நானே ராஜா! நானே மந்திரி!

நாட்டின் பல தொகுதிகளில் வாக்காளர்களில் பலர் வாக்கு அளிப்பதில்லை.  வாக்கு அளிக்காதவர்களின் சதவிகிதம் சில தொகுதிகளில் 40 சதவிகிதம் கூடப் போய் விடுகிறது.  மக்களின் இந்த விரக்திக்குக் காரணம், எந்தக் கட்சியுமே மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான். தில்லியில் ஆயிரக்கணக்கான சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் இருக்கிறார்கள்.  இவர்கள் பிகாரிகள்.  பீகாரில் தங்கள் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு தனியாக தலைநகரில் ரிக்‌ஷா ஓட்டிப் பிழைக்கிறார்கள்.  பத்துக்குப் பத்து அறையில் மூன்று பேர் தங்குகிறார்கள்.  அறைக்கு வெளியே ஒரு ஸ்டவ்வை வைத்து ரொட்டி சுட்டு, ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடுகிறார்கள்.  அதுவும் இரவு வேளையில் மட்டுமே.  வாரம் ஒருமுறை பருப்பு கிடைத்தால் அதிர்ஷ்டம். காலையில் பன்னும் டீயும்.  மாத வருமானம் அதிக பட்சம் 5000 ரூ.  இதில் 3000 ரூபாயை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.  ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்குப் போவதில் ஒவ்வொரு பிகாரிக்கும் நான்கு குழந்தைகள்.  இதுதான் பெரும்பான்மை இந்தியனின் வாழ்க்கை.  தமிழ்நாடு கொஞ்சம் பரவாயில்லை.  இங்குள்ள துப்புரவுத் தொழிலாளியின் மாத வருமானம் 7200 ரூ.

இப்படிப்பட்ட சாமான்யரின் வாழ்க்கை முன்னேறும் விதமாக எந்த அரசியல் கட்சியிடம் திட்டம் இருக்கிறது?  அதை விடுங்கள்.  முன்னேற்றம் அடைந்த ஒரு நாட்டின் அடையாளமாக இருப்பது சாலைப் போக்குவரத்து.  இந்த விஷயத்தில் இந்தியாவின் 2500 ஆண்டு வரலாற்றில் இரண்டு பேரின் பெயர் மட்டுமே சரித்திரத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது.  அசோகர், வாஜ்பேயி.  இவர்கள்தான் இந்தியாவில் சாலைகளை அமைத்தவர்கள்.  ஆனால் இரண்டு பேருமே மத்தியில் ஆட்சி புரிந்தவர்கள் ஆனபடியால் கிராமப்புறங்கள் குண்டும் குழியுமாக – குண்டு வீச்சில் பாழடைந்த ஊர்களைப் போல்தான் இருக்கின்றன.  பஞ்சாப் போன்ற ஒருசில மாநிலங்களைத் தவிர இந்தியா முழுவதுமே இதுதான் நிலை.  உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் ‘இங்கெல்லாம் ஆட்சி என்று ஏதாவது நடக்கிறதா?’ என்றே சந்தேகம் கொள்ளும் அளவுக்கு மட்டமாக இருக்கின்றன சாலைகள்.   அடுத்து- கல்வி, மருத்துவம்.   இந்த இரண்டையும் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு மக்களை எப்போதும் போதையில் வைத்திருக்கும் மதுபான விநியோகத்தைத் தன் கையில் வைத்திருக்கிறது தமிழக அரசு.  இதுதான் மக்கள் விரக்தி அடையும் முக்கியமான இடம்.

டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபான உற்பத்தி ஆலைகளை வைத்திருப்பது திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான்.  எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மதுவை வாங்குவது இந்த ஆலைகளிடமிருந்துதான்.  டாஸ்மாக் மதுவை தொடர்ந்து அருந்தினால் அதிகபட்ச வயது ஐம்பதுதான்.  அப்படிப்பட்ட தரமற்ற மதுதான் டாஸ்மாக்கில் விற்கப்படுகிறது.   ஆக, இதற்கெல்லாம் தீர்வு காணாமல் திரும்பத் திரும்ப எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டு வரும் அரசியல்வியாதிகளைப் பார்த்து மக்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் அரசியலுக்குள் நுழைந்து மக்களின் வாழ்வை மாற்றப் போவதாக அறிவிக்கும் புதிய முகங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்ப்போம்.  முதலில் கமல்ஹாசன்.  ஒரு பாரம்பரியான, வலுவான அடித்தளம் உள்ள கட்சியின் தலைவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.   பேச்சுத் திறமை, விவாதத் திறமை, அரசியல் ஞானம் இது எதுவும் இல்லாமலேயே கட்சியின் செல்வாக்கிலேயே தலைவரின் காலம் முடிந்து விடும்.  ஆனால் கமல்ஹாசனோ இப்போதுதான் கட்சியையே துவக்கியிருக்கிறார்.  அதிலும் அவருக்கு எம்ஜியார், ரஜினி (20 ஆண்டுகளுக்கு முந்தைய ரஜினி) போன்றவர்களுக்கு இருந்த ‘தனிப்பட்ட’ புகழ் கிடையாது.  கமல் எழுதுவதோ பேசுவதோ யாருக்கும் புரியவில்லை.  நாட்டின் எதார்த்த நிலைமையோ அவருக்குத் தெரியவில்லை.  வாழ்நாள் முழுவதும் சினிமாவின் புகழ் வெளிச்சத்திலேயே வாழ்ந்தவர்.  அவர் படம் நன்றாக இல்லை என்று ஒரு நண்பர் சொன்னாலே அவரை ஜென்ம விரோதியாக பாவிக்கும் மனோபாவம் கொண்டவர்.  இப்படிப்பட்டவர் எப்படி அரசியலுக்கு வர முடியும்?

அரசியல் என்றால் அதில் விமர்சனத்தை எதிர்கொள்வதுதான் முதல் பாடம்.  ஆனால் கமலின் சரித்திரத்திலேயே அது இல்லை.  அவருடைய தசாவதாரத்தை விமர்சித்து எழுதினேன்.  உடனே அந்தப் பத்திரிகையின் ஆசிரியரை போனில் அழைத்து அரை மணி நேரம் திட்டியிருக்கிறார் கமல். இதில் வேடிக்கை என்ன தெரியுமா?  ஆசிரியரிடம் கமல் என்ன திட்டினார் என்று கேட்டேன்.  புரியவில்லை என்று சொல்லிச் சிரித்தார்.  இவ்வளவுக்கும் கமலின் மற்ற எல்லா படங்களையும் பாராட்டி எழுதியிருக்கிறேன்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், கமலுக்குள் இருக்கும் சர்வாதிகார மனோபாவம்தான்.  விமர்சிப்பவன் எதிரி. இது அவருடைய எல்லா நடவடிக்கைகளிலும் தெரிகிறது.  கமலின் மற்றொரு குணாம்சம், அவர் மட்டுமே பேசுவார்.  மற்றவர் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.  டயலாக், விவாதம், உரையாடல் என்பதெல்லாம் அவரிடம் சாத்தியமே இல்லை.  அவர் பேசுவார்.  ஐந்து ஆறு மணி நேரம் கூட விடாமல் பேசக் கூடியவர்.  மற்றவர் அனைவரும் குறுக்கிடாமல் கேட்க வேண்டும்.  இப்படிப்பட்ட ’மாரத்தான்’ பேச்சாளர் எங்கே பேச வேண்டுமோ அங்கே பேசாமல் வாய்மூடி மௌனியாக இருந்து விட்டார்.

ஸ்ம்ருதி இரானி என்ற பாஜக பெண்மணியோடு கமல் உரையாட வேண்டும்.  உரையாடலை ஒருங்கிணைத்தவர் அர்னாப் கோஸ்வாமி.  டிசம்பர் 2018-இல் நடந்தது விவாதம். வரும் தேர்தலில் (அதாவது, இப்போதைய தேர்தல்) எது விவாதப் பொருளாக இருக்கும்? இதுதான் முதல் கேள்வி. முகம்மது அலி என்ற குத்துச்சண்டை வீரர் இருந்தார் அல்லவா?  அவர் முதல் குத்திலேயே எதிராளியை நாக் அவுட் செய்து விடுவார்.  அப்படிச் செய்தார் ஸ்ம்ருதி இரானி.  எப்படி என்று அடுத்த வாரம் பார்ப்போம்.

நன்றி: தினமலர்

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai