ஒரு நாவல் – ஒரு லட்சம் பரிசு*

ஜீரோ டிகிரி – தமிழரசி அறக்கட்டளை இணைந்து நடத்தும் நாவல் போட்டிக்கு உங்கள் நாவலை அனுப்பக் கடைசித் தேதி செப்டெம்பர் 15, 2021.

விதிமுறைகள்:

1) குறைந்த பட்சம் 30000 – அதிக பட்சம் 35000 சொற்களுக்கு மிகாதிருக்க வேண்டும்

2) யுனிகோடில் டைப் செய்து வேர்ட் டாகுமெண்டாக மட்டும் அனுப்ப வேண்டும்.

3) ஒருவர், ஒரு நாவலை மட்டுமே அனுப்பலாம்

4) அனுப்பும் முகவரி: zerodegreeaward@gmail.com

5) நாவல், சொந்தக் கற்பனையே, இதற்கு முன் வேறெங்கும் பிரசுரமானதில்லை என்னும் உறுதிமொழிக் கடிதம் இணைக்கப்பட வேண்டும்

6) போட்டி முடிவு அறிவிக்கப்படும்வரை வேறு யாருக்கும் நாவலை அனுப்பக்கூடாது

7) தேர்வாகும் நாவல்களின் நெடும்பட்டியல் அக்டோபர் 15 அன்று வெளியிடப்படும்.

8.அதிலிருந்து 5 நாவல்களின் குறும்பட்டியல் தேர்வு செய்யப்பட்டு நவம்பர் 15 அன்று வெளியிடப்படும்

9) அதிலிருந்து ஒன்று சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு ஒரு லட்சம் பரிசுக்குரியதாக அறிவிக்கப்படும்

10) பரிசு பெற்ற நாவலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் மூலமாக வெளியாகும்.

11) இறுதிச் சுற்றுக்கு வருகிற ஐந்து நாவல்களையும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் பிரசுரிக்கும்

எழுத்தாளர்கள் அனைவரையும் இப்போட்டியில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம்.

ஜீரோ டிகிரி பப்ளிஷிங்