நிலவு தேயாத தேசம் – 28

துருக்கியைக் காட்டிலும் இந்தியா ஏழை நாடு. ஆனால் இந்தியாவில் அந்த ஹூசுன் இல்லை. இங்கே எல்லாவிதமான பிரச்சினைகளும் இருந்தன, இருக்கின்றன. வறுமையால் தற்கொலைகூட செய்துகொள்கிறார்கள். ஆனால் ஹூசுன் இல்லை. ஏனென்றால், இங்கே இருக்கும் பிரச்சினைகள் தூலமானவை (physical). எத்தனைதான் பிரச்சினை என்றாலும் முனீஸ்வரனுக்கு சாராயத்தைப் படைத்துவிட்டு ஒரு ஆட்டத்தைப் போட்டால் மறுநாளின் துயரத்துக்கான வலு கிடைக்கும். ஆனால் ஐரோப்பா அப்படி இல்லை. அந்த பூமியின் மீது நூற்றாண்டுகளாய்க் கவிந்து கொண்டிருக்கும் பனியைப் போல் கவிகிறது அவர்களின் துயரம். … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 8

விமரிசனம் தவிர்த்து செல்லப்பா செய்த மற்ற இரண்டு காரியங்கள் தமிழ் உள்ளளவும் நிலைத்து நிற்கக் கூடியவை. புனைகதையில் அவர் செய்த சாதனைகளைத் தவிர்த்துவிட்டுச் சொல்கிறேன். பண்டிதர்களுக்கும், ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கும், ஜனரஞ்சக எழுத்தாளர்களுக்கும், முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் எதிராக ஒற்றை மனிதராக, கிட்டத்தட்ட ஒரு கெரில்லா போராளியைப் போல் போராடியிருக்கிறார் செல்லப்பா. அந்த வகையில் இன்றைய தினம் இலக்கியவாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் அந்த மகத்தான மனிதருக்கே கடமைப்பட்டிருக்கிறார்கள். ‘எழுத்து’ என்ற பத்திரிகை மூலம் அவர்தான் சமகால இலக்கியத்துக்கான … Read more

சீரழிவுக் கலாச்சாரம் – ஜி.கார்ல் மார்க்ஸ்

முகநூலில் ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதியது: எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வந்துவிட்டன. பிரச்சாரம் முழுவேகத்தில் நடக்கிறது. உண்மையான களப்பணியை ஒவ்வொரு கட்சியும் இனிதான் தொடங்கும். அது என்ன களப்பணி? வேறென்ன.. வாக்குக்கு பணம் கொடுப்பதுதான். இந்த தேர்தலில் ‘வாக்குக்குப் பணம்’ தரும் விவகாரம் எளியமக்களின் விவாதமாகக் கூட மாறியிருக்கிறது. தமிழகத்தில் இதொன்றும் புதிதல்ல. ஆனால், இதற்குப் பின்னுள்ள ‘சீரழிவுதான்’ முக்கியம். ‘வாக்குக்குப் பணம்’ என்பதை நாம் ஏன் அவமானமாகக் கருதுவதில்லை? இந்த மன மாற்றத்திற்குப் பின்னால், அரசியல் … Read more

நிலவு தேயாத தேசம் – 27

Mavi Gözlü Dev என்பது படத்தின் பெயர்.  ஆங்கிலத்தில் The Blue Eyed Giant.  திரும்பத் திரும்ப எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும் அந்தப் படம் வெறும் சினிமா அல்ல; நாஸிம் ஹிக்மத் என்ற மகா கவிஞனின் வாழ்க்கை.  என்னுடைய சினிமா அனுபவத்தில் இப்படி ஒரு அற்புதமான படைப்பைப் பார்த்ததில்லை என்றே சொல்லலாம்.  துருக்கி பற்றி அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய ஒரு படம் இது.  மட்டுமல்லாமல் எழுத்து … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 7

பெண்களின் வாழ்வை இலக்கியமாக்கியதில் தி.ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோரைப் போலவே சிகர சாதனை செய்திருக்கிறார் சி.சு.செல்லப்பா. தமிழ் தெரிந்த அத்தனை பெண்களும் படித்தே ஆக வேண்டிய ஒரு நவீன காவியம் ‘ஜீவனாம்சம்.’ மேலும் படிக்க: bit.ly/1TdwWx7