Pleasure of the Text
இடம் சார்ந்து எனக்கு எவ்வித நாஸ்டால்ஜிக் உணர்வுகளும் இல்லை. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று காலை அருண்மொழி நங்கையின் சின்னச் சின்னப் புரட்சிகள் என்ற படைப்பைப் படித்து விட்டு என்னைப் பற்றி நான் அப்படி நினைத்துக் கொண்டிருந்தது தவறு எனத் தோன்றியது. அல்லது, இதுவரை எந்த எழுத்தும் இப்படி எனக்குள் கீழத்தஞ்சை மண் பற்றிய உணர்வுகளைக் கிளர்த்தியது இல்லை. இப்படியெல்லாம் சொன்னால், இது ஏதோ ஊர் பற்றிய நினைவுக் குறிப்பாகக் குறுகி விடும் அபாயம் இருக்கிறது. அப்படியும் … Read more