மோடியும் விவேகானந்தரும்…

நாளை தெரிந்து விடும்.  எக்ஸிட் போல் முடிவுகளில் மோடிதான் என்கிறார்கள்.  என் நண்பர்களுக்கெல்லாம் ஒரே குஷி.  உத்சாகம் ததும்புகிறது.  எல்லோருக்கும் ஒரே எண்ணம்.  அழிந்து கொண்டிருக்கும் இந்து மதத்தை மோடி காப்பாற்றி விடுவார்.  மோடி மட்டும் மீண்டும் பதவிக்கு வந்து விட்டால் முஸ்லீம்கள் ஏழெட்டு குழந்தைகள் கூட பெற்றுக் கொள்ளட்டும்.  கிறிஸ்தவர்களும் ஆன மட்டும் மதம் மாற்றட்டும்.  கவலையே இல்லை.  எல்லாம் மோடி பார்த்துக் கொள்வார்.  இந்து மதத்துக்கு ஆபத்து வராமல் காப்பாற்றி விடுவார். 

படித்தவர்களே இப்படி நம்புகிறார்கள்.  அடப் பாவிகளா! மோடியை ஆதி சங்கரர் ரேஞ்ஜுக்குக் கொண்டு போய் விட்டீர்களே!   மோடி இந்து மதத்துக்கு அப்படி என்னதான் செய்தார்?  சாமியாருக்கு பத்மபூஷன் கொடுத்தார்.  ஒரு ரௌடி சாமியாரை முதலமைச்சர் ஆக்கினார்.  இதைத் தவிர அவர் வேறு என்ன செய்தார்?  காமன் சிவில் கோட் பற்றியெல்லாம் அவரால் யோசிக்கக் கூட முடியாது.  நான் காமன் சிவில் கோடின் ஆதரவாளன்.  ஒரு மதச் சார்பற்ற நாட்டில் மதத்தை முன்வைத்து சலுகைகள் தரப்படுவது சரியல்ல என்றே கருதுகிறேன்.  ஆனால் இட ஒதுக்கீடுக்கு இது பொருந்தாது.  தலித்துகளுக்கு 4000 ஆண்டுகளாக சமூக வாழ்க்கை மறுக்கப்பட்டிருக்கிறது.  இன்றும் கிராமங்களில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது.  அதுவரை இட ஒதுக்கீடு இருந்துதான் தீர வேண்டும்.  ஆனால் அதிலும் சீர்திருத்தங்கள் தேவை.  மூன்று தலைமுறைகளுக்கு மேல் ஒரு குடும்பம் இட ஒதுக்கீடு சலுகையைப் பெறுவதில் சமூக நீதி மறுக்கப்படுகிறது.  ஏனென்றால், மூன்று தலைமுறையாக இட ஒதுக்கீடு பெற்ற குடும்பம் தானாகவே மேட்டுக்குடி ஆகி விடுகிறது.  அப்புறம் எதற்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு?  இம்மாதிரி விஷயங்களிலெல்லாம் மோடி கையே வைக்க மாட்டார்.  அவர் செய்வதெல்லாம் வெறுப்பு அரசியல்.  மாட்டுக் கறி சாப்பிடுபவனை அடித்துக் கொல்லு… இந்த மாதிரி அரசியல்.  இதுவா இந்து தர்மம்? 

எப்படியோ, மோடி இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆண்டால் இந்தியா இன்னும் கேடு கெட்டுப் போகும்.  அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.  என்னைப் போன்றவர்களை ஜெயிலில் போடலாம்.  பெருமாள் முருகனுக்கு வந்தது போல் எனக்கு இடதுசாரிகளும் கம்யூனிஸ்டுகளும் சப்போர்ட்டுக்கு வர மாட்டார்கள்.  இட ஒதுக்கீட்டை லேசாக எதிர்க்கிறேன்; காமன் சிவில் கோடை ஆதரிக்கிறேன்.  எந்தக் கம்யூனிஸ்ட் என் ஆதரவுக்கு வருவார்?  என்னை ஜெயிலில் போட்டால் மோடி செய்த நல்ல காரியம் என்று கம்யூனிஸ்டுகள் மோடியைப் பாராட்டவே செய்வார்கள்.  மோடிக்கு எப்படி என்னைப் போன்ற தெருவோரத்து எழுத்தாளனைத் தெரியும் என்கிறீர்களா?  அதற்கெல்லாம் லோக்கல் ஆட்காட்டிகள் இருக்கிறார்கள்.  ஆனால் அதிர்ஷ்டம் என்னவென்றால், சிறையில் இருக்கும் என்னை ஜாமீனில் எடுக்கவும் மோடி ஆதரவாளர்களான என் நண்பர்கள்தான் வருவார்கள்!!!

ஒரு பின்குறிப்பு: மோடியின் படத்தை உற்றுப் பாருங்கள்.  தாடியில்லாமல் கற்பனை செய்யுங்கள்.  விவேகானந்தரின் உருவம் தெரிகிறதா? எனக்குத் தெரிகிறது.  என் நண்பர்களுக்கும் தெரிகிறது.  உங்களுக்குத் தெரியவில்லையானால் நீங்கள் தேசத்துரோகி!

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai