என் புதிய புத்தகங்கள்

பல நண்பர்கள் என் பிறந்த நாள் அன்று என்னைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்ரீராமைத் தொடர்பு கொண்டதாக அறிந்தேன்.  என் உயிரினும் இனிய நண்பர்களே…  ரத்தத்தின் ரத்தமே என்ற பாணியில் என்று நீங்கள் எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை.  ஏனென்றால், எம்ஜியார் உண்மையிலேயே தன் ரசிகர்களைத் தன் ரத்தத்தின் ரத்தமாகத்தான் பாவித்தார்.  அதைப் போலவேதான் நானும் என் எழுத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் என் உயிரையும் மேலாக மதிக்கிறேன்.  உதாரணமாக, நேற்று ஒரு நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.  காரணத்தையும் … Read more

ப்ரும்மம்

வொய்ட்டி, ப்ளாக்கி, ப்ரௌனி என்று மூன்று தெரு நாய்களுக்கு உணவிட்டுக் கொண்டிருக்கிறேன்.  அவைகளும் உணவுக்காகத் தெருத்தெருவாக அலைவதை நிறுத்தி விட்டு செயின் திருடர்களைப் பிடிப்பதில் கவனம் செலுத்துகின்றன.  (எங்கள் ஏரியாவில் செயின் திருடர்கள் ஜாஸ்தி.  பைக்கில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் லாவிக் கொண்டு போய் விடுவார்கள்.  அவர்களுக்கு என்ன தலையெழுத்தா, ஆறாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு தெருவைத் துப்புரவு செய்வதற்கு?)  எங்கள் தெருவின் பெயர் வெங்கடசாமி தெரு.  இந்தத் தெருவில் பதினோரு வருடங்களாக இருந்தாலும் … Read more