புத்தகக் காட்சி
முந்தாநாள் புத்தகக் காட்சிக்கு திடீரென்று சென்றிருந்தேன். உயிர்மை ஸ்டாலில் ஒரு மணி நேரம் இருந்தேன். ரெண்டு பேருக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். பக்கத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் சுமார் ஐம்பது பேருக்கும், அராத்து சுமார் இருபது பேருக்கும் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். சந்தோஷமாக இருந்தது. ஏன் என்றால் ஒருமுறை திருவனந்தபுரத்தில் Hey Literary Festival -இல் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தேன். அது ஒரு சர்வதேச விழா. திருவனந்தபுரத்தில் எனக்கு ஒரு சினிமா நடிகருக்கு உரிய வரவேற்பு உண்டு. என்னோடு புகைப்படம் … Read more