பா. ராகவன் அடியேனுக்குத் தர வேண்டிய ஆயிரம் ரூபாய்!

குமுதத்துக்கு இன்று மதியம் பன்னிரண்டு மணிக்குள் கட்டுரை போய்ச் சேர்ந்தாக வேண்டும். இன்று மாலைக்குள் எக்ஸைல் பிழை திருத்தம் முடித்துக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன்.  900 பக்கத்தில் 300 பக்கம் முடித்திருக்கிறேன்.  அத்தனையையும் விட்டு விட்டு இதை எழுதிக் கொண்டிருப்பதற்குக் காரணம், பா. ராகவனின் யதி நாவல்.  இன்று காலை நாலு மணிக்கு அதைக் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாக அதைப் படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று மேஜையிலேயே வைத்திருக்கிறேன்.  … Read more

சிங்கப்பூர் குஞ்சு…(அபாயகரமான திருப்பங்களை நோக்கி…)

அன்புள்ள சாரு,நானும் சிங்கப்பூரில் வசிப்பவன் தான். என் பெயர் வேண்டாம். சிங்கப்பூர் குஞ்சு பற்றி உங்களுக்கு எப்படி இப்படி உடனே புரிந்தது என்று வியப்பாயிருக்கிறது.உங்களை நான் ஒரு எழுத்தாளன் என்பதைத் தாண்டி ஒரு ஞானியாகவே எப்போதும் பார்ப்பேன். ஒரு ஞானிக்கே, எதிரிலிருப்பவனின் அத்தனை பாசாங்குகளுக்குப்பின் உள்ள அந்த அகம்பாவம், குரூரம், எகத்தாளம் எல்லாம் தெரியும். புரியும்.இந்த நச்சுப்பாம்பு பற்றி யாரும் இவ்வளவு எழுதியது கிடையாது. உங்களுக்கு முதலில் நன்றி.தன்னிடம் அல்லது தன் அமைப்பிடம் எழுத வந்து, பிறகு … Read more

சிங்கப்பூர் குஞ்சு (தொடர்கிறது…)

கைலாச சாமியார் பற்றி தொடர் எழுதி, அவர் என் மீது பல வழக்குகள் போட்டு ஒவ்வொரு வழக்குக்காகவும் பெங்களூருக்கு மாதாமாதம் எட்டு ஆண்டுகள் போய் வந்தேன்.  நாய் அலை பேய் அலை என்பார்களே அதுதான்.  எழுதவும் முடியவில்லை.  எழுதினால் அதற்கு ஒரு வழக்கு பாயும்.  ஒருமுறை பெங்களூர் போலீஸ் என் வீட்டுக்கு அரெஸ்ட் வாரண்டோடு வந்து விட்டார்கள்.  ஒரு வார்த்தை தமிழோ ஒரு வார்த்தை ஆங்கிலமோ தெரியாமல் என் வீட்டையே கண்டு பிடித்து விட்டார்கள் அந்த இரண்டு … Read more

எம். ரிஷான் ஷெரீபின் நூல்கள்

சர்வதேச புத்தகக் கண்காட்சியில்  இலங்கை எழுத்தாளரின் நூல்கள்     2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு என புதிய ஐந்து நூல்கள் … Read more

பெரிய விஷயமும் சின்ன விஷயமும்

முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலுக்கு இதுவரை 250 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.  நல்ல விஷயம்.  எல்லோருக்கும் நன்றி.  ஆனாலும் பழுப்பு நிறப் பக்கங்கள் நூலுக்கு 600க்கு மேல் முன்பதிவு செய்தார்கள்.  அதோடு ஒப்பிட்டால் இது கம்மிதான்.  மேலும், அது கட்டுரைத் தொகுதி.  இது நாவல்.  இருந்தாலும் 250 பேர் மாதக் கடைசியில் முன்பதிவு செய்தது பெரிய விஷயம்தான்.  சின்ன விஷயம் எது என்றால், லத்தீன் அமெரிக்க சினிமா நூலுக்கு 15 பேர் முன்பதிவு செய்திருப்பது.  அந்த நூல் பற்றி … Read more