அந்தோனின் ஆர்த்தோ: தர்க்கத்துக்கு எதிரான கலையின் கூச்சல் – ஜெயமோகன்

ஆர்த்தோவின் வாழ்வில் ஒரு வரலாற்று அபத்தம் நிகழ்ந்தது. பின்நவீனத்துவ ஃப்ராய்டியர் லக்கான் ஆர்த்தோவை மனநோயாளி என்றும், பொருளற்றவற்றை எழுதுபவர் என்றும் சொன்னார். இன்று ஆர்த்தோ மானுடத்தின் ஒரு குரல். இன்று கல்வித்துறையின் சில பழைய ஆசாமிகளுக்கு மட்டுமே லக்கான் முக்கியமானவர். நவீன நரம்பியலின் வருகைக்குப் பின் முற்றிலும் அர்த்தமற்ற சொற்றொடர்களின் குவியலாகவே லக்கான் பார்க்கப்படுகிறார். அறிவு காலாவதியாகும்போது சாஸ்வதமாக நின்றிருக்கும் இன்னொன்று உள்ளது. பித்தின் வழியாக மட்டுமே சென்றடையத்தக்க ஓர் இடம். அதைச் சொல்ல உங்கள் நாடகத்தால் … Read more

ஆர்த்தோவும் ஜெயமோகனும்…

சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இரவில் நான் Cradle of Filth என்ற பாப் குழுவின் Nymphetamine என்ற பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். க்ரேடில் ஆஃப் ஃபில்த் எனக்கு மிகவும் பிடித்த குழு. அடித் தொண்டையிலிருந்து அலறுவார் பாடகர். சாஸ்த்ரீய இந்திய இசை கேட்ட செவிகள் பிய்ந்து விடும். செவிகளிலிருந்து ரத்தம் வருவது போல் இருக்கும். அதுதான் இசை என்கிறார் ஆர்த்தோ. ஆர்த்தோவின் கோட்பாடுகள்தான் இம்மாதிரி இசைக்கான உந்துதல் என்பதை இன்று இசை வல்லுனர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஆர்த்தோ … Read more

பிள்ளைப்பூச்சியால் வந்த வினை – 2

இதெல்லாம் அபாண்டம் சாரு. நானா பலமுறை செய்தேன். ஒரே முறை சந்தித்தேன். அவ்வளவு தான். ஒரு அரங்கேற்றத்துக்கு நீங்கள் தலைமை தாங்குகிறீர்கள். சரி தலைவர் வருவாரேன்னு வந்தா நீங்கள் எப்போதும் போல முதல் வரிசையில் என்னுடனேயே உட்காருங்கள் என்றீர்கள். உலகளந்தானும் நானும் எவ்வளவோ மன்றாடினோம் நீங்கள் விடவில்லை. அது தான் உங்கள் பண்பு. நாங்க தான் வேண்டாம் வேண்டாம் என்கிறோமே கேட்டீர்களா(ஜெயலலிதா குரல்). அது தான் இங்கேயும் நடந்திருக்கிறது. அவங்க ஒரு நான்கு பேரை கூப்பிட்டார்கள். அதோடு … Read more

பிள்ளைப்பூச்சியால் வந்த வினை

ஆயுஷ் ஹோமம் சம்பந்தமான பிரச்சினைகள் தீராது போல் இருக்கிறது.  இப்போது ஒரு வாழ்நாள் முழுதும் நீடிக்கும் ஒரு தடை போடப்பட்டிருக்கிறது.     நான் பொதுவாக வீட்டில் என் நண்பர்களைப் பார்ப்பதில்லை.  காரணம், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வந்த நண்பர் சத்தமாக, “நீங்கள் பைசெக்‌ஷுவலா சாரு?” என்று கேட்டார்.  சமையல் அறையில் இருந்த அவந்திகா சாரூஊஊஊ என்று அலறினாள்.  ஓடிப் போய் என்னவென்று கேட்டேன்.  அந்த ஆளை முதலில் வீட்டை விட்டு வெளியே … Read more

பழகுவதற்கு சாரு எப்படி? – 2

ஆர்த்தோ நாடகத்தை முடித்தாயிற்று, இனிமேலாவது பெட்டியோவை எடுத்து முடித்து விடலாம் என்று நினைத்தேன்.  நேற்று ஜெயமோகன் அதைக் கெடுத்தார்.  இன்று வினித் கெடுத்து விட்டார்.  நேற்று நான் எழுதியிருந்த கட்டுரையைப் படித்து விட்டுப் பொங்கி விட்டார் போல.  அவரிடமிருந்து இப்படி செய்தி: ”எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்று சொன்னால் எல்லோரும் என்னை அரக்கனைப் போலவும் பிள்ளைக் கறி சாப்பிடுபவனைப் போலவும் பார்க்கிறார்கள்.” இது நீங்கள் சொல்லி இருப்பது. சில வருடங்களுக்கு முன்பு உங்கள் நெருங்கிய நண்பர் எனக்குப் … Read more

பழகுவதற்கு சாரு எப்படி?

இன்று காலை ஜெயமோகன் மாடல் என்ற ஜெயமோகனின் கட்டுரையைப் படித்து விட்டு செம ஜாலியாகி விட்டேன்.  ஏனென்றால், அதில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்துக்கும் வார்த்தைக்கும் நான் நேர் எதிராக வாழ்கிறேன்.  ஆம், ஒவ்வொரு வார்த்தைக்கும். காலையிலிருந்து அதே நினைவாக இருக்கிறேன்.  ஒரே ஆச்சரியம், எப்படி இது சாத்தியம் என்று.  அந்த அளவுக்கு நேர் எதிர்.  உடனே ஸ்ரீ, ஸ்ரீராம், ஸ்ரீனி, வினித், ராஜேஷ் நால்வரிடமும் ஜெயமோகனின் கட்டுரையை அனுப்பி “சாரு எப்படி?” என்று அபிப்பிராயம் கேட்டேன்.  சீனி … Read more