சுயவதை

சற்று நேரத்துக்கு முன் ஒரு நண்பருக்கு ஃபோன் பண்ணினேன். அவர் குடிப்பழக்கம் இல்லாதவர். கோவாவில் இருப்பதாகச் சொன்னார். பக்கத்திலேயே மற்றும் ஒரு நண்பர் ஏதோ உயர் ரக விஸ்கி அருந்திக் கொண்டிருப்பதாக மேலதிகத் தகவலையும் கொடுத்தார். இன்னொரு நண்பருக்கு ஃபோன் பண்ணினேன். ஏற்காட்டில் இருப்பதாகச் சொன்னார். அவரும் தான் அருந்தும் பானம் பற்றிய விவரத்தை நான் கேட்காமலேயே சொன்னார். பின்னர் கோவா போன நண்பர் சற்று விவரமாகப் பேசினார். கடல் அலை அடிக்கும் ஓரத்தில் அறையாம். அங்கே … Read more

எழுத்தாளன், புனிதன், மனிதன் : ஜெயமோகன்

நேற்று (வெள்ளிக்கிழமை) சமஸ் அருஞ்சொல் நேர்காணலுக்கான கேள்விகளை அனுப்பினார். இரண்டு மணி நேரத்தில் 2000 வார்த்தைகளில் பதில்களைத் தட்டச்சு செய்து அனுப்பினேன். இன்று காலையில் ஜெயமோகனின் தளத்தைப் பார்த்தால் நேற்று நான் சமஸுக்கு அனுப்பிய பதில்கள் வேறு வார்த்தைகளில் வந்திருந்தன. ஏற்கனவே நான் பல முறை எழுதியவைதான். அவற்றையெல்லாம் நேற்று அருஞ்சொல்லுக்காகத் தொகுத்து எழுதியிருந்தேன். நேற்று ஜெயமோகனின் தளத்தில் வந்த ”பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்றல்” என்ற கட்டுரைதான் ஜெ. இதுவரை எழுதியவற்றுள் ஆக மோசமான கட்டுரை. அதை நீக்கி … Read more