ராமன் ராகவ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுராக் காஷ்யப்பின் படத்தைப் பார்க்கப் போகிறேன்.  நாளை. அசோகமித்திரனுக்கும் அனுராக் காஷ்யப்புக்கும் ஒரு ஒற்றுமை.  அ.மி.யிடம் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டால் கல்கி என்பார்.  ஆனால் அசோகமித்திரனோ காஃப்கா, கம்யு போன்றவர்களை விட பெரும் சாதனையாளர்.  அதேபோல் அனுராக் காஷ்யப்புக்குப் பிடித்த இயக்குனர் பாலா.  அவர் தயாரிப்பில் உருவான உட்தா பஞ்சாபும் கொடுமை.  ஆனால் அனுராக் காஷ்யப்பினால் ஒரு மோசமான படைப்பை உருவாக்கவே முடியாது.  அவருடைய கடைசி படமான பாம்பே … Read more

உலகின் மிகச் சிறந்த நாவல்

பா. வெங்கடேசனை 20 ஆண்டுகளுக்கு முன்னால் அறிவேன்.  ஹொகனேக்கல்லில் நடந்த இலக்கியச் சந்திப்பில் அவரோடு நிறைய உரையாடியிருக்கிறேன்.  அவருடைய குரல் மிகவும் வித்தியாசமாக ஒரு பாடகனின் குரலைப் போல் தனித்து ஒலிக்கும்.  ஆளும் கெச்சலாக இருப்பார்.  தமிழவன், எஸ். சண்முகம் குழுவைச் சேர்ந்தவர் என்பதாக என் மனதில் பதிந்திருந்தார்.  அந்தக் குழுவின் மீது எனக்கு அவ்வளவாக மரியாதை கிடையாது.  கலாரசனை இல்லாதவர்கள் என்று எண்ணம்.  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு உயிர்மை கூட்டத்தில் தமிழவனை சந்திக்க … Read more

மரணத்தோடு பகடையாடியவன்…(2)

அன்புள்ள சாரு, கவிஞர் குமரகுருபரன் மறைவும் அதை ஒட்டி இலக்கியப் பரப்பில் நிகழ்ந்து வரும் விவாதங்களையும் அறிவீர்கள். குமரகுருபரனைத் தங்கள் வலைத்தளத்தில் தாங்கள் அறிமுகப்படுத்தியதில்தான் அறிவேன்.  இச்சூழ்நிலையில் பல கேள்விகள் மனதை நிலையிழக்கச் செய்கின்றன.  அதீதத்தின் கரங்களுக்குள் ஒரு மனிதனை இட்டுச் செல்வது எது? வாழ்வில் எதனால் ஒரு மனிதன் அதீதத்தால் ஆட்கொள்ளப்பட்டு அழிவிற்குள்ளாகிறான்? அன்பும் பண்பும் மிக்கவர்களுக்கே இந்த நிலை வாய்ப்பது எதனால்? அவருக்குள் இருந்த கோபம் எதன் மேல்? எதற்காக? அந்த ஆறாத சினம் … Read more

தி இந்து நண்பர்களுக்கு ஒரு கடிதம்…

கடந்த ஒரு மாதமாக ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.  அதனால் ஜூன் 15-ஆம் தேதி வந்த அந்த அவதூறுகளுக்கு இன்றுதான் பதில் எழுத முடிந்தது.  அது என்ன முக்கியமான பணி என்று கூட சொல்லி விடுவேன்.  ஆனால் சொன்னவுடனே செய்வினை வைத்து காரியத்தைக் கெடுத்து விடுகிறார்கள்.  எனக்கும் இம்மாதிரி மூட நம்பிக்கைகளையெல்லாம் விட்டொழித்து விட்டுப் பகுத்தறிவு பக்கம் நகர்ந்து விடலாம் என்றுதான் தோன்றுகிறது.  ஆனால் மூட நம்பிக்கைகள்தானே பலமாக வேலை செய்கின்றன?  இதோ சீலே கிளம்புகிறேன் என்று … Read more

மரணத்தோடு பகடையாடியவன்

I have closed the road of the mouth and opened the secret way; I have escaped by one cup of wine from the frenzy of speech. ஜலாலுத்தீன் ரூமி ஞாயிற்றுக்கிழமை அன்று பதினோரு மணிக்கு ’துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி பேச வேண்டும்.  பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதியது.  ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடிக்க மூன்று நாள் போதாதா என வேறு … Read more

Udta Punjab : Review

http://newsable.asianetnews.tv/entertainment/udta-punjab-charu-nivedita-review   Ikk Kudi: http://www.bharatstudent.com/cafebharat/watch_videos-Ikk_Kudi_from_Udta_Punjab_is_OUT_NOW_-1,3,36549.php Hass Nach le:  I just love this song.  My salute to Amit Trivedi a psychedelic song: Chitta ve Da Da Dasse