நாளை காலை பத்தரை மணிக்கு…

நாளை (19-6-2016) காலை பத்தரை மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி பேச இருக்கிறேன்.  இது போன்ற செய்திகளை சாருஆன்லைனில் இனிமேல் வெளியிடுவதில்லை என்று இருக்கிறேன்.  யாரும் வருவதில்லை.  அதுதான் காரணம்.  ஆனாலும் இப்போது எழுதுவது ஏன் என்றால், பொதுவாக என் பேச்சை விடியோ எடுத்து பலரும் கேட்கும்படி செய்வது ஷ்ருதி டிவி. அவர்களுக்கு நான் முன்கூட்டியே சொல்லாததால் அவர்கள் வேறொரு கூட்டத்துக்குப் போகிறார்கள். … Read more

வாழ்த்துக்கள்

உப்பு நாய்களுக்கே கிடைத்திருக்க வேண்டும்.  கொஞ்சம் தாமதமாகி விட்டது.  கானகன் நாவலைப் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரை மணி நேரம் அந்த நூலின் வெளியீட்டு விழாவில் (என்று நினைக்கிறேன்) பேசினேன்.  அப்போதே இது போன்ற விருதுகள் லக்ஷ்மி சரவணகுமாருக்குக் கிடைக்கும் என்று சொன்னேன்.  இப்போது கானகன் நாவலுக்கு யுவ புரஸ்கார் விருது கிடைத்திருக்கிறது.  பலரும் திட்டுவார்கள்.  எழுத்தாளனைக் கழுமரத்தில் ஏற்றி வேடிக்கை பார்க்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அந்தத் திட்டுகளையே வாழ்த்தாக ஏற்க வேண்டும்படி லக்ஷ்மி … Read more

Book Unfair!

எதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பது முதுமொழி.  எல்லாரையும் போல் எல்லாவற்றையும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்க எழுத்தாளன் எதற்கு?  அதை விட கவர்மெண்டில் குமாஸ்தாவாகவே இருந்திருக்கலாமே?  பாரதியும் வெகுஜன விரோதிதான்.  அவன் காலத்தில் அவன் வாங்காத ஏச்சா, பேச்சா?  இந்த ஏச்சுப் பேச்சுக்கெல்லாம் பயந்து கொண்டு எல்லாவற்றையும் பாராட்டிக் கொண்டிருந்தால் நான் எழுத்தாளன் அல்ல.  தேசத் துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டும் கூட ஓரான் பாமுக் என்ன சொன்னார்?  அதுதான் எழுத்தாளனின் வேலை.  உங்களுக்கு முதுகு சொறிந்து விடவும் … Read more

தகரக் கொட்டகை புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு ஆதரவான பேட்டி

சென்னை தீவுத்திடலில் ஒரு தகரக் கொட்டகை போட்டு தகரம் வெளியே தெரியாமல் பெரிய வெள்ளைப் படுதாவில் மூடி ஒரு புத்தகக் கண்காட்சி நடந்து இன்று முடிய இருக்கிறது அல்லவா, அது பற்றி பிரபு காளிதாஸ் கொடுத்த பேட்டி கீழே.  என்னைப் போல் திட்டாமல் நல்ல மாதிரியே கொடுத்திருக்கிறார்.  பொதுவாகவே யாரும் யாரையும் அவர் இவர் என்று குறிப்பிடுவது மரியாதைக் குறைவாகத் தெரியும் எனக்கு.  ”கார்த்திக், அப்பா வந்துட்டாரா பாரு” என்று அவந்திகா சொன்னால், ஏன் அவுரு இவுருன்னு … Read more

மொழிபெயர்ப்பு

ஒரு பெரிய மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால் அந்திமழையில் நிலவு தேயாத தேசம் முடிவதற்கு இன்னும் இரண்டு அத்தியாயங்களே எஞ்சியிருக்கும் நிலையில் அப்படியே நிற்கிறது.  இந்த மொழிபெயர்ப்பு வேலை அவசரம்.  தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் ரொம்பவும் சொதப்புகிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நான் படித்த ஆண்டாள் மொழிபெயர்ப்பில் பல முக்கியமான விடுபடல்கள் இருந்தன.  ஒரு பாசுரத்தின் அடிச்சரடான விஷயமே காணவில்லை.  அர்ச்சனா வெங்கடேசனின் The Secret Garland என்ற நூல்தான் அது.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் மிகவும் ஆர்வத்துடன் வாங்கிய … Read more

குறுங்கதை : மாரத்தானும் புத்தக விழாவும் : பிரபு காளிதாஸ்

  நேற்று 11.6.16 மாலை புத்தக விழா பின்புறம் ஓடும் சாக்கடையைத் தாண்டி இருக்கும் பார்க்கிங்கில் ஒரு இரண்டாயிரம் கார்கள் மேல் நின்றது. டூவீலர்கள் கண்ணிலேயே சிக்கவில்லை. பொதுவாக மிடில் க்ளாஸ்தானே நிறைய வருவார்கள், பணக்காரர்களும் படிக்க ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்களோ என்று சந்தேகம் வந்ததற்குக் காரணம், அங்கே நின்ற கார்கள் எல்லாமே லக்ஸுரி மாடல்கள். ஒவ்வொரு காரிலும் விலை உயர்ந்த சைக்கிள்கள் இரண்டு மூன்றை, சினிமாவில் ராஜ்கிரண் தூக்கி அடிப்பார் அல்லவா? அதே ஸ்டைலில் காரின் … Read more