பழுப்பு நிறப் பக்கங்கள் : சி.சு. செல்லப்பா – 3

செல்லப்பா தன்னுடைய படைப்பிலிருந்து ஒரு பகுதியைப் படிக்க ஆரம்பித்தார். (சுதந்திர தாகம்தான் என்று இப்போது தோன்றுகிறது.) முதுமையின் காரணமாக அவரால் ஒரு வாக்கியத்தைக் கூட சரிவரப் படிக்க முடியவில்லை. அங்கே இருந்த 25 பேரில் ஒருவருக்கும் அவர் படிக்கும் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. எல்லோரும் ஙே என்று விழித்துக் கொண்டிருந்தபோது நான் குறுக்கிட்டு (எப்போதுமே களப்பலி அடியேன்தான்!) வேறு யாராவது படிக்கட்டுமே, எங்களுக்கும் புரியும் என்றேன். முடியாது என்று மறுத்துவிட்டு அவரே படித்தார். எல்லோரும் ‘ஙே’. ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு இப்போது சட்டசபையில் முதல்வர் பேசும்போது ஒவ்வொரு வாக்கியம் முடிவுறும் போதும் அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டுவது போல் நான் மேஜையைத் தொடர்ந்து தட்ட ஆரம்பித்தேன். அவரும் நீ பாட்டுக்குத் தட்டு, நான் பாட்டுக்குப் படிக்கிறேன் என்று படித்துக்கொண்டே இருந்தார். அவர் செய்தது சுத்த அராஜகமாக இருந்ததால் நானும் தட்டுவதை நிறுத்தவில்லை. ஐந்து நிமிடம் தட்டி விட்டு கை வலித்ததால் அறையை விட்டு வெளியேறிவிட்டேன். ஒரே ஒருவரின் பிடிவாதத்துக்காக 25 பேர் ஒரு சடங்கைப் போல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்ததன் அபத்த உணர்வு நீண்ட காலம் என்னிடம் தங்கியிருந்தது.

மேலும் படிக்க:

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/04/03/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AF%81.-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3/article3359645.ece