ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளர் ஆன்மீக நாவல் எழுதலாமா?: வளன் அரசு
பின் நவீனத்துவம் எதையுமே ஒதுக்கியதில்லை. அதன் முக்கியமான அம்சம் தேர்ந்தெடுத்தல். அதாவது உங்களுக்கு முன் பல்வேறு வாய்ப்புகள் இருக்கிறது. அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அல்லது நீங்கள் வேட்டைக்கு செல்வதாக கற்பனை செய்துகொள்ளுகள். காட்டில் பல்வேறு விலங்குகள் இருக்கிறது. பார்க்கும் அத்தனை விலங்குகளையும் வேட்டையாடுதல் சரியான வேட்டையல்ல. ஒரு வேட்டைக்காரன் தன் வேட்டையை தெரிவு செய்கிறான். அப்படி தேர்ந்தெடுத்ததும் தன் வேட்டைக்காக காத்திருக்கிறான் அல்லது காட்டில் சுற்றி வருகிறான். அப்போது அவன் முன் தன் வேட்டையைவிட பெரிய … Read more