பூச்சி 111

சனி ஞாயிறுகளில் காலை நேர நடைப் பயிற்சி இசையிலேயே கழிகிறது.  வீட்டிற்குள் நடந்தால் மட்டுமே அது சாத்தியம்.  மாடிக்குப் போனால் நெட் இணைப்பு போய் விடுகிறது.  இசை கேட்க முடியவில்லை.  அங்கே கிளிகள்தான்.  எதிர்த்த வீட்டு மரங்களில் நூற்றுக்கணக்கான கிளிகள்.  அதிலும் அந்தப் பஞ்சவர்ணக் கிளியின் பேச்சைக் கேட்பதென்றால் அது ஒரு அற்புதம்.  சனி ஞாயிறுகளில் மட்டும் வீட்டுக்குள்ளேயே “எட்டு” போட்டு விடுவேன்.  Infinite walking என்று சொல்வார்கள்.  முழுக்க முழுக்க பாகிஸ்தானின் கோக் ஸ்டுடியோதான்.  இந்திய கோக் ஸ்டுடியோ அத்தனை தரமாக இல்லை.  சூஃபி இசையிலும் மற்றபடியான ஜனரஞ்சக இசையிலும் இந்தியர்கள் பாகிஸ்தானியர் அளவுக்குத் தரத்தை எட்டவில்லை என்று தோன்றுகிறது.  இப்படி எழுதுவதற்காகவே என்னை தேசத் துரோகி என்று சொல்லி சிறையில் போட்டு விடுவார்களோ என்று அஞ்சுகிறேன்.  Indians deserve this kind of fascism.  இவர்கள்தான் பெருவாரியாக வாக்களித்து ஃபாஸிஸ்டுகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.  காரணம், இந்தியர்கள் ஃபாஸிஸ்டுகளாக மாறி விட்டார்கள்.  இப்படி ஃபாஸிஸம் வளர்ந்ததற்குக் காரணம், இந்துக்கள் அல்லாதோரின் மதத் தீவிரவாதப் போக்கு.  இதைச் சொன்னால் அவர்கள் என்னை இந்துத்துவா என்கிறார்கள்.  இப்போது நடப்பது ஃபாஸிஸம் என்று சொன்னால் என் இணைய தளத்தை முகநூலில் முடக்குகிறார்கள்.  இன்னும் வீட்டுக்கு குண்டர்கள் வராததுதான் பாக்கி.  என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை என்னவென்றால், சிறுபான்மையினரும் என்னை ஆதரிக்க மாட்டார்கள்.  அவர்கள் என்னை இந்துத்துவா என்கிறார்கள்.  இந்துத்துவா ஆட்களோ என்னை முடக்க வீட்டுக்கு ஆள் அனுப்புகிறான்.  ஆக, இரண்டு பக்கத்தாலும் தாக்கப்படும் நிலையில் இருக்கும் நான் அரசியலே எழுத வேண்டாம் என்று பார்க்கிறேன்.  ஃபாஸிஸ்ட் என்னை சிறையில் போட்டால் ஃபாஸிஸ்டை எதிர்ப்பவர் என்னை ஆதரிக்க வேண்டும் அல்லவா?  அவரோ சிறையிலேயே என்னை விஷம் வைத்துக் கொல்ல வேண்டும் என்றல்லவா நினைக்கிறார்?  கம்யூனிஸ்டுகளும் என்னை ஆதரிக்க மாட்டார்கள்.  பெருமாள் முருகனுக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டதை கம்யூனிஸ்டுகள் எதிர்த்தார்கள்.  அவர் உலகப் புகழ் அடைந்தார்.  ஆனால் பெருமாள் முருகன் எழுதுவதெல்லாம் இலக்கியம் அல்ல என்று சொன்ன எனக்கு ஒரு கம்யூனிஸ்ட்தான் கொலை மிரட்டல் விட்டார்.  அதுதான் நிலைமை.  அதனால் வாயை மூடிக் கொண்டிருப்பதுதான் எனக்கு இருக்கும் ஒரே வழி.  ஏனென்றால், நான் ஃபாஸிஸ்டுகளை மட்டும் விமர்சிக்கவில்லை.  ஃபாஸிஸ்டுகளை உருவாக்கி விடும் சிறுபான்மையினரின் மதத் தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன்.  இனிமேல் பொதுத்தேர்தல் நடந்தாலும் மோடிதான் வருவார்.  சந்தேகம் இல்லை.  ஏனென்றால், இந்துக்கள் பெரும்பாலும் ஃபாஸிஸத்தை ஆதரிப்பவர்களாக மாறி விட்டார்கள்.  அப்படி அவர்களை மாற்றியதில் பெரும்பங்கு சிறுபான்மையினரின் மதத் தீவிரவாத அணுகுமுறைக்கு இருக்கிறது.

அப்படி அடுத்த ஆட்சியிலும் மோடி வந்தால் அநேகமாக நான் சிறையில்தான் இருப்பேன்.  அதுவரை என்னை விட்டு வைத்திருந்தால்.  எல்லாம் பாகிஸ்தான் கோக் ஸ்டுடியோ இசையை ரசிக்கும் போது தோன்றிய எண்ணங்கள்.  பாருங்கள், இசை கேட்கும் போது கூட அரசியலைத் தவிர்க்க முடியவில்லை.  இதையெல்லாம் தவிர்க்க ஒன்று பண்ணலாம்.  பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் இந்தியாவில் தடை செய்து விடலாம். 

எனக்கு ஞாநியின் ஞாபகம் வருகிறது.  கருணாநிதிக்கு வயதாகி விட்டது, அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று ஒரு கட்டுரை எழுதினார்.  அந்தக் கட்டுரை எனக்குப் பிடிக்கவில்லை.  ஒருத்தரின் வயதைச் சொல்லி ஓய்வு எடுக்கச் சொல்ல உமக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்டேன்.  அந்தக் கட்டுரையில் ஞாநி, கருணாநிதி மேடையில் அமர்ந்திருக்கும் போது அவர் வேஷ்டியில் மூத்திரக் கறை படிந்துள்ளது,  அது கூட அவருக்குத் தெரியவில்லை என்று எழுதினார்.  கருணாநிதியின் தள்ளாமையைச் சுட்டிக் காட்ட. ரொம்ப ஆபாசமான கட்டுரை என்று நினைத்தேன்.  ஞாநியைத் திட்டி திமுகவினர் ஒரு கூட்டம் போட்டார்கள்.  அதில் கனிமொழி பேசினார்.  அத்தோடு சரி. இதுதான் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கும் ஃபாஸிஸ்டுகளுக்கும் உள்ள வித்தியாசம்.  ஃபாஸிஸ ஆட்சியென்றால் ஞாநியைக் கொன்றிருப்பார்கள்.   

ஹிட்லர் காலத்தில் ஜெர்மன் செழித்தது.  ஒரு பதினைந்து ஆண்டு காலம் எல்லாம் சரியாக நடக்கும்.  அதன் பின்னால் ஃபாஸிஸம் அந்த தேசத்தையே சுடுகாடாக மாற்றி விட்டு அழிந்து போகும்.  உலகம் பூராவும் அதுதான் வரலாறு.  அப்படித்தான் இந்திய தேசம் அழியும் என்றால் அதை யாரும் தடுக்க முடியாது.  இப்போது ஹிட்லரின் பெயரைச் சொன்னாலே ஜெர்மானியர் தம் உடம்பில் கம்பளிப் பூச்சி ஊர்கிறாற்போல் தவிக்கிறார்கள்.  தங்கள் தாய் மானபங்கப்பட்ட கதையைக் காது கொடுத்துக் கேட்பது போல் கூசுகிறார்கள்.  இன்னும் அந்தக் கூச்சம் அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் தொடரும்.  இந்தியர்களுக்கு மறதி அதிகம்.  அதனால் அவர்களுக்கு அந்தக் கூச்சம் இருக்காது.  ஆனால் எல்லாம் ஒரு பதினைந்து ஆண்டுகள்தான்.  அதன் விளைவை நம் எதிர்கால சந்ததியினர் அனுபவிப்பார்கள்.  நம் தோட்டத்தில் ஆளைக் கொல்லும் தாவரங்களை மிக சந்தோஷத்துடன் உரமிட்டு வளர்க்கிறோம்.  நன்றாக வளருங்கள்.  உங்கள் சந்ததி அழியும்.  அதுதான் உங்கள் வாரிசுக்கு நீங்கள் தர இருப்பது என்றால், அது மிக நன்றாக நடக்கட்டும்.

அந்த அழிவை இந்த அழகான பாடலைக் கேட்டுக் கொண்டாடுவோம். 

https://www.scoopwhoop.com/Best-Of-Coke-Studio-Pakistan-Songs/

க.நா.சு. பற்றிய என் உரை தேவையெனில் எனக்கு எழுதுங்கள்.

charu.nivedita.india@gmail.com

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai