ஜனவரி 9, புத்தக வெளியீட்டு விழா

ஜனவரி 9, சனிக்கிழமை அன்று மாலை ஆறரை மணிக்கு நடக்க இருக்கும் என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில்  எடிட்டர் லெனினும், மனுஷ்ய புத்திரனும், சமஸ்-உம் கலந்து கொண்டு பேசுவதற்கு சம்மதித்திருக்கிறார்கள்.  எடிட்டர் லெனின் என்னுடைய துக்ளக் கட்டுரைகள் பற்றியும், சமஸ் அந்திமழையில் வெளிவந்த அறம் பொருள் இன்பம் என்ற கேள்வி பதில் தொகுப்பு பற்றியும், மனுஷ்ய புத்திரன் எக்ஸைல் பற்றியும் பேச இசைந்துள்ளார்கள்.  என்னைத் திட்டிக் கொண்டிருக்கும் அன்பர்கள் உடனடியாக இந்த மூவரையும் தொடர்பு கொண்டு என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவர்கள் கூட்டத்துக்கு வருவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிக்கலாம்.