ஏன் இலக்கியம்?

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை,பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து நடத்திய உலக புத்தக தின விழா – 2023 அன்று அடியேன் ஆற்றிய உரையின் காணொலி: நன்றி: கபிலன், ஷ்ருதி டிவி

இன்று மூன்றரை மணிக்கு…

இன்று அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் மூன்றரை மணிக்கு உரையாற்றுகிறேன். ஐந்து மணிக்கு எஸ்.ரா. பேசுவதால் சரியாக மூன்றே முக்காலுக்கு ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். நல்ல முறையில் உரையாற்றும் எழுத்தாளர் பட்டியலில் என் பெயரை யாரும் சேர்ப்பதில்லை. நாற்பது ஆண்டுகள் கழித்துத்தான் என்னை எழுத்தாளர் பட்டியலிலேயே சேர்த்திருக்கிறார்கள். கொரோனா காலத்தில் சுமார் எட்டு முறை நான்கு மணி நேரம் தொடர்ந்து உரையாற்றியிருக்கிறேன். காலை ஆறு மணிக்குத் தொடங்குவேன். இடையில் தண்ணீர் கூட அருந்தாமல் … Read more