என் கஸின் திஹார் ஜெயிலில் இருக்கிறான்…

வளைகுடா நாடுகளில் வசிக்கும் என் நண்பர்களிடம் நீங்கள் வசிக்கும் நாட்டை சுற்றிப் பார்த்தீர்களா என்று கேட்கும் போது எல்லோரும் ஒரே பதிலைத் தருவதையே பார்த்திருக்கிறேன்.  இங்கே பாலைவனத்தில் பார்க்க என்ன இருக்கிறது?

நண்பர்களின் இந்தக் கேள்வியைப் பற்றி இஸ்தாம்பூலில் அபிநயாவை மீண்டும் எதேச்சையாகப் பார்த்த போது யோசிக்க நேர்ந்தது.  ஒரே நிறுவனம், ஒரே இடத்துக்குப் பயணம் என்பதால் முதலில் சந்தித்த பயணிகளையே மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஊர்களில் சந்தித்துக் கொண்டிருந்தோம்.  என் பயணக் குழுவைச் சேர்ந்தவர்கள் வேறு திசையில் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு கடைசியாக இஸ்தாம்பூல் வந்து சேர்ந்திருந்தார்கள்.  எனக்கும் அபிநயாவுக்கும் மீண்டும் மூன்று தினங்கள் இஸ்தாம்பூலில் தங்கக் கிடைத்தன.  இந்தியாவுக்கும் ஒரே விமானத்தில் கிளம்புகிறோம் என்பதால் மீண்டும் மஸ்கட் (ஓமன் தலைநகர்) விமான நிலையத்தில் எட்டு மணி நேரம் தங்க வேண்டியிருந்தது பற்றி யோசித்தோம்.  பேசாமல் ஓமனுக்கு வீஸா எடுத்துக் கொண்டு நாலைந்து நாள் ஓமனைச் சுற்றி விட்டு ஊர் திரும்பலாமா என்று கேட்டேன்.

மஸ்கட்டில் அபிநயாவின் உறவினர்கள் வேறு இருப்பதாகச் சொன்னார்.  அப்போது நான், ”நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் ஒன்று சொல்லலாமா?” என்றேன்.

”சொல்லுங்கள்.”

“பிராமணர்களுக்கு உலகம் பூராவும் உறவினர்கள் இருக்கிறார்கள்.”

“உண்மைதான்.  நியூ ஜெர்ஸியிலேயே நூறு பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  இன்னும் நீங்கள் என்னென்ன ஊர் சொல்கிறீர்களோ அங்கெல்லாம் ஒரு உறவு இருக்கிறது.  எங்கள் குடும்பமே உலகத்தை ஒரு க்ளோபல் வில்லேஜாக மாற்றி விட்டது என்று என் அப்பா அடிக்கடி சொல்வார்.  ஆஃப்ரிக்காவின் Djibouti-யில் கூட என் கஸின் ஒருத்தன் இருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்…”

”ஆஹா…  என்ன ஒரு குடும்பம்.  ஆனால் என் உறவினர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் செங்கல்பட்டைக் கூடத் தாண்டியிருக்க மாட்டார்கள். என் கஸின் ஒருத்தன் திஹார் ஜெயிலில் இருக்கிறான்.”

மீதியைப் படிக்க:

http://andhimazhai.com/news/view/charu23020416.html#sthash.mqVOyCLk.dpuf

http://www.jokha.com/img/drjokha.png