அருஞ்சொல் இணைய இதழில் என் நேர்காணல்

இதுவரை என்னிடமிருந்து எடுத்த எத்தனையோ நேர்காணல்கள் வந்துள்ளன. அவைகளில் மிகச் சிறந்த ஒன்றாக இது இருக்கும் என்று நம்புகிறேன். த அவ்ட்ஸைடர் என்ற ஆவணப்படத்துக்காக என் இளம் பிராயத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த நேர்காணல் எடுக்கப்பட்டதால் இதன் முக்கியத்துவம் இன்னும் கூடுதலாகிறது. விஷ்ணுபுரம் விருது விழா சமயத்தில் – அதாவது, டிசம்பர் பதினெட்டுக்கு முன்பாக நான் தொடர்ந்து ஐந்து நாட்கள் ராக்கண் விழித்தேன். ராக்கண் என்றால் பன்னிரண்டு மணி வரை விழிப்பதுதான். ஏனென்றால், எப்போது படுத்தாலும் நான்கு மணிக்கு எழுந்து கொள்ளும் பழக்கம் உள்ளவன். சமயங்களில் நான்கு மணி நேரம் இன்னும் குறைந்தது. இப்போது அந்த நேர்காணலின் முதல் பகுதி அருஞ்சொல் இணைய இதழில் வந்துள்ளது. படித்துப் பாருங்கள். இவ்வளவு அருமையாக என் வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காண்பித்த சமஸுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி | அருஞ்சொல் (arunchol.com)