ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளர் ஆன்மீக நாவல் எழுதலாமா?: வளன் அரசு

பின் நவீனத்துவம் எதையுமே ஒதுக்கியதில்லை. அதன் முக்கியமான அம்சம் தேர்ந்தெடுத்தல். அதாவது உங்களுக்கு முன் பல்வேறு வாய்ப்புகள் இருக்கிறது. அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அல்லது நீங்கள் வேட்டைக்கு செல்வதாக கற்பனை செய்துகொள்ளுகள். காட்டில் பல்வேறு விலங்குகள் இருக்கிறது. பார்க்கும் அத்தனை விலங்குகளையும் வேட்டையாடுதல் சரியான வேட்டையல்ல. ஒரு வேட்டைக்காரன் தன் வேட்டையை தெரிவு செய்கிறான். அப்படி தேர்ந்தெடுத்ததும் தன் வேட்டைக்காக காத்திருக்கிறான் அல்லது காட்டில் சுற்றி வருகிறான். அப்போது அவன் முன் தன் வேட்டையைவிட பெரிய … Read more

ஒரு வேண்டுகோள்

நேற்றும் முந்தாநாளுமாகச் சேர்ந்து ஒரு பதினைந்து மணி நேரம் எழுதினேன். நாலைந்து அத்தியாயங்களை முடித்து விடலாம் என்று திட்டம். பார்த்தால் ஒரே ஒரு அத்தியாயம்தான் முடிந்தது. அதுவும் இரண்டாயிரம் வார்த்தைகள் கூட வரவில்லை. நாவல் அத்தனை இறுக்கமாக இருக்கிறது. தினமும் நான்கு மணி நேரம்தான் உறங்குகிறேன். ஆனால் காலை நடைப்பயிற்சியை மட்டும் விடுவதில்லை. என்னுடைய பதினேழாவது வயதிலிருந்து முப்பது வயது வரை தினமும் பத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் ஓடும் பழக்கம் இருந்தது. நாகூரிலும் தில்லியிலும் அதற்கேற்ற பெரிய … Read more