பஸ்ஸில் அட்டை போடும் சிறுமிகள்

டவுன் பஸ்களில் நீங்கள் ஒரு காட்சியைப் பார்க்கலாம். பஸ் கிளம்புவதற்கு ஐந்து பத்து நிமிடங்களுக்கு முன்னால் எல்லா பயணிகளின் தொடையிலும் ஒரு பத்து வயது சிறுமி ஒரு போஸ்ட் கார்டு சைஸ் அட்டையைப் போட்டு விட்டுப் போய் விடுவாள். அதில் எனக்கு அம்மா அப்பா கிடையாது, என்னால் வாய் பேச முடியாது, ஆனாலும் நான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஐயாக்களே, அம்மாக்களே, என்னை உங்கள் பெண் போல் நினைத்து எனக்குப் பண உதவி செய்யுங்கள்…

இன்னும் உருக்கமாக எழுதியிருக்கும். எனக்கு அந்த அளவு கற்பனை சக்தியும் எழுத்து வன்மையும் போதவில்லை.

என்னையும் அந்த மாதிரி ஆக்கி விட்டீர்களே ஐயா, நியாயமா இது? ஒரே வாரத்தில் இதுவரை உலகில் யாராவது முந்நூறு பக்க நாவலை எழுதியிருக்கிறார்களா? அதிலும் எப்படிப்பட்ட நாவல் என்று சொன்னேன்? என் வாழ்க்கையையே பணயம் வைத்திருக்கிறேன். என் உற்றம் சுற்றம் எல்லோரும் என்னை விட்டு ஓடி விடக் கூடிய நாவல். நான் அக்கினியில் இறங்கி எழுதியிருக்கிறேன். நாவலைப் படித்த அராத்து இப்படி ஒரு நாவலை நான் படித்ததே இல்லை என்று நள்ளிரவில் மெஸேஜ் அனுப்பினார். முந்நூறு பக்கங்களை இரண்டு மணி நேரத்தில் படித்திருக்கிறார். ஓட்டி விட்டாரோ என நினைத்தேன். இல்லை. ராம்ஜியும் அதையேதான் சொன்னார். ராம்ஜி ஒரு மணி நேரத்தில் ஐம்பது அறுபது பக்கம் படிக்கக் கூடியவர். நேற்று 150 பக்கத்தை ஒன்றரை மணி நேரத்தில் படித்தாராம். இது அவரது வாசிப்பு வேகத்தில் சாதனை என்றார். அந்த அளவுக்குப் பறக்கிறது நாவல் என்றார்.

நீங்கள் சாமியாடிகளைப் பார்த்திருக்கிறீர்களா? பேய் மாதிரி ஆடுவார்கள். சாமி வந்த பூசாரிகள். பதினைந்து ஆடுகளின் குரல்வளையைக் கடித்தே ரத்தத்தைக் குடிப்பார்கள். அப்படி ஒரு ஆட்டம் ஆடியிருக்கிறேன். என் சீலே பயணத்துக்காக வேண்டி பணம் தேவைப்படுகிறது. சும்மா கேட்கவில்லை. இந்த நாவலின் பிடிஎஃப்பை அனுப்புகிறேன் என்று எழுதினேன். என் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர் ஒருத்தர் பத்தாயிரமும் இன்னொருத்தர் இருபதாயிரமும் அனுப்பியிருக்கிறார்கள்.

ம்ம்ம்… இதே ஒரு சாமியார் கேட்டால் கொட்டிக் கொடுக்கிறார்கள். சரி, அமெரிக்காவில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்காது. ஒரு முந்நூறு டாலர் கொடுத்து இதை வாங்கினால் என்ன? சினிமாவுக்குப் போனால் இருநூறு முந்நூறு டாலர் செலவாகிறதுதானே? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சினிமாக்காரர்களின் சம்பளம் அம்பது கோடி நூறு கோடி. இங்கே எழுத்தாளர்களை இப்படி நடத்துகிறது தமிழ்ச் சமூகம். யாரையும் சொல்லிக் குற்றமில்லை. இந்த மொழியின் சாபம் அப்படி. இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறான் எழுத்தாளன்!!!

நாவலின் பெயரை மாற்றி விட்டேன். அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு

வாழ்க்கையில் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு – Charu Nivedita (charuonline.com)

பணம் அனுப்புபவர்களுக்கு நாவலின் பிடிஎஃப்பை அனுப்பி வைக்கிறேன். இதை நன்கொடை என்றே கருதுங்கள். விலை அல்ல. ஏனென்றால், இந்த நாவலில் என் வாழ்வையே உருக்கி எழுதியிருக்கிறேன். என் வாழ்வைப் பகடையாக மாற்றி உங்கள் முன்னே வீசியிருக்கிறேன். எடுத்துப் படித்துப் பாருங்கள்…

RazorPay மூலம் அனுப்பலாம். அல்லது, என்னுடைய ஐசிஐசிஐ வங்கி அல்லது ஆக்ஸிஸ் வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். விவரம் கீழே.

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai