வீடற்றவர்கள்

எதிர்வீடு தனிவீடுசுற்றி ஒரு தோட்டம்நாலரை கோடி பெறும்ஒரு என்னாரய் வாங்கினான்பன்னிரண்டரை கோடிக்கு வீட்டின் வெளியே நடைபாதைஅதிலே ஒரு தார்ப்பாலின்அங்கே வசித்த இரு மூதாட்டிகள்வெளிகேட்டுக்குப் பூட்டு இல்லைதோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றிசெடிகளுக்கு உயிர் கொடுத்தார்கள் என்னாரய்க்குமடியில் பணத்தின் கனம்மனசில் பூட்டின் கனம்இருவரையும் துரத்தி விட்டுகேட்டுக்குப் போட்டான் பூட்டு இப்போது செடிகள் எலும்புக்கூடுகள்தோட்டம் ஒரு பிணக்காடு நான் ஒரு மண்புழுபுழுதியில் புரள்பவன்ஏதும் செய்ய ஏலாதுஅறம் பாடினேன் ஆனால் எதிர்வீட்டு என்னாரய்அறத்தைப் பார்த்தான்அதற்கும் ஒரு பூட்டைப் போட்டுஎங்கோ போட்டான் தூக்கி…

நிரந்தரம்

ஒரு சிலை வைக்கலாம்என்றார் ஒருவர்வேண்டாம், மக்கள் மனதினிலே குடியிருப்பார்என்றார் இன்னொருத்தர். ‘சிலை வைத்தால் பட்சிகள் மலம் கழிக்கும்;மக்கள் மனதினிலே குடியிருப்பதும்நிச்சயமில்லை; இன்றிருப்பார் நாளையில்லை,ஒரு போத்தல் சீலே வைன் இருந்தால் நலம்’என்றேன் நான்.

சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம்

வெளிவர இருக்கும் என் கவிதைத் தொகுப்பின் தலைப்பு. புத்தகம் வேர்ட் ஃபைலில் 400 பக்கம் வருகிறது. மொத்தம் 152 கவிதைகள். புத்தகம் அளவு பெரிதாகத்தான் இருக்கும் என்று யூகிக்கிறேன். விலையும் அதற்குத் தகுந்தாற்போல் கூடுதலாகத்தான் இருக்கும். ஒரு இருநூறு பேர் வாங்கினால் மகிழ்ச்சி அடைவேன்.