நிர்குண் நிர்ஹோஸ்தியஸ்
பவானிக்குச் சென்றிருந்தது பற்றி ஒரு நீண்ட தொடரே எழுதலாம். நேரம் இல்லை. நவம்பர் எட்டு நிகழ்ச்சிக்காகத் திரைப்படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நிர்குண் பற்றி கட்டுரையில் எழுத வேண்டாம் என்று முடிவெடுத்தேன். அவரை என் நாவலில்தான் ஒரு கதாபாத்திரமாகச் சேர்க்க வேண்டும். இப்போதைக்கு சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு மான்ஸ்டர். ராக்ஷசன். அசாதரணன். உதாரணமாக, பல ஆண்டுகளாக அவர் தினமும் இரண்டு மணி நேரம்தான் உறங்கி வந்திருக்கிறார். ஆனால் என்னைக் கண்டதும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிராந்தி அருந்தியதால் சுமார் … Read more