விழா பதிவுகள் – 28

அழகிய சிங்கர் முகநூலில்:

சாருநிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு அசோகமித்திரன், வைதீஸ்வரன் சகிதமாக சென்றிருந்தேன். சாருநிவேதிதா அக் கூட்டத்தில் ஒன்று சொன்னார். எழுத்தாளர்களை நாம் யாரும் கொண்டாடுவதில்லை என்று. அவர் சொன்னது உண்மையான வார்த்தை. சாரு இன்னொன்று சொன்னார். எழுத்தைத் தவிர நான் வேறு எதுவும் யோசிப்பதில்லை என்று.

கவிஞர் வைத்தீஸ்வரன், அ.மி., எஸ்.ரா., அம்ஷன் குமார்

கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன், அசோகமித்திரன், எஸ்.ரா., அம்ஷன் குமார்

asokmitran

அசோமித்திரன், அழகிய சிங்கர், ஓவியர் ஸ்ரீனிவாசன்

உண்மையில் நான் பழகிய பல நண்பர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அசோகமித்திரனை எடுத்துக் கொண்டால், புத்தகம் படிப்பது, கதை எழுதுவது, கட்டுரை எழுதுவது என்று பல ஆண்டுகளாக செய்து கொண்டு வருகிறார். ஞானக்கூத்தன் கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது, கவிதைகளைப் பற்றி சிந்திப்பது என்றுதான் இருப்பார். இப்படி எனக்குத் தெரிந்து பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து சாரு நிவேதிதா இந்த விஷயத்தில் இன்னும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

முழுக் கட்டுரை:

https://www.facebook.com/chandramouli.azhagiyasingar/posts/922259841176821

 

புகைப்படங்கள்: பிரபு காளிதாஸ்