பூச்சி 127: பாஸ்டனில் இட்லி கிடைக்குமா?

அப்பா, பூச்சி 125 படித்தேன். ஒருசில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. பிஸ்கட் பற்றி எழுதியிருந்தீர்கள். இப்போது கொஞ்சம் பத்தியத்தைக் கடைபிடிப்பதால் இங்கே நான் பிஸ்கட் (அமெரிக்காவில் குக்கீஸ்) சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறேன். நீங்கள் இன்று ஞாபகப்படுத்திவிட்டீர்கள். இந்தியாவிலே எனக்கு இரண்டே இரண்டு குக்கீஸ்தான் பிடிக்கும்: அவற்றுள் இரண்டாம் இடம் குன்னூரில் கிடைக்கும் பட்டர் பிஸ்கட். நீங்கள் சொன்னதுபோல உப்பு பிஸ்கட்தான். குன்னூரில் இந்தியன் பேக்கரியில் கிடைக்கும் பிஸ்கட்டை பெருமளவில் புகழ்வார்கள். ஆனால் பெட்ஃபோர்டுக்கு அருகில் குறுகிய சந்து … Read more

முன்னோடிகள் 25: பெரியோரைப் புகழ்தலும் இலமே…

ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றிய உரை சிறப்பாக முடிந்தது.  இந்த இரண்டு தினங்களில் மூவாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள்.  நல்ல எண்ணிக்கை.  இதுவே கட்டண உரை என்றால் இவ்வளவு பேர் பார்க்க வாய்ப்பு இல்லை.  ஆனாலும் நம்முடைய மாதாந்திர ஸூம் சந்திப்புகள் மகத்தான வெற்றி என்றே சொல்ல வேண்டும்.  எந்த நேரத்தில் வைத்தாலும் நூறு பேர் வந்து விடுகிறார்கள்.  ஆனால் அந்தப் பேச்சை ஏதோ கொஞ்சம் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் மேலும் ஒரு பத்து இருபது … Read more

பூச்சி 126

வணக்கம்.  என்னை உங்களுக்கு தெரியாது. உங்களது பேச்சுக்களை கேட்டு புத்தகங்களையே வாசித்திராதவன். எனக்கு 16வயது. நீங்கள் எனக்கு ஷ்ரூதி டிவி காணொலிகளின் மூலம் அறிமுகமானவர். இலக்கியத்தை பற்றி நான் உங்களிடமிருந்து தான் தெரிந்து கொண்டேன். கீழுள்ள சிறுகதை நான் எழுதியது தான்.அடியேன் உங்களை வாசிக்கச்சொல்லி வற்புறுத்தவில்லை!… இலக்கியம் என்று தவறாக கற்பிக்கப்படுவதன் சித்தரிப்பே இச்சிறுகதை.இலக்கிய பிழைகள் இருப்ந்தால், அடியேன் ஒரு 11ஆம் வகுப்பு மாணவன் என நினைவில் கொள்ளுங்கள். *** இப்படி ஒரு கடிதம்.  கடிதத்தோடு சிறுகதை.  … Read more

மயிர்க் கூச்செறிதல்: சிறுகதை: அராத்து

இரவு திடீரென விழிப்பு வரும்போதெல்லாம் வஞ்சுளாவுக்கு போன் அடித்துப் பார்ப்பது   வழக்கமாகிப் போயிருந்தது செல்வேந்திரனுக்கு. இப்போதும் ரெஸ்ட் ரூமில் அமர்ந்து மொபைலில் மெசேஜ்களை கழித்துக் கொண்டிருந்தான். மூன்று நாட்களுக்கு முன் அவளிடம் இருந்து வந்த மெசேஜ் தான் கடைசி.  அதற்கு பதில் அனுப்புவதற்குள் ஆஃப்லைன் போனவள்தான்… பிறகு வரவேயில்லை. “எனக்கு கொரோனா பாஸ்டிவ் டா.“ இதுதான் கடைசி மெசேஜ். வஞ்சு வஞ்சு என பாத்ரூமில் அமர்ந்தபடியே மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தான் செல்வேந்திரன். செல்வேந்திரனுக்கு வஞ்சுள வல்லியின் வேறு … Read more

பூச்சி 125 : இரண்டு சொற்கள்

திங்கள்கிழமை பரீட்சையாக இருக்கும், ஞாயிற்றுக்கிழமை தண்ணி அடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் கும்பல்.  நான் பார்த்த ஸ்ரீரங்கம் அப்படி.  அப்படித் தண்ணி அடித்தவர்கள் அனைவரும் இப்போது இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்களில் மூன்று லகரம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அவ்வப்போது முகநூலிலும் விமர்சனம் எழுதி தமிழின் தலை சிறந்த விமர்சகர் என்ற விருதும் வாங்குகிறார்கள்.  அவர்கள் கல்லூரிப் பாடப் புத்தகங்களைத் தொட்டது கூட இல்லை.  எல்லாம் வகுப்பில் கேட்டதுதான்.  அதை வைத்தே டிஸ்டிங்ஷன்.  எல்லாம் அய்யங்கார் மூளை.  இப்படிச் சொன்னால் … Read more

பூச்சி – 123

ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.  அவருடைய மண்ணில் தெரியுது வானம் நாவலை சுமாராக இருபது லட்சம் பேர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.  அந்த நாவலைப் படித்தவர்கள் அதற்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி இருக்க முடியாது.  அவர்களது வாழ்வியல் கண்ணோட்டத்தில் ஒரு சிறிதளவு மாற்றத்தையாவது கொண்டு வரக் கூடிய மந்திரஜாலத்தைக் கொண்ட ஒரு நாவல் மண்ணில் தெரியுது வானம்.  நாவல் தலைப்பின் அர்த்தம் உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான்.  இந்த பூலோகத்திலேயே … Read more