வைர சூத்திரத்தின் விலை

ஏற்கனவே பல முறை எழுதிய விஷயம்தான்.  மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது.  ஒரு இணைய இதழில் நான் கொடுத்த மிக நீண்ட நேர்காணலை நீங்கள் படித்திருப்பீர்கள்.  என் எழுத்து வாழ்விலேயே எனக்கு அதிக எதிர்வினைகள் வந்தது அந்த நேர்காணலுக்குத்தான்.  அதற்கு முன்பு ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையின் இணைய இதழில் கோணல் பக்கங்கள் என்ற பத்தியை எழுதியபோதுதான் அந்த அளவுக்கு எதிர்வினைகள் வந்தன.  அந்த நீண்ட நேர்காணல் ஒரு நூறு பக்க புத்தகமாக வரும்.  நூறு பிரதிகள் விற்கும்.  எனக்கு அதன் மூலம் ஆயிரம் ரூபாய் ராயல்டி கிடைக்கும்.  நேர்காணல் வந்த … Read more

அஞ்சலி: ரணஜித் குஹா (1923-2023) | ஆளப்படுபவர்களின் வரலாறு: ரவிக்குமார்

நான் அடிக்கடி வரலாற்றறிஞர் ரணஜித் குஹா பற்றி என் கட்டுரைகளில் குறிப்பிடுவது வழக்கம். அவர் சமீபத்தில் தன் நூறாவது வயதில் ஆஸ்திரியாவில் மறைந்தார். குஹா என் ஆசான்களில் ஒருவர். அவருடைய ஸபால்ட்டர்ன் ஸ்டடீஸ் இல்லாவிடில் ஔரங்ஸேப் நாவல் இல்லை. அவர் பற்றிய நண்பர் ரவிக்குமாரின் முக்கியமான கட்டுரையை இங்கே பகிர்கிறேன். நன்றி: இந்து தமிழ் திசை.

ஒடியல் கூழ்

வவுனியாவில் இரண்டு தினங்கள் தங்கிவிட்டு இப்போது யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். யாழ்ப்பாணம் போன பிறகுதான் எந்த விடுதியில் தங்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். அங்கே ஒடியல் கூழ் சாப்பிட வேண்டும் என்பது ஆசை. ஆனால் யாரைக் கேட்பது என்று தெரியவில்லை. 50 ஆண்டுகளாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் நான். யாழ்ப்பாணமும் தமிழ் பேசும் நிலம்தான். அங்கே எனக்கு ஒடியல் கூழ் கொடுக்க ஒரு ஆள் இல்லை. ரெஸ்டாரண்டில் கிடைக்குமா என்று … Read more

விருது மறுக்கப்பட்டது தொடர்பாக: பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

அன்புள்ள சாரு, இன்றுதான் தங்களுக்கு விருது மறுக்கப்பட்ட நிகழ்வை முழுமையாக அறிந்தேன். என்னைப் பொறுத்தவரையில் மூன்றாம் உலக நாடுகளின் தனித்துவமான அரசியல் சமூக நிலைமைகளை, குறிப்பாக நகரங்களில் நிலவும் பிறழ்வுகளை எழுதுவதின் வாயிலாக விவரிப்பவை மட்டுமல்ல, மிக அதிமாக சுரண்டலுக்கு உள்ளாகும் மக்களின் மத்தியில் உடலின் தன்னாட்சியை (autonomy) முன்னிறுத்தும் படைப்புகள் தங்களுடையவை. என்றாலும், ஃபாசிச எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தக் கூடியவை. குறிப்பாக மத விவகாரங்களில் தங்களது ஹை-பிரிட் தன்மை முழுக்க ஒழுங்குகள், சடங்குகளால் அன்றி, உணர்வு, இசை … Read more

சாரு விவகாரமும் நம் அனைவரின் அமைதியும்! – ஆசைத்தம்பி

சாரு விவகாரமும் நம் அனைவரின் அமைதியும்! – ஆசைத்தம்பி சாரு பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழ்ச் சூழலில் நிலவும் அமைதியைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவைப் பகைத்துக்கொண்டாலும் தமிழ்நாட்டைப் பகைத்துக்கொண்டுவிடக் கூடாது. ஒருவர் இலக்கிய மடங்களோடு நெருக்கமாகவோ தொடர்பிலோ தூரத்து உறவாகவோ, குறைந்தபட்சம் பகைத்துக்கொள்ளாமலோ இருந்தாக வேண்டும். அப்படி இல்லையென்றால் எந்த ஆதரவும் ஒருவருக்குக் கிடைக்காது. மேலும் அந்த தனிநபர் கடைசி வரை போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். சாரு விஷயத்தில் மட்டும் அல்ல. நானும் கண்டுகொண்ட விஷயம் இது. இந்த … Read more