புதிய வாசக தளம்

என்னுடைய அருஞ்சொல் நேர்காணல்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதில் நான் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் என்னை இதுகாறும் தொடர்ந்து வரும் வாசகர்களுக்குப் பரிச்சயமாகி இருக்கலாம். ஆனால் இப்போது அருஞ்சொல்லில் அது எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறேன். மேலும், அருஞ்சொல் வாசகர்களுக்கு அது எல்லாமே புதியவை. அருஞ்சொல் மூலம் நான் பல ஆயிரம் புதிய வாசகர்களைச் சென்றடைந்திருக்கிறேன் என்பதும் தெரிய வருகிறது. உதாரணம் இந்தக் கடிதம். உங்கள் பெயரே எனக்கு இரண்டு தினங்களாகத்தான் தெரியும் என்று ஆரம்பிக்கிறது … Read more

எழுத்தாளராவது எப்படி? – சிறுகதை

எனக்கு ஜெயமோகன் மீது ஒரே ஒரு விஷயத்தில்தான் பொறாமை.  அவருடைய வாசகர்கள்.  கோவையில் ஒவ்வொரு வருடமும் பிரம்மாண்டமான முறையில் ஒரு விழாவை நடத்திக் காண்பிக்கிறார்கள்.  அது தவிர மாதாமாதம் ஒவ்வொரு ஊரிலும் வெண்முரசு கூட்டம்.  அமெரிக்காவிலோ கேட்கவே வேண்டாம்.  இங்கே இருந்தபடியே அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய அளவுக்கு அவரது அமெரிக்க வாசகர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  விஷ்ணுபுரம் வட்டத்தில் உள்ள ஒரு பத்து முக்கியஸ்தர்களுக்கு ஒரு கொக்கரக்கோ சமம்தான் என்றாலும் … Read more

அருணாசலத்துக்கு வாழ்த்து

அருணாசலம் பற்றி எழுதியிருக்கிறேன். அவரைப் போன்ற ஒரு அபூர்வமான மனிதரை நான் கண்டதில்லை. அவர் கோபப்பட்டு நானோ நண்பர்களோ பார்த்ததில்லை. அதிர்ந்து கூடப் பேச மாட்டார். புகைப்பழக்கம் கிடையாது. மதுவைத் தொட்டதே இல்லை. எந்தப் பெண்ணையும் ஏறிட்டும் பார்க்க மாட்டார். எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால், தூய சைவம். மதுரையில் எப்படி இப்படி ஒரு அதிசயம் நிகழ முடியும் என்றே எனக்குப் புரியவில்லை. தஞ்சாவூர் என்றால் கூடப் புரிந்து கொள்ள முடியும். மதுரையிலா? ஆனால் நேரில் பார்ப்பதற்கு … Read more

பாமரர் உலகம்

இங்கே தமிழ்நாட்டில் படிக்காதவர் பாமரர் அல்ல; அவருக்காவது கொஞ்சூண்டு காமன்சென்ஸ் உள்ளது. இங்கே பாமரர் என்ற பிரிவுக்குள் வருபவர்கள் பெரும்பாலும் புத்திஜீவிகளும் பேராசிரியர்களும் சில பத்திரிகையாளர்களுமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பாமரர் என் பெயரைக் குறிப்பிட்டு தமிழ் இந்து தினசரியில் அவதூறாக எழுதியிருந்தார். அதேபோல் ஒரு பேராசிரியரும் அடிமட்டித்தனமாக எழுதியிருந்தார். இருவருக்கும் பதில் கூறுவது என் வேலையல்ல, நான் இரண்டு நாவல்களை இப்போது ஒரே நேரத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த மூடர்களுக்கு பதில் சொல்ல நேரமும் இல்லை. … Read more

மொழிபெயர்ப்பு அவலம்

தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்பு நூல்களை நான் படிப்பதே இல்லை. பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆங்கிலமே தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருந்தால் இலக்கியமும் தெரியவில்லை, இலக்கியத் தமிழும் தெரியவில்லை. அதனால் அந்தப் பக்கமே நான் செல்வதில்லை. நேற்று அராத்து எழுதியிருந்த ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தேன். அதில் அவர் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு கிரேக்க நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து ஒன்றிரண்டு பத்திகளை மேற்கோள் கொடுத்திருந்தார். அந்த நாவல் கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்து ஆங்கிலத்திலிருந்து தமிழில் வந்துள்ளது. அந்த நாவல் … Read more

நடனமும் இசையும்…

சமீபத்தில் ஒரு பாடலைக் கேட்டேன். அதற்கு ஆடியவர்கள் நடிகர்கள் இல்லை. சராசரி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள். மத்திம வயதுக்காரர்கள். நூற்றுக்கணக்கான – உண்மையில் ஆயிரக்கணக்கில் அந்தப் பாடலுக்கு ஆடி காணொலிகளை விட்டுக் கொண்டிருந்தனர். நானே ஒரு ஐம்பது ஜோடிகளின் ஆடலைப் பார்த்திருப்பேன். அந்தப் பாடலின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், நாட்டுப்புறத்தன்மை எல்லாம் சேர்ந்து அதைக் கேட்பவர்களுக்கெல்லாம் பிடித்து விட்டது என்று தெரிந்தது. சினிமாப் பாடலா, வேறு நாட்டுப் பாடலா என்று தெரியாமல் கூகிளில் தேடினேன். எனிமி என்ற … Read more