வாசிப்பும் மிருக நிலையும் ஒரு சிறிய பிரார்த்தனையும்…

சாரு, உங்கள்சகஎழுத்தாளர்———————— நீங்கள்அ.மியைவிமர்சித்ததற்கு  உங்களைஅவர்கடுமையாகவிமர்சனம்செய்திருக்கிறார். நீங்கள்ஏன்அதற்குபதில்சொல்லவில்லை?. பிறகு, நீங்கள்எப்போதும்ஜெயமோகனைவிமர்சனம்செய்துஎழுதுகிறீர்கள். ஒருபத்திக்கூடஅவர்பெயரையைகுறிப்பிடாமல்உங்களால்எழுதமுடியவில்லை. ஆனால்அவரோஉங்களைகண்டுக்கொள்ளுவதேயில்லை. அவர்உயர்ந்துபோயிக்கொண்டேயிருக்கிறார். உங்கள்நோக்கம்என்ன?. அவரைதிட்டினால், உடனேஅவர்உங்களைதிட்டுவார். அதன்மூலம்விளம்பரம்தேடிக்கொள்ளலாம்என்றுநினைக்கிறீர்களா?.  இதுஇயல்புதான். ஏன்என்றால் அவர்தான் இன்றுஇலக்கியஉலகில் எல்லோராலும்கொண்டப்படுகிறார். நீங்கள்செய்வதைப்பார்த்தால்எனக்குஒருபழமொழிதான்ஞாபகம்வருக்கிறது. சூரியனைப் பார்த்து நாய்குரைத்தால்……. வருண் varunsaran769513@gmail.com தம்பி வருண், வாசிப்பு ஒரு மனிதனை எந்த அளவுக்கு மிருகமாகவும் ஆக்கக் கூடும் என்று உன் கடிதத்திலிருந்து புரிந்து கொள்கிறேன்.   துவேஷம் ஒரு நோய்.  அந்த நோய் உனக்கு அதிகபட்ச தீமைகளைக் கொடுக்கும்.  அப்படிப் பார்க்கும் போது நீ தான் உனக்கே சத்ருவாக … Read more

இமயம் (12)

சாரு..இசையைரசியுங்கள்…வேண்டாம்என்றுசொல்லவில்லை.. ஆனால்தயவுசெய்துஇப்படிபகிராதீர்கள்… நீங்கள்செய்வதைஎல்லாம்தானும்செய்ய முயன்றுபார்க்கும்உங்கள்தலைமைச்சீடரான உத்தமத் தமிழ் எழுத்தாளர், இமயமலைப்பயணம்மேற்கொள்ளபோகிறாராம்…அதுஅவரது தனிப்பட்ட விஷயம்… பரவாயில்லை.. ஆனால்இசையைப்பற்றிநீங்கள்எழுதவதைப்பார்த்து , அவரும்இசைகளின்வழியேஎன்றோஅல்லது இசையின்ஊடாகதத்துவதரிசனம்என்றோஎழுதஆரம்பித்தால்தமிழகம்தாங்காது… பிச்சைக்காரன் அன்புள்ள பிச்சை, என்னுடைய தலைமைச் சீடரை நான் அங்கீகரிக்கவில்லை.  சகுனி யாரைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான் என்பது உங்களுக்குத் தெரியும்.  உ.த.எ.வுக்கு இயங்கு சக்தியாக இருப்பதே என் எழுத்தும் செயலும்தான் என்கிற போது சந்தோஷம்தான் ஏற்படுகிறது.  ஆனால் பரிதாபமும் ஏற்படுகிறது.  என்னென்னவோ கண்றாவி கதைகளைப் படித்துக் கொண்டு, எங்கெங்கோ போய் தங்கியதற்கான அறை … Read more

இவன் என்ன மனிதனா தெய்வமா, தயவு செய்து சொல்லுங்கள்…

என் வீட்டிலிருந்து பத்து நிமிடம் நடந்தால் மெரினா கடற்கரை வரும்.  அங்கே ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து என் மடிக் கணினியில் தட்டிக் கொண்டிருக்கிறேன்.  இந்த இசையை மிகுதியான சப்தத்தில் தான் கேட்க வேண்டும்.  ஆனால் என் மடிக் கணினி என்னைப் போலவே ஒரு நோஞ்சான்.  ஆனாலும் இவன் என்னைக் கொல்லுகிறான்.  இவன் மனிதனா, தெய்வமா… http://www.youtube.com/watch?v=GWtUvWO-Qv0 Dire Straits குழுவின் பிரதான பாடகன் இவன்…

madness and art…

பித்தநிலையைக் கலையாக மாறுவது பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறேன்.  எல்லாவற்றுக்கும் சட்டைப் பாக்கெட்டில் பதில்கள் வைத்துக் கொண்டிருக்கும் புத்திஜீவிகளால் இந்த நிலையைப் புரிந்து கொள்ள முடியாது.   stairway to heaven என்ற இந்தப் பாடலைக் கேளுங்கள்.  நான் பல ஆண்டுகளாக இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  என் நாடி நரம்புகளுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் பாடல் இது.  நூறு மிகச் சிறந்த ராக் பாடல்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது.  கிடாரில் ஒரு ரகளையே நடந்திருக்கும், கேளுங்கள்.  Led Zeppelin குழு. … Read more

அற்புதம்… ஆனந்தம்… கடவுளின் உரையாடல்…

http://www.youtube.com/watch?v=6jxsnIRpy2E இமயமலை புகைப்படங்களை வாசகர் வட்டத்தில் பதிவு செய்து கொண்டிருந்த போது நான் எப்போதோ எழுதியதை எடுத்து வட்டத்தில் போட்டிருந்தார்  செல்வகுமார்.  வட்டத்தை ஆக்கபூர்வமாகக் கொண்டு செல்பவர்களில் அவர் ஒருவர்.  எனக்கே இது புதிதாக இருந்தது.  இமயத்தைப் பார்க்கும் போதெல்லாம் பரிபூர்ணமாக என் ஆன்மாவில் ஒரு வித இசை ஓடிக் கொண்டிருந்தது. தருண் தேஜ்பாலில் valley of masks என்ற நாவலை அப்போது படித்துக் கொண்டிருந்தேன்.  இப்போது சொல்கிறேன்.  குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  அந்த நாவலுக்கு Asian … Read more

இமயம் (11)

சில புகைப்படங்கள் மட்டும் இப்போது.  இவை பற்றி நாளை எழுதுகிறேன்.  புகைப்படங்கள்: கணேஷ்.இதில் கூடாரங்கள் இருக்கும் இடம் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன்.  இது தான் லஹௌல் பகுதியின் மரண வெளி.  இங்கே ஒரு இரவு தங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.  நாங்கள் இங்கே ஒரு இரவும் ஒரு பகலும் தங்கினோம்.