க்ளப் ஹவுஸ் கதை நேரத்தில் என் வாசிப்பு

ஃபாத்திமா பாபு கடந்த 298 நாட்களாகத் தொடர்ந்து க்ளப் ஹவுஸில் தமிழ்ச் சிறுகதைகளை வாசித்து வருகிறார். சாதனை என்ற சொல்லெல்லாம் சாதாரணம். அசாத்தியமான விஷயம். நாளை மறுநாள் சனிக்கிழமை 300ஆவது நாள். அந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் ”உங்கள் கதையை நீங்களே படித்தால் என்ன?” என்று கேட்டார். அது அவரது பெருந்தன்மையும் அன்பும். கரும்பு தின்னக் கூலியா? விரைவில் வெளிவர இருக்கும் நான்தான் ஔரங்ஸேப் நாவலில் பாபரின் பேருரை ஒன்று வருகிறது. அதைப் படிக்கலாம் என்று முடிவு செய்தோம். 4 ஜூன் 2022. க்ளப்ஹவுஸ். பாபரின் பேருரையை நான் வாசிப்பது தவிர ஃபாத்திமா பாபுவும் என் கவிதைகள் சிலவற்றைப் படிப்பார். இரவு 8.50க்கு. வரும் சனிக்கிழமை.