ஸோரோ – 4
முடிந்தால் துக்க வீட்டுக்கு நேரில் செல்லுங்கள். அது பெரும் ஆறுதலாகவும் உதவியாகவும் இருக்கும். ஸோரோவின் உடலோடு தோட்டத்தில் ஒரு மணி நேரம் தனிமையில் அமர்ந்திருந்தேன். உறங்கிக் கொண்டிருந்த அவந்திகாவை எழுப்பி விஷயத்தைச் சொல்ல எனக்கு மனம் இல்லை. அதிர்ச்சியாகி விடுவாள். ஒரு மணி நேரம் கழித்து மாடியிலிருந்து எழுந்து வந்து பார்த்துத் தெரிந்து கொண்டாள். துக்கத்தை அவளால் வெளிப்படுத்தக் கூட முடியவில்லை. காரணம், என் நிலை அப்படி இருந்தது. ஸோரோவின் உடலை என்ன செய்வது என்ற பிரச்சினை. … Read more