படச்சுருள் விழாவில்…

ஞாயிற்றுக்கிழமை மாலை அருணின் தமிழ் ஸ்டுடியோஸ்/ப்யூர் சினிமா அரங்கில் நண்பர்கள் அருண், ஜனநாதன், வஸந்த், மிஷ்கின் ஆகியோருடன் நானும் பேசினேன்.  படச்சுருள் பத்திரிகையின் முதலாம் ஆண்டு விழா.  நான் சுமார் 15 நிமிடங்கள் பேசினேன்.  இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்.  ஆனால் அதற்கு சற்று முன்னால் தான் நியூஸ் 18 என்ற சேனலுக்கு இரண்டரை மணி நேரம் சினிமாவும் இலக்கியமும் என்ற தலைப்பில் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தியிருந்தேன்.  அதையே திரும்பவும் அந்த விழாவில் பேசத் தெம்பு இல்லை. … Read more

“சாரு ஒரு பத்தி எழுத்தாளர் மட்டுமே”

சாரு, சமீபத்தில் உங்கள் மேல் ஒரு அதிருப்தி ஏற்பட்டது. அது அவ்வப்போது ஏற்படக்கூடிய ஒன்று தான். ஆனால் சமீபத்தில் ஏற்பட்டது உங்கள் ரசனையின் மேல். நான் உங்களை கடந்த எட்டு வருடங்களாக படித்து வருகிறேன். நீங்கள் எழுதியவற்றில் இரண்டு மூன்று புத்தகங்களைத் தவிர (ரெண்டாம் ஆட்டம், தீராக் காதலி, எங்கே உன் கடவுள் (துக்ளக் அப்போது கையில் கிடைக்க வில்லை)) மற்ற எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அந்த வகையில் என் சிந்தனைப் போக்கில் உங்கள் தாக்கம் அதிகம் இருந்தது. … Read more

இருவர்

என்னை மிக நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் சிலரில் ஆக முக்கியமானவர்கள் என இரண்டு பேரைச் சொல்லலாம்.  ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன்.  நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை.  சமீபத்தில்தான் ஒரு நண்பரிடம் எஸ்.ரா. சென்னையின் எந்தப் பகுதியில் வசிக்கிறார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்தித்துக் கொண்டால்தான் உண்டு.  சமீபத்தில் அப்படிச் சந்திக்க நேர்ந்த போது ”ArtReview Asiaவில் நீங்கள் எழுதுவது மிகப் பெரிய விஷயம்; மிகப் பெரிய கௌரவம்” என்றார். இன்னொருவர் ஜெயமோகன்.  அவரும் … Read more

மோர் சாதமும் தாமதமாக வந்த அழைப்பும்…

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் முகநூலில் அடியேன் இட்ட பதிவுகள்: ப்ராமின் கேர்ள்ஸைக் கல்யாணம் செய்து கொள்வதில் ஒரு சின்ன பிரச்சினை இருக்கிறது. நம்மையும் ப்ராமின்னு நினைச்சுக்கிட்டு அடையார் ஆனந்த பவன் ஜிலேபி கொடுத்து விடுகிறார்கள் பக்கத்து வீட்டு எதிர்வீட்டு இஸ்லாமிய சகோதரர்கள்! பிரியாணி வாசனை நம்மை நாலா பக்கமும் தூக்கி அடிக்க அடையார் ஆனந்த பவன் ஜிலேபி சாப்பிடுவது எவ்வளவு கொடுமை தெரியுமா நண்பர்களே! 12 மணி. மோர் சாதம், தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயத்தோடு இன்றைய … Read more

சிக்கன் பஜ்ஜியும் சில தேவ கணங்களும்…

தடம் இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை பற்றி மனுஷ்ய புத்திரன் முகநூலில்: தடம் இதழை இன்று மாலை தமிழ்மகன் தந்தார். மிக நேர்த்தியான வடிவமைப்புடன் செம்மையாக இருந்தது. என்னைப்பற்றி சாரு ஒரு கட்டுரை எழுதியிக்கிறார் என்று கேள்விப்பட்டதிலிருந்து அதை படிக்கவிரும்பினேன். ஒரு சிநேகிதி காலையில் போன் செய்து ‘ தடத்தில் சாரு உன்னைப்பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு நானே சாரு உன் கவிதைகளைப் பற்றி அவர் ப்ளாக்கில் எழுதியதை படித்துதான் உன்னைத் தேடி வந்தேன். … Read more

லக்ஷ்மி சரவணகுமார் பாராட்டு விழாவில் பேசியது…

முதலில் ஷ்ருதி டிவி நண்பர்களுக்கு, நான் எழுதியதை அதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றி. மலைச்சொல் பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ் இணைந்து கானகன் நாலுக்காக 2016ம் ஆண்டின் சாகித்ய அகாடமி – யுவ புரஸ்கார் விருது பெற்ற லக்ஷ்மி சரவணகுமாரை வாழ்த்தும் நிகழ்வில் சாரு நிவேதிதா உரை: