படிக்க வேண்டிய நூல்கள் (2)

http://charuonline.com/blog/?p=3399 இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன் மேற்கண்ட இணைப்பில் உள்ள கடிதங்களைப் படித்து விடக் கேட்டுக் கொள்கிறேன்.  படித்து விட்டுத் தொடரலாம். சாரு, நான் தருணின் மூன்று நாவல்களையும் படித்து விட்டேன். அந்த மூன்றில் எனக்குப் பிடித்தது ‘The Story of My Assassins’. அதே போல் Alchemy of Desire -ல் Kama என்ற பாகத்தைப் படித்து மிரண்டு விட்டேன்.  அப்படியே உள்ளே இழுத்து விட்டது.  தருணின் மொழி மிக வசிகரமானது.  The valley of Masks … Read more

சார்வாகன்

  இன்று மாலை நாலரை மணியிலிருந்து ஆறரை வரை சார்வாகனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரது இல்லத்தில். கால எந்திரத்தில் ஏறி ஏதோ சத்ய யுகத்திலோ அல்லது த்ரேதா யுகத்திலோ போய் விழுந்தது போல் இருந்தது. அந்த இரண்டு மணி நேரத்தையும் என் வாழ்நாளில் மறக்கவே இயலாது.  சார்வாகனுடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர் எழுத்தாளர் ஜாதி இல்லை என்று தெரிந்தது. அதற்கும் மேலே. ரமண மகரிஷியோ, ராமகிருஷ்ண பரமஹம்ஸரோ எழுத்தாளர்களா? அது போன்ற மகான்களோடு பேசிக் கொண்டிருந்தது … Read more

தொலைதூரத்து நண்பர்கள்…

ஒருநாள் ஈரோட்டிலிருந்து கோபிக்கு நானும் நண்பரும் காரில் சென்று கொண்டிருந்தோம்.  காரில் என்று எழுதியதும் ஜெயமோகன் ஞாபகம் வருகிறது.  சே…  தம்பி ஞாபகம் இல்லாமல் ஒரு வார்த்தை எழுத முடியவில்லையே, என்னைக் காப்பாற்று இறைவா!  சரி, விஷயம்.  கோபிக்குச் சென்று அங்கே உள்ள நந்தினி உணவகத்தில் சாப்பிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம்தான் பயணத்தின் காரணம். என்னென்ன சாப்பிட்டோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை.  ஆனால் சங்க காலத் தமிழர்கள் இப்படித்தான் சாப்பிட்டிருப்பார்கள் என்று தோன்றியது.  இப்படி ஒரு … Read more

லா.ச.ரா.வின் எழுத்தில் கரைந்த இன்னொரு இதயம்…

மதிப்பிற்குரிய சாரு நீங்கள் லா.ச.ரா வை பற்றி ஆற்றிய உரையை கண்டேன். உண்மையான உணர்ச்சிகளுடன் ஆத்மார்த்தமாகப் பேசியதாகத் தோன்றியது. எனக்கு மிகவும் பிடித்த என்று சொல்வதைவிட எனக்கு வாசிப்பனுபவத்தின் உன்னதத்தை விளக்கியவர் லா.ச.ரா என்று கூறுவேன். இத்தனைக்கும் எந்த வித முன்னறிமுகமும் இல்லாமல் அவரை வாசிக்கத் தொடங்கியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஒரு 2 மணி நேர பேருந்து பிரயாணத்தில் நேரம் கடத்துவதற்காக என் அம்மாவின் புத்தக அலமாரியின் மூலையில் இருந்த கழுகு நாவலை படிக்கலாம் … Read more

தேவலோகத்து மங்கையும் சில பாடல்களும்…

நேற்றைய ரஷ்யன் செண்டர் கூட்டத்தில் நான் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை.  300 பேர் கொள்ளளவு உள்ள அரங்கில் 100-125 பேர் தான் வந்திருந்தனர்.  போதாது.  அதிலும் லா.ச.ரா.வுக்குப் போதாது.  சரியான விளம்பரம் இல்லையோ என்னவோ.  நான் விளம்பர வேலைகளில் ஈடுபடவில்லை.  நான் ஒரு 50 நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தால் 40 பேராவது வந்திருப்பார்கள்.  எனக்கு அதற்கு நேரம் இல்லாமல் போய் விட்டது.  காரணம், திருப்பூர் கிருஷ்ணன்.  திருப்பூர் கிருஷ்ணன் பேசும் கூட்டத்தில் என்னை சிறப்புப் பேச்சாளர் … Read more

நிலவேம்புக் கஷாயம், புத்தக வெளியீட்டு விழா, இன்ன பிற…

நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரைகளை நீங்கள் படித்துப் பார்த்தால் தெரியும், இப்போது அரசாங்க விளம்பரம் மூலம் பரவலாகத் தெரிய வந்திருக்கும் நிலவேம்புக் கஷாயம் பற்றி அப்போதே எழுதியிருப்பேன்.  (இப்போதைய எழுத்தாளர்களுக்கு இப்படி ஒரு வாக்கியம் கூட எழுதத் தெரியவில்லை என்று இதை எழுதும் போது தோன்றுகிறது!)  அது ஏன் இன்று ஞாபகம் வந்ததென்றால், நேற்றைய லா.ச.ரா. கூட்டத்தில் என்னை சிறப்புப் பேச்சாளர் என்று போட்டிருந்தும் வாசகர் வட்டத்திலிருந்து ஐந்து பேர் தான் வந்திருந்தனர்.  அந்த … Read more