ஹௌல் மற்றும் சில கவிதைகள்…

தமிழில் நவீன கவிதைக்கு ஒரு மிகச் சிறப்பான பாரம்பரியம் இருக்கிறது.  பாரதியின் வசன கவிதைகளிருந்தே துவங்கலாம்.  பிறகு ந. பிச்சமூர்த்தி, தர்மு சிவராமு, ஞானக்கூத்தன் என்று தொடங்கி தேவதேவன், தேவதச்சன், ஆத்மாநாம், சுகுமாரன் என்று தொடர்ந்து இன்றைய சங்கர ராமசுப்ரமணியன் வரை வந்திருக்கிறது.  ஒரு தூரத்து வாசகனாக இந்தப் பின்னணியும் நெருங்கிய வாசகனாக Rainer Maria Rilke, Stéphane Mallarmé, ஆர்த்தர் ரேம்போ போன்ற ஐரோப்பியக் கவிகளின் பின்னணியும் கொண்டே என் கவிதைகளை எழுதி வருகிறேன்.  இந்தக் … Read more

மாபெரும் நாடகம்

Peter Paul Rubens நானொரு மாபெரும் நாடகத்தை நடத்தத் திட்டமிட்டேன் நடிகர்களை உருவாக்கினேன் கலை இயக்குனரை அழைத்து செட் பற்றி விளக்கினேன் எல்லாம் நிஜத்தைப் போலவே இருக்க வேண்டும் என்றேன் மரம் செடி கொடி நிலா நட்சத்திரம் கோட்டை கொத்தளம் குளம் கடல் மீன் பறவை யானை குதிரை கழுதை புழு பூச்சி ஏரி காடு எரிமலை பாலை பாறை மண் கல் வயல் நதி நீர்வீழ்ச்சி காற்று புயல் மழை அக்கினி போலீஸ் ஸ்டேஷன் பாராளுமன்றம் … Read more

ராஸ லீலா – ஒரு வாசகனாக…

தான் எழுதிய பழி நாவல் வெளிவந்து பத்து ஆண்டுகள் கழித்து இப்போது அது பற்றிப் பரபரப்பாக விவாதங்கள் வந்து கொண்டிருப்பதன் அபத்தம் மற்றும் அவலம் பற்றி எழுதியிருந்தார் அய்யனார் விஸ்வநாத்.  தமிழ் எழுத்துச் சூழலின் எத்தனையோ அபத்தங்களில் ஒன்று அது.  தற்சமயம் ராஸ லீலா மறுபதிப்புக்காக பிழைதிருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  அந்த வேலை ராணுவக் கொட்டடி சித்ரவதை மாதிரி என்றும் எழுதியிருந்தேன்.   அப்போது ராஸ லீலா பற்றிய ஞாபகச் சிதறல்களிலிருந்து என்னால் தப்ப முடியவில்லை.  என் எழுத்தோடு … Read more

புத்தகமே நிதியாக

தமிழ் ஸ்டுடியோ போன்ற ஒரு பேரியக்கத்தை தொடர்ந்து நடத்துவதும், அதில் புதிய களப்பணிகளை மேற்கொள்வதும், புதிய புதிய முன்னெடுப்புகளை முன்னெடுப்பதும் பெரும் சவால் நிறைந்த வேலை. சவால் செய்யும் பணியில் இல்லை, மாறாக பொருளாதார ரீதியில் பெரும் சிக்கலாக இருக்கிறது. நானும் எத்தனையோ வழிமுறைகளை புதிது புதிதாக கண்டுபிடித்து நிதி திரட்டி, வருமானம் ஈட்டி நடத்தி வருகிறேன். ஆனாலும் பெரும் ராட்சசன் போல பணியாற்று பெரும் சமூக இயக்கம் என்பதால் நிதி மேலும் மேலும் தேவைப்படுகிறது. IFFC … Read more

Krithi Knowledge Festival

கொச்சியில் நடைபெறும் Krithi Knowledge Festival-இல் வரும் 16-ஆம் தேதி காலை பத்து மணிக்கு, இந்தியாவின் தலைசிறந்த புத்திஜீவிகளுள் ஒருவரான பேராசிரியர் K.P. ஜெயஷங்கருடன் ‘Flag and Freedom’ என்ற தலைப்பில் உரையாடுகிறேன். நண்பர்கள் அவசியம் வரவும். Krithi Knowledge Festival என்ற முகநூல் பக்கத்தில் இந்தக் கலந்துரையாடல் நேரடியாக ஒளிபரப்பாகும். இடம்: கேசரி அரங்கம், கொச்சி

தேகம் – முன்பதிவு

நான் எழுதிய நாவல்களில் அளவில் சிறியது தேகம் தான். பத்து நாட்களில் எழுதி முடித்தேன். என் நாவல்களிலேயே அதிகம் விவாதிக்கப்படாததும் கவனிக்கப்படாததும் கூட இந்த நாவல்தான். ஆனால் இதைப் படித்த சில உளவியலாளர்கள் மனித மனம் பற்றிய ஓர் ஆழமான ஆய்வு இது என்றார்கள். அதைக் கேட்ட போது என் மீதுள்ள அன்பினால் சொல்கிறார்கள் என்றே நினைத்தேன். ஆனால் சமீபத்தில் தேகம் நாவலை பிழை திருத்தம் செய்வதற்காக மீண்டும் வாசித்த போது அந்த உளவியலாளர்கள் சொன்னதன் பொருளைப் … Read more