இந்தியா ஓஹோன்னு இருக்கும்…

காஃபி டே முதலாளி தற்கொலை பற்றி நாலு வரி எழுதியிருந்தேன். என் நெருங்கிய நண்பர் ஒருவர் நான்கு ஊர்களில் ஆறு பிரிவுகளில் அலுவலகம் வைத்திருந்தார். நூறு பேர் அவருக்குக் கீழ் வேலை செய்து அவரிடம் சம்பளம் வாங்கி வந்தனர். இப்போது – அதாவது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு – நாலு ஊர்களில் இருந்த எல்லா பிரிவுகளையும் பூட்டி விட்டார். அவரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது தள்ளுவண்டியில் டீ விற்கிறார்கள். என்னுடைய மற்றொரு நண்பர் – … Read more

கலைஞனாக வாழ்தல் குறித்து…

என் மீதும் என் எழுத்தின் மீதும் பேரன்பு கொண்ட நண்பர்களுக்கு சில புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்றே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.  தலைக்கு மேல் கிடக்கிறது வேலை.  இருந்தாலும் உங்கள் மீது கொண்ட தீரா அன்பினால் இதை எழுதுவதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சனிக்கிழமை இரவு ஏழெட்டு நண்பர்கள் அறைக்கு வந்தார்கள்.  அதில் ஒருவர் ஸ்பெயின் போய் விட்டு வந்திருந்தார்.  பேசி முடித்த போது காலை ஐந்தரை.  தூங்கி எழுந்து கொள்ளும் போது மதியம் இரண்டு.  … Read more

அமெரிக்கப் பயணம் – சில முன்குறிப்புகள் (5)

இதற்கு முன்னால் எழுதிய நான்கு குறிப்புகளையும் ஒரு ஓட்டமாகப் படித்துக் கொண்டு இதைத் தொடரலாம்.  நியூஜெர்ஸியில் வசிக்கும் – மணி என்று நான் அன்புடன் அழைக்கும் மணிசேகரனோடு பேசிக் கொண்டிருக்கும் போது என் பயணங்களின் தன்மை பற்றி விளக்கினேன்.  உதாரணமாக, பாரிஸ் போனால் அந்நகரின் பிரபலமான ஈஃபிள் டவரைப் பார்க்க எனக்கு விருப்பம் இருக்காது.  அதை விட அந்நகரில் உள்ள catacombs-ஐப் பார்க்க விருப்பப்பட்டு அங்கே போனேன்.  பொதுவாக நினைவுச் சின்னங்களைப் பார்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.  … Read more

தென்னமெரிக்கப் பயணக் குறிப்புகள் – 3

என்னிடம் கேமரா இல்லாததால் மாச்சு பிச்சுவை விசேஷமாகப் படம் எடுக்க முடியவில்லை. என்னுடைய ஐஃபோனில் எத்தனை வருமோ அத்தனைதான் எடுத்தேன். மேலும் ரெண்டு விடியோ எடுத்தாலே (அஞ்சு நிமிஷம்) ‘உன்னுடைய ஸ்டோரேஜ் தீர்ந்து விட்டது’ என்ற அறிவிப்பு வந்து விடுகிறது. அதனால் மாச்சு பிச்சுவை சில புகைப்படங்கள் மட்டுமே எடுத்தேன். பின்வரும் இணைப்பில் நாலரை நிமிடம் ஓடும் ஒரு அருமையான விடியோ உள்ளது. பாருங்கள்.

சமஸ்: சூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்

வாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு முன் நான் அரிதாக எழுந்து பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்ற ஒரு அதிகாலையில் நிகழ்ந்தது. நள்ளிரவில் மீன்பிடிக்குச் சென்றுவிட்டு படகில் திரும்பிவந்த கடலோடிகளின் குழுவில் அவன் இருந்தான். முந்தைய இரவின் நட்சத்திர ஒளியை உடலிலிருந்து உதிர்த்திராத நல்ல பொடி மீன்கள் அவர்களுடைய வலையில் இருந்தன. மீன் வாங்குவதற்காக நான் அங்கு செல்லவில்லை; அந்த நேரத்தில் அப்படி ஒரு … Read more