தமிழும் மலையாளமும்

பிஞ்ஜ் செயலியில் பாராவின் தொடர்கதையும் என்னுடைய தொடரும் வருகின்றன. அவரை 1000 பேரும் என்னை 926 பேரும் இன்று காலை வரை படித்துள்ளனர். தன் தொடருக்கு வாராவாரம் விமர்சனம் எழுதுபவர்களுக்கு தொடர் முடிந்து விருந்து கொடுப்பதாக எழுதியிருக்கிறார் பாரா. இதற்குப் போட்டியாக என்ன செய்யலாம் என்றால் படிப்பவர் அத்தனை பேருக்குமே ஒரு பாட்டில் ரெமி மார்ட்டின் கொடுக்கலாம். பணத்துக்குத்தான் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் கேரளத்தில் என்ன நிலைமை தெரியுமா? பென் யாமின் எழுதின ஆடு ஜீவிதம் … Read more

அ-காலம்

பின்வரும் பிஞ்ஜ் செயலியில் அ-காலம் என்ற தொடரை எழுதி வருகிறேன். என்னுடைய நெருங்கிய நண்பர்களே யாரும் அந்தத் தொடரைப் படிக்கவில்லை என்று தெரிந்தது. இன்னும் நானே படிக்கவில்லை. நான் எழுதியதை நான் கண் கொண்டும் பார்க்க மாட்டேன் என்றாலும் இந்த செயலி ஒரு புதிய தொழில்நுட்பம் என்பதால் சற்றே ஆர்வம் ஏற்பட்டது. என்னுடைய ஐஃபோனில் இந்த செயலி இன்னும் செயல்படத் தொடங்கவில்லை. ஆனால் ஆண்ட்ராய்ட் போனில் இந்தச் செயலி வருகிறது. ஸ்ரீராம் படித்து விட்டார். அவரைத் தவிர … Read more

தாலியறுத்தான் கதை

(எச்சரிக்கை: இந்தக் கதையின் மாடல் ஏற்கனவே எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலிலும் எக்ஸைல் நாவலிலும் வந்துள்ளது.  கதாபாத்திரத்தின் பெயர் தனபால். தனபால் மிக இளம் வயதில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டவன்.  பாப்பாத்தியம்மாள் சாராய பாட்டில்களைக் கடத்தும் போது இவனும் கூடப் போனதால் இவன் சிறுவர் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.  அவன் சொன்ன கதைகளே இதில் வந்துள்ளன.  அவன் சொன்ன கதைகளை நான் அந்த நாவல்களில் சேர்க்கவில்லை.  எல்லாம் 55 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.  அந்த … Read more

மூவரின் வாசகர்கள் (Revised version)

இந்தப் பதிவை என்னுடைய வாசகர் வட்ட நண்பர்கள் பலரும் ரசிக்க மாட்டார்கள்.  அதேபோல் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களும் ரசிக்கப் போவதில்லை.  இருந்தாலும் எனக்குத் தோன்றுவதை எழுதித்தானே ஆக வேண்டும்.  வேறு வழியில்லை.  என்னுடைய மிகத் தீவிரமான வாசகர்கள் பலர் என்னுடன் நெருக்கமான நட்பில் இருப்பவர்கள்.  விசேஷ காலங்களில் எனக்குப் புது வேட்டி சட்டை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு நெருக்கம்.  அதே சமயம் மதத் தீவிரவாதியின் பிடிவாதத்தோடும் உறுதியோடும் ஏதாவது ஒரு நடிகருக்கு ரசிகராகவும் இருப்பார்கள்.  ரசிகர் … Read more

என் தேர்தல் கணிப்பு

என் தேர்தல் கணிப்பு: திமுகவுக்கு 190 இலிருந்து 200 வரை இடங்கள் கிடைக்கும். அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்காதிருந்தால் இன்னும் கூடுதலான இடங்களைப் பெற்றிருக்கலாம். ஸ்டாலினுக்குக் கூட்டல் கழித்தல் தெரியாது, யாகாவாரயினும் நா காக்க என்ற குறளையெல்லாம் நாப் பிறழாமல் சொல்ல வராது என்பதெல்லாம் முதல்வராக அமர்வதற்கான தகுதிக் குறைவு என்று நான் நினைக்கவில்லை. முதல்வர் பதவி என்பது கலெக்டர் வேலை அல்ல. கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை விட ஸ்டாலின் … Read more

தேர்தலில் யாருக்கு வாக்கு அளிக்கலாம்?

அன்புள்ள சாரு‌ ஐயா: தங்களின் எளிய வாசகன் நான்.  அரசியல் பற்றிய இந்த கேள்வி உங்களுக்கு சிரமத்தை அளித்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இன்னும் நான்கு  நாட்களில் தேர்தல் வர இருப்பதால் உங்கள் பதில் தமிழ் நாட்டு மக்களுக்கு  ஒரு தெளிவான சிந்தனையை வழங்கும் என மிக ஆழமாக நம்புகிறேன்.முக்கியமாக உங்கள் வாசகர்களுக்கு.தாங்கள்  உட்பட எல்லோரும் தங்களுக்கு விருப்பமான கட்சியை இதுவரை தேர்வு செய்து வைத்திருப்பார்கள்,பல பேர் ஒரே கட்சிக்காக வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து வாக்களிப்பார்கள்,அந்த ரகம் … Read more