சார்வாகன் இரங்கல் கூட்டத்தில் பேசியது

நேற்று நடந்த சார்வாகன் இரங்கல் கூட்டத்தில் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு அழுது விடாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டே போனேன்.  நல்லவேளை.  அந்த அசம்பாவிதம் நடக்கவில்லை. கூட்டத்தில் பேசும் போது பாரவி சொன்னார், ஒரு மாதம் பழகியதற்கே சாரு இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாரே, நான் நாற்பது ஆண்டுகள் சார்வாகனோடு பழகினேன், என் நிலை எப்படி இருக்கும் என்று.  அவரது இழப்பைப் புரிந்து கொள்கிறேன்.  ஆனால் நான் அழுதது, அழுவது எல்லாமே எனக்காகத்தான்.  இப்படி ஒரு புதையல் என் … Read more

“எதற்காக எழுத வேண்டும்?  யார் படிக்கிறார்கள்?” சார்வாகன் (1929-2015)

ஜனவரி 3, ஞாயிறு மாலை 5:30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸில், சார்வாகன் இரங்கல் கூட்டம் நடைபெற இருக்கிறது. அடியேன் உரையாற்றுகிறேன். வாசகர் வட்ட நண்பர்கள் அவசியம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என வேண்டுகிறேன். முகவரி: Discovery Book Palace, No.6, Mahavir Complex, Near Pondicherry Guest House, Munusamy Salai, K.K.Nagar, Chennai – 600078 *** சென்ற ஆண்டின் துவக்கத்தில் புதிய நாவலை எழுதத் துவங்கும் முன்பு சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் அத்தனை பேரையும் ஒருசேரப் படித்து விட வேண்டும் என்று … Read more

தேவகோட்டை உரை

எத்தனை அன்புடனும் தொந்தரவு தராமலும் பழகினாலும் எனக்கும் நண்பர்களுக்கும் கொஞ்ச காலத்தில் விரிசல் ஏற்பட்டு விடுகிறது.  நண்பர்கள் பிரிந்து விடுகின்றனர்.  புதிய நண்பர்கள் ஏற்படுகின்றனர்.  நீண்ட கால நண்பர்கள் என்றே யாரையும் சொல்ல முடியவில்லை.  ஏன் என்று நண்பர் மனோவைக் கேட்ட போது நீங்கள் comfort zone எதையும் தருவதில்லை என்றார்.  அப்போதுதான் எனக்கும் புரிந்தது.  நண்பர்களைப் புண்படுத்த மாட்டேன்.  எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டேன்.  சமமாக நடத்துவேன்.  ஆனாலும் என்னோடு இருப்பது வசதியாக இருக்காது. … Read more

உயிர்மையின் புத்தாண்டு, பொங்கல் சிறப்புச் சலுகை புத்தக விற்பனை

டிசம்பர் 28 முதல் –ஜனவரி 20வரை 30-40% கழிவில் அழையுங்கள்: தொலைபேசி :044-24993448, அலைபேசி: 7845610986 நேரில் வாருங்கள் உயிர்மை 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18 எழுதுங்கள்: uyirmmai@gmail.com …………………………………………… புத்தாண்டை புத்தகங்களோடு துவங்கலாம். டிசம்பரில் நடந்த இயற்கைப் பேரிடரில் ஏராமளான வாசகர்கள் தங்கள் புத்தக சேமிப்புகளை இழந்திருக்கின்றனர். புத்தகங்களை நண்பர்களுக்கு பரிசளிக்க, புத்தகங்களை இழந்தவர்கள் அவற்றை மறுபடி வாங்க உயிர்மை சிறப்பு சலுகை விலைத் திட்டமொன்றை அறிவிக்கிறது. திட்டம்-1 ஜனவரி 1 முதல் 20 … Read more

நிர்பயா என்கிற ஜோதி சிங் (2)

  மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு, வணக்கம், சற்று முன்பு ‘நிர்பயா என்கிற ஜோதிசிங்’ என்ற வலைப்பதிவினைக் கண்டேன்.    http://charuonline.com/blog/?p=3588 நான் உங்களின் பெரும்பாலான கருத்துகளுக்கு ஒத்துப் போகிறவன். ஆனாலும் உங்களின் இந்தக் கருத்து எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்புடையது அல்ல. முதலில்  ‘பிறக்கும் போது அனைவரும் வெள்ளந்தியாகத்தான் இவ்வுலகைக் காண்கிறார்கள்’ என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒன்று . அந்தச் சிறுவன் செய்த செயலை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவில் நமக்குத் தெரிந்தது ஒரு … Read more

நிர்பயா என்கிற ஜோதி சிங்

நிர்பயா பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன் அதைப் பற்றி சில கருத்துகள்… எந்தப்பெண்ணாவது இதை ஒட்டிய ஒரு சீரியஸான குரலை பதிவு செய்துள்ளாரா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இப்படியான வன்முறைகளை சிறியது முதல் பெரிய அளவில் பெண்கள் அன்றாடம், பல மூலைகளில், பல அளவுகளில் எதிர்கொண்டு தான் வருகிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளதற்கெல்லாம் போகவே வேண்டியதில்லை. தொன்று தொட்டே பெண் மீதான வன்முறை இருந்துகொண்டே தான் வந்துள்ளது. அதற்கு, சமூகத்தின் விளிம்புநிலையிலிருது தான் ஒருவன் வரவேண்டுமென்றில்லை.  … Read more