முகநூல் அடிமைகளுக்கு…

தொல்காப்பியரையும் திருமூலரையும் பல ஆண்டுகள் சென்று திரும்பவும்  வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  ஒரு பெண்ணுக்கு மாத விடாய் முடிந்து எத்தனை நாள் கழித்து உடலுறவு கொண்டால் கரு தரிக்கும் என்ற விபரத்தைக் கூட தொல்காப்பியர் எழுதியிருக்கிறார்.  பிரமிப்பாக உள்ளது.    திருமூலரின் கீழ்க்கண்ட பாடலைப் பாருங்கள்.  இதன் அர்த்தம் பற்றி யோசியுங்கள்.

அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி

தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி

எண்டிசை சூழ்ந்த லிங்கம் எழுகோடி

அண்ட நடஞ்செயும் ஆலயந் தானே

Comments are closed.