நான்தான் ஔரங்ஸேப்…

பல தினங்களாக இங்கே வரவில்லை. ஒரு வாரம் படப்பிடிப்பு.  மற்ற தினங்களெல்லாம் இரவு பகலாக ஔரங்ஸேப் செப்பனிடும் பணி.  இன்று வரை 400 பக்கங்களை செப்பனிட்டிருக்கிறேன்.  நாலு பேர் படிக்கிறார்கள்.  இதில் ஒருவர் அசுரன்.  அனுப்பினால் அரை நாளில் திருப்பி அனுப்பி விடுகிறார்.  நூறு நூறு பக்கமாக அனுப்புகிறேன்.  நூறு பக்கத்தை எப்படி ஒருவர் அரை நாளில் திருத்தம் செய்ய முடியும்.  செய்கிறார்.  இன்னும் 650 பக்கம் வரலாம்.  மொத்தம் 1,60,000 வார்த்தைகள் உள்ளன.  அநேகமாக அடுத்த மாத மத்தியில் பதிப்பகத்திடம் கொடுத்து விடுவேன்.