நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன்?

நீங்கள் ஏன் மோடி ஆதரிக்கிறீர்கள் என்று கேட்டு தினமும் எனக்குக் கடிதங்கள் வருகின்றன.  விரைவில் சொல்கிறேன் என்றே பதில் சொல்லி வந்தேன்.  எக்ஸைல் எடிட்டிங் வேலை இருந்ததால் விரிவாக எழுத முடியவில்லை.  சவூதியிலிருந்து என் நண்பர் கார்ல் மார்க்ஸ் கூட கேட்டிருந்தார்.  இப்போது என் பதில் தினமலர் தேர்தல் களம் என்ற பகுதியில் விரிவாக வந்துள்ளது.  படித்துப் பாருங்கள். 3000 சீக்கியர்களை organised ஆகக் கொன்றார்கள் தில்லி காங்கிரஸ்காரர்கள்.  கொன்றது மக்கள் அல்ல.  ஆனால் காங்கிரஸை ஆதரித்தால் தப்பு இல்லை என்கிறார்கள் இந்திய புத்திஜீவிகள்.  யு.ஆர். அனந்தமூர்த்தி மோடிக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.  ஆனால் 3000 சீக்கியர்களின் படுகொலைக்குக் காரணமாக இருந்த காங்கிரஸை ஆதரித்தால் அவர் மதவாதி இல்லை.  மோடியை ஆதரித்தால் மதவாதி.  என்ன லாஜிக் இது?  சரி, இன்றைய தினமலர் கட்டுரையைப் பாருங்கள்…

Comments are closed.