புத்தக விழா

நேற்று புத்தக விழாவுக்குச் சென்றிருந்தேன்.  இதையெல்லாம் புத்தக விழா என்று சொன்னால் அது அவமானம்.  mac மடிக்கணினியும் ஆப்பிள் ஐஃபோனும் வைத்திருக்கிறோம்.  ஆனால் புத்தகம் என்று வரும் போது குட்டம் வந்தவனின் ஓலைக் குடிசை போல் வாழ்வதில் நமக்கு எந்த முகச்சுளிப்பும் இல்லை. என் ஆங்கிலப் புத்தகங்கள் ஒரு டஜன் கடைகளில் கிடைக்கின்றன.  என் வாழ்நாள் கனவு சாத்தியமானதில் எனக்கு எல்லையில்லா சந்தோஷம்.  இந்த ஆண்டு தான் ஆற்றாமை இல்லாத, நிராசைகள் இல்லாத, திருப்தியான ஆண்டாகத் தொடங்கியது.  … Read more

புத்தக விழா – என் புத்தகங்கள் கிடைக்கும் இடம்

இப்போது வெளிவந்திருக்கும் என் புதிய புத்தகங்கள் பட்டியல்: 1. Zero Degree (English) 2. Marginal Man (English) 3. Unfaithfully Yours (English) 4. To Byzantium : A Turkey Travellogue 5. நிலவு தேயாத தேசம் (துருக்கி பயணக் கட்டுரை) Zero Degree Publishing மூலம் வெளியான இந்த நூல்கள் பின்வரும் புத்தக அரங்குகளில் நாளை மதியத்திலிருந்து கிடைக்கும். 1. Emerald Books 2. Leo Books 3. Rhythm Books 4. … Read more

வைரமுத்து – 2

ஒரு தொலைபேசி உரையாடலில் தேவதாசி என்பதற்கு உயர்ந்த அர்த்தம் இருந்ததாகவும் பின்னர் நிலவுடைமைச் சமுதாயத்தில்தான் அதற்கு இழிவான அர்த்தம் ஏற்பட்டு விட்டதாகவும் குறிப்பிடுகிறார் வைரமுத்து. சரி. நாம் இப்போது என்ன மன்னராட்சியிலா இருக்கிறோம்? ஜனநாயகம்தானே? மன்னர் ஆட்சியில் மன்னர் கடவுளுக்குச் சமம். மக்கள் அடிமைகள். அப்படிப்பட்ட மன்னராட்சி சொல்லாடலான கவிப் பேரரசு என்ற பட்டத்தை ஏன் அவர் சுமந்து கொண்டிருக்கிறார்? 2. எவரையும் ஜாதி சொல்லிக் குறிப்பிடக் கூடாது. திட்டக் கூடாது. சட்டப்படி குற்றம். அப்படி இருக்க, … Read more

வைரமுத்துவைக் கைது செய்யுங்கள்…

ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசியிருப்பதைக் கேட்டேன். திட்டமிட்டுத்தான் பேசியிருக்கிறார். ஏனென்றால், அது பேச்சு அல்ல. எழுதிப் படிக்கிறார். யாரோ ஒரு முட்டாள் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தாராம், ஆண்டாள் தாசி என்று. என்னடா என்று பார்த்தேன். கடவுளைக் காதலனாகக் கற்பித்துப் பாடியதால் தாசியாம். அட அறிவுக் கொழுந்துகளா… கடவுளைக் காதலனாக நினைத்துப் பாடுவது நாயக – நாயகி பாவம் என்பது கூடவா கவிப் பேரர்ஜவுக்குத் தெரியவில்லை? கடவுளைக் காதலனாக வரித்தால் தாசியா? அந்த அமெரிக்க ஆய்வாளரைப் பார்த்தால் … Read more