடிதம் எழுதும் நூறு பெண்களும் எழுதுகிறார்கள். “உன்னோடு நான் பதினைந்து ஆண்டுகள் உன் நிழலைப் போலவே இருந்திருக்கிறேன். யோசித்துப் பார். ஒரு இரவு கூட உன்னை விட்டு நான் பிரிந்து இருந்ததில்லை. ஒரு இரவு கூட. அப்படியென்றால் என்ன அர்த்தம்? எனக்கென்று தனியாக ஒரு வாழ்க்கையே இருந்ததில்லை. இப்போதுதான் நான் சுதந்திரம் என்றால் என்ன என்று உணர்கிறேன். இதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது.” இவளை அழைத்துக் கொண்டு வருவதற்கு அவள் கணவன் அவளுடைய தகப்பனை வேறு அனுப்பி வைக்கிறான். அவள் வர மறுத்து விடுகிறாள்.
அடிமையைப் போல் இருந்தால் பிரச்சினை இல்லை. கொஞ்சம் பாதை விலகினால் பிரச்சினை. பாதை என்றால் என்ன பாதை? தமிழ் டிவி சீரியல் பார்க்கும் பாதை. சரி, சுதந்திரமான ஸ்பேஸ் என்றால் என்ன? சில உதாரணங்கள் தருகிறேன். ஏற்கனவே எழுதியதுதான். இருந்தாலும் இந்த இடத்தில் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஒருநாள் மகாமுத்ராவுக்கு நானும் அவந்திகாவும் சென்றோம். ஒரு மணி இருக்கும். லஞ்ச் ஆர்டர் எடுத்துக் கொள்ள சிப்பந்தி வந்த போது அவந்திகாவுக்கு ஒரு போன். போனில் பேசிக் கொண்டே தனக்கு வேண்டியதைச் சொன்னாள். போனில் பேசிக் கொண்டே சாப்பிட்டாள். முடித்தாள். சிப்பந்தி வந்து பணம் வாங்கிக் கொண்டு போனார். சாப்பிட்டு முடித்து வெளியே வந்தோம். ஆட்டோ பிடித்தோம். வீட்டுக்கு வரும் போது மணி மூன்று. பேச்சு இன்னும் முடிந்திருக்கவில்லை. எல்லாம் ஆன்மீக சமாச்சாரம். ஏன், சினிமா விஷயமாகக் கூட இருக்கட்டுமே, எனக்கென்ன விசாரம்? மூன்றரைக்குத்தான் முடிந்தது பேச்சு. நானும் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. ஆச்சரியமாகக் கூட இல்லை. அவளும் ஸாரி கீரி எல்லாம் சொல்லவில்லை. எதற்கு? இதுதான் சுதந்திரமான ஸ்பேஸ்.
இன்னொரு சம்பவம். இது நடந்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். ஒரு ஆன்மீக வகுப்புக்குச் சென்றிருந்தாள் அவந்திகா. கொஞ்சம் தாமதமாகும் என்று சொல்லிவிட்டுத்தான் சென்றாள். இரவு இரண்டு ஆகியும் வரவில்லை. போனும் எடுக்கவில்லை. இரண்டரை மணி போல் வந்தாள். என்னம்மா ஆச்சு என்று பதற்றத்துடன், தூக்கக் கலக்கத்துடன் கேட்டால், ஆள்காட்டி விரலால் வாயைத் தடுத்துக் காண்பித்தாள். என்னவென்று புரிந்து கொள்வது? சரி என்று தூங்கி விட்டேன். மறுநாள் மதியம் போல் காரணம் சொன்னாள். தியான வகுப்பு முடிந்து பத்து மணி நேரமாவது மௌன விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்லி விட்டாராம் குருஜி.
எதற்குச் சொல்கிறேன் என்றால், ஏதோ கல்லூரி ண்பர்களோடு வாழும்போது நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம், அந்த அளவு சுதந்திரமாக வாழ்கிறாள் அவந்திகா. இத்தனையெல்லாம் வேண்டாம், அக்கடா என்று படுத்தால் ஒரே ரகளையாகி விடுகிறது வீட்டில். எப்போதடா ஆஃபீஸ் திறக்கும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்று வருகிறது கடிதங்கள்.
இதனால் சொல்ல வருவது, இன்றைய இளைஞர்கள் (ஆண்பிள்ளைகள்) நாளை திருமணம் செய்து கொள்ளலாம். செய்து கொண்டு மனைவி என்ற பெண் இப்படி ஒரு அந்நிய நபரிடம் சென்று “இவர் எப்போது ஆபீஸ் கிளம்புவாரோ தெரியவில்லையே?” என்று புலம்பும்படி நடந்து கொள்ளாதீர்கள். உங்களைச் சுற்றியிருப்போர் உங்களைக் கொண்டாட வேண்டும்; சகித்துக் கொள்ளும்படி இருக்கக் கூடாது.
***
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai