கண்ணாடியெனும் நதி

தனித்து விடப்பட்ட முதல் இரவு

நான் நினைத்தது போல் அத்தனை சுகமாயில்லை

தனிமைதான் உன்னை அச்சு அசலாய்க் காண்பிக்கும் கண்ணாடி

மனிதரின் அருகமை 

உன் அனுமதியில்லாமலேயே நீ நடி

உன்னை ஏதோ ஒன்று அழுத்துகிறது

எதிர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்ட காற்று

சுவாசிக்க சிரமப்படு

சகிப்புத்தன்மையை இழந்து விட்டதாக அஞ்சு

தெளிவின்மையில் உழல்

எதன் மீதும் ஆர்வமோ பெரும் ஆசையோ இல்லாத சமநிலை

வாழ்க்கையை அலுப்பூட்டச் செய்கிறது

உணர்வுகளை வெளிப்படுத்தவில்லையென்றாலும்

கட்டுப்படுத்தாமல் உலவ விட்டால் நலம்

இவ்வுலகம்

இவ்வாறானது

மனிதர்களாலும்

பிற உயிர்களாலும்

சம்பவங்களாலும்