பூச்சி – 119

அன்புள்ள சாரு,

‘என்ன இன்னும் பதில் வரவில்லையே’ என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, நீங்கள் உங்கள் பூச்சி கட்டுரையிலேயே என் கடிதத்தை பகிர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.

உண்மைதான். நான் புத்தகங்கள் வாங்கும் முன் பல மதிப்புரைகளைப் படித்து விட்டுத் தான் வாங்குவேன். 

(இது சரியான முறையா என்று தெரியவில்லை.)

அப்படித்தான் நான் ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் கண்டு பிடித்தேன். ஒரு புத்தகம் வாங்கும் முன் அவர்கள் தளத்தில் அதனைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டுத்தான் வாங்குவேன்.

ஏனென்றால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ராபின் சர்மா, நெப்போலியன் ஹில் போன்றவர்களின் புத்தகங்களே உயர்வானது என எண்ணி வாசித்துக்கொண்டிருந்தவன் நான்.

ஆனால் பூச்சி-115ல் ஒரு நண்பர் எழுதியது போல, ‘அது’ மாதிரியான வரிகளை தவிர்க்கலாம்.

 இப்போது நான் என் அம்மாவிடமோ அப்பாவிடமோ ‘என் கடிதத்தை சாரு வெளியிட்டிருக்கிறார்’ என்று பூச்சி-115 ஐக் காட்ட வேண்டும் என எண்ணினால் தொடக்க வரிகளே இப்படி உள்ளது. அவர்கள் என்ன நினைப்பார்கள். ‘ஏதோ ஒரு அரசியல் மேடைப் பேச்சாளனிடம் நம் பையன் மாட்டிக்கொண்டுவிட்டான்’ என்றுதானே?

நான் அவர்களிடம் போராடிப் புரியவைக்க வேண்டும்.

“யாருடைய சான்றிதழும் எனக்கு தேவையில்லை. மொத்த தமிழகமுமே எதிர்த்து நிற்கும் என்னிடம் உன் ‘சங்கடம்’ ஒரு விஷயமா?” என்று கேட்பதற்கும் உங்களுக்கு உரிமையுண்டு.

எனக்குத் தோன்றியதை கூறினேன், தவறாயின் மன்னிக்கவும்.

100 அத்தியாயங்கள் கடந்து இசை, இலக்கியம், தத்துவம் எனப் பல தளங்களில் இயங்கும் உங்கள் பூச்சி கட்டுரைத் தொடரில் நானும் ஒரு சிறு இடம் பிடித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தங்கள்,

கிஷோர் குமார்.

18.8.2020.

ஒரு வாரத்துக்கு முன்பு வந்த கிஷோர் குமாரின் கடிதத்துக்கு இன்றுதான் பதில் எழுதுகிறேன்.   நேர நெருக்கடி.  பொதுவாக எனக்கு வரும் கடிதங்களை வெளியிடுவதானால் அதில் ஒற்றுப் பிழைகளைத் திருத்தம் செய்துவிட்டே வெளியிடுவது வழக்கம்.  கிஷோர் குமாரின் கடிதங்களில் அவ்வளவாக ஒற்றுப் பிழைகள் இருக்காது.  இப்போதெல்லாம் இரண்டு விதமான ஒற்றுப் பிழைகளை கவனிக்கிறேன்.  ஒன்று, சந்திகளில் ஒற்றே சேர்ப்பதில்லை.  ஒற்று பிழைகள் என்று எழுதுவது.  அப்படியே ’வயலன்ஸாகி’ விடுகிறேன்.  செவுளிலேயே ரெண்டு கொடுக்கலாமா என்று ஆத்திரம் வருகிறது.  ஆனால் இதை விட ஒரு பயங்கரத்தை இப்போதைய இளைஞர்கள் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.  என்ன தெரியுமா?  ஒற்று வரவே வராத இடங்களில் ஒற்றெழுத்தை இஷ்டத்துக்கு அள்ளித் தெளிப்பது.  இலக்கணம் வழுவாது வாழ்கிறார்களாம்!  அடக் கஷ்ட காலமே!  இதற்கு இன்னொரு க்ரூப்பே தேவலாமே?  எங்கேயும் ஒற்று போடுவதில்லை.  அது பரவாயில்லை என்கிறேன்.  ஏன் சொல்ல நேர்ந்தது என்றால், அந்த இளைஞர் எனக்குப் பிடித்த பிரபல எழுத்தாளர்.  இந்தப் பிரபலம் இப்போது எனக்குப் பிடித்த வார்த்தையாகப் போய் விட்டது.  பிரபல கவிஞர் இசை பிரபலம் பற்றி ஒரு சுவாரசியமாக கட்டுரை எழுதியிருந்தார்.  அதைப் படித்ததிலிருந்து இப்போதெல்லாம் பிரபலம் பிரபலம் என்று அனத்திக் கொண்டிருக்கிறேன். 

பிரபல எழுத்தாளரின் பெயர் சொல்ல மாட்டேன்.  எனக்குப் பிடித்த இளைஞர்களே கம்மியாக இருப்பதால் அவர் பெயரைக் குறிப்பிட்டு அவரையும் இழக்க நான் விரும்பவில்லை.  அவருடைய ஒரு கட்டுரையை இன்னொரு பிரபல எழுத்தாளரின் பரிந்துரையின் பேரில் படித்தேனா?  தொலைந்தது.  ஒரே ஒற்றுப் பிழை.  பரவாயில்லை.  இப்போதெல்லாம் ஒற்றுப் பிழைதானே ட்ரெண்ட் என்று மேலே போனால், இரண்டாவது வகை பயங்கரம்.  எங்கெல்லாம் ஒற்று வரவே கூடாதோ அங்கெல்லாம் போடு ஒற்று என்று போட்டு வெளுத்துக்கட்டி இருக்கிறார்.  கிஷோர் குமாரின் ஒற்றுப் பிழையில்லாத கடிதத்தை இங்கே அந்தப் பிரபல எழுத்தாளர் பாணியில் எழுதிப் பார்ப்போம்.

அப்படித்தான் நான் ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் கண்டுப்பிடித்தேன்.

அதனைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார்கள் என்றுப் பார்த்துவிட்டுத்தான் வாங்குவேன்.

ஒரு பதின்பருவக் கல்லூரி மாணவன் பிழையில்லாமல் தமிழ் எழுதுகிறான்.  ஆனால் ஒரு எழுத்தாளர் இத்தனை பிழை போடலாமா?  சரி, ஏற்கனவே கூறியது போல, இது பத்தே நிமிடத்தில் பழகக் கூடிய விஷயம்.  சிறார்கள் பானுப் பாட்டி என அழைக்கும் பானுமதி பிரமாதமாக இந்த ஒற்று விஷயத்தைக் கற்பிக்கிறார்.  யூட்யூபில் கிடைக்கிறது.  தேடிப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள். 

விஷயத்துக்கு வருகிறேன்.  கிஷோர் குமாரிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம் உடனடியாக வந்தது.  அது:

அன்புள்ள சாரு,

மன்னிக்கவும். ஒரு எழுத்தாளன் ‘இப்படி எழுதவேண்டும்; இப்படி எழுதக் கூடாது’ என்று கூறுவது மிக மிகத் தவறான விஷயம்.

என்னுடைய சென்ற கடிதத்தை ஒரு வேகத்தில் எழுதிவிட்டேன். 

மீண்டும் வாசித்துப் பார்க்கும்போதுதான் எனக்குப் புரிகிறது. 

எழுத்தாளனை நோக்கி வாசகன் தன்னை விரித்துக்கொள்ள வேண்டுமே தவிர, தன்னை நோக்கி எழுத்தை குறுக்கிக்கொள்ளக் கூடாது.

கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் செய்து விட்டேன்.

மன்னிக்கவும்.

கிஷோர் குமார்

இந்தச் சிறிய வயதில் என்ன ஒரு பணிவு பாருங்கள்.  இவர் பெரிய ஆளாக வருவார்.  முதல் கடிதத்தைப் படித்த போதே முடிவு செய்து விட்டேன், ”அந்த” உதாரணத்தை ஒரு முறை சொன்னதோடு சரி, இரண்டாவது முறையும் சொல்லக் கூடாது என்று.  சொன்னதை அந்தக் கட்டுரையிலிருந்து நீக்கி விடுகிறேன்.  இப்போது கிஷோர் தன் பெயரும் கடிதமும் வந்த கட்டுரைகளைத் தன் பெற்றோரிடம் காண்பிக்கலாம்.

***

MacAir குறித்து யு.எஸ்.ஸிலிருந்து மூன்று பேர் மட்டுமே தொடர்பு கொண்டிருப்பதாலும், இப்போதைக்கு அங்கேயிருந்து இங்கே எடுத்து வர நண்பர் யாரும் இல்லை என்பதாலும், இங்கேயே சென்னையில் வாங்கி விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.  எனவே முடிந்தவர்கள் அதற்கான தங்கள் பங்களிப்பை அனுப்பலாம். 

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai