எங்கே உன் கடவுள்?
பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற புத்தகத்தின் அலையில் அதோடு வந்த மற்ற புத்தகங்கள் கவனிக்கப்படாமல் போய் விட்டன போல் தோன்றுகிறது. இன்றைய தினமலரில் எங்கே உன் கடவுள்? என்ற தொகுப்புக்கான மதிப்புரை வந்துள்ளது. மதிப்புரை எழுதியவர் க.சீ. சிவகுமார். தினமலருக்கும் சிவகுமாருக்கும் நன்றி. நொச்சிக்குப்பத்தில் மீன் வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த மதிப்புரை பற்றி குறுஞ்செய்தி அனுப்பியவர் இறையன்பு ஐஏஎஸ். எங்கே உன் கடவுள் கட்டுரைகள் துக்ளக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. துக்ளக் … Read more