.பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன் சாரு…

என்னுடைய வாசகர்களில் 90 சதவிகிதம் பேர் மாணவர்கள் தான்.  சில தினங்கள் முன்பு கணேஷ் அன்புவுடன் பெலிட்டா உணவகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தந்தையின் வயது 58 என்று சொன்னார்.  ஓ, என் வயதை விட மூன்று வயது சின்னவரின் மகன் என் நண்பர்.  என்னை இவர்கள் அனைவரும் சாரு என்று பெயர் சொல்லியே அழைக்கின்றனர்.  இதைப் பற்றியெல்லாமா பீற்றிக் கொண்டிருப்பது, செய்வதற்கு எத்தனையோ உருப்படியான வேலைகள் இருக்கின்றன என்று நினைப்பேன்.  இப்போதுதான் இதையெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.   என்னுடைய பிறந்த நாளான டிசம்பர் 18 அன்று என்னைச் சந்திக்க வேண்டும் என்று ரூபன் பிரகாஷ் என்ற வாசகர் எழுதியிருந்தார்.  நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்ட போது  பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் வருடம் படிக்கிறேன் என்று எழுதியிருக்கிறார்.  அதோடு இன்னொரு கடிதமும்.

dear charu ,iam very happy thank u it is a dream for me to meet u
again tak care of ur health we need u and ur writing for many years to
come.
with love
rubpan prakash