ஜெய் பாகுபலி : கார்ல் மார்க்ஸ்

30.04.2017

கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியது:

ராணி நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். சாவில் மர்மம் இருப்பதாக மக்கள் முணுமுணுக்கிறார்கள். ராணியின் தோழியை தனிமைச் சிறையிலடைக்கிறான் எதிரி நாட்டு மன்னன். ஆளற்றுக் கிடக்கும் அரண்மனையின் காவலாளியை அடித்துக் கொல்கிறார்கள் கள்வர்கள். போகும் வழியில் அவர்களும் ரத்த வெள்ளத்தில் இறக்கிறார்கள். மந்திரிசபையில் இருந்தவர்கள் துரோகிகளாக மாறுகிறார்கள். நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. அந்த வருடம் வெய்யிலின் உக்கிரம் கூடிக்கொண்டே போகிறது. தென்னைகள் கருகி, தாகம் தாங்காமல் மரித்த கால்நடைகளின் மீது வீழ்கின்றன…

ஜெய் பாகுபலி!!!