காலம் காலமாகக் கேட்ட குரல்

டியர் சாரு, என் நீங்கள் ரெமி மார்டினை வாங்கி விற்று காசை பெற்று இருக்க கூடாது….ஒரு சின்ன வழி கூட தெரியாமல் நீரும் ஜெயமோஹனும் சமூகத்துக்கு அறிவுரை செய்ய கிளம்பி விடுகிறீர்கள் . கேட்டால் இருவரும் ராக்கெட் செய்வது எப்பிடி என்று வகுப்பு எடுப்பீர்களா? எழுத்தாளன் என்றால் எல்லாம் தெரிந்த மேதை என்ற முட்டாள் நினைவை முதலில் ஒழித்து விடுங்கள். எழுத்தாளர்களின் எழுத்துக்கு முன்னும் இந்தியா இப்பிடித்தான் இருந்தது இப்போதும் இப்பிடித்தான் இருக்கிறது. இப்போது இந்தியா அடைந்திருக்கும் … Read more

ரகசிய சிநேகிதம்

செல்வகுமார் முகநூலில் எழுதியிருப்பது: சாரு, அபிலாஷின் ஜெயமோகன் கட்டுரையை படித்தபோது நீங்கள் எழுதிய கருத்தே எனக்கும் தோன்றியது. ஒரு எழுத்தாளனை வாசகனாக நெருங்கும்போது அபிலாஷ் எவ்வளவு இனிமையாக மாறிவிடுகிறார். கதை, கட்டுரை என்று எழுதும்போது மட்டும் துருபிடித்த பிளேடால் வாசகனை பிராண்டி விடுகிறார். வேடிக்கைக்காக நீங்கள் யாரிடமும் பேசுவதில்லை என்று சொல்கிறீர்கள். உண்மையில் உங்கள் பழைய சாருஆன்லைன் கடிதங்களில் இருந்தும், எழுத்தில் வெளிப்படும் கச்சிதம் + கண்டிப்புத் தன்மையால் உங்களை நெருங்க, எழுத முயற்சிக்கும் எழுத்தாளர்கள் வருவதில்லை. … Read more

இணையப் பிச்சைக்காரன் (1) & (3)

அவசரமாக எழுதியதில் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன.  முதலில் இணையப் பிச்சைக்காரன் (1) இணைப்பு.  இதோ அது: http://www.jeyamohan.in/74493#.VTr1tCGqqko நான் முடிவு செய்தால் பணத்தை வேறு வழிகளிலும் நிறையவே ஈட்ட முடியும்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் – என் நெருங்கிய நண்பர் குமார் என்னைத் தன்னுடைய படத்தில் நடிக்க அழைத்தார்.  ஹீரோ இல்லை.  Anti-hero தான்.  அது நான்.  பச்சையாகச் சொன்னால் வில்லன்.  பூஜா இன்னொரு பாத்திரம்.  அழைப்பை மறுத்து விட்டேன்.  எக்ஸைல் எழுதுவதில் மும்முரமாக இருந்தேன்.  … Read more

இணையப் பிச்சைக்காரன் (2)

  இதை நான் பத்துப் பதினைந்து தினங்களுக்கு முன்பே எழுத எண்ணினேன்.  நேரம் இல்லை.  முழு நேரத்தையும் குருபூஜை (பழுப்பு நிறப் பக்கங்கள்) எடுத்துக் கொள்கிறது.  எக்கச்சக்கமாக வாசிக்க வேண்டியிருக்கிறது.  நேற்று ஒரு கட்டுரையில் ஒரு சின்ன தடங்கல்.  இல்லை, தடங்கல் பெரிது.  குருநாதர் இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார்.  அதில் நான்கை அவசியம் படிக்க வேண்டும்.  அந்த நான்கும் தான் அவர் எழுதியதில் ஆகச் சிறந்தது.  மூன்றைப் படித்து விட்டு எழுத ஆரம்பித்தேன்.  அந்த மூன்றில் … Read more

நாட்டு நடப்பு (2)

இந்த நண்பரின் எழுத்தை நம்மால் எந்தக் காலத்திலும் ரசிக்கவே முடியாது என்று நான் நினைக்கும் எழுத்தாளர்களில் முதல் இடம் ஆர். அபிலாஷுக்குத்தான்.  விநாயக முருகனுக்கு இரண்டாம் இடமே.  ஆனால் அந்தப் பாவி மனுஷன் அபிலாஷ் என் நம்பிக்கையை ஐந்தே நிமிடத்தில் உடைத்து எறிந்து விட்டார்.  அவருடைய மிக நெகிழ்ச்சியான கட்டுரை ஒன்றைப் படித்த போது இப்படியும் எழுதக் கூடியவரா இவர், அல்லது ஆங்கிலத்தில் எழுதி யாரோ ஒருவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று சந்தேகப்பட்டு கட்டுரையின் கீழே ரொம்பத் … Read more

நாட்டு நடப்பு

நாட்டு நடப்பு என்ன என்பதற்காக ஒரு எட்டு முகநூல் பக்கம் எட்டிப் பார்த்தேன்.  கார்ல் மார்க்ஸ் எழுதியிருந்ததைப் படித்து அங்கேயிருந்து இங்கே போனேன்.  இலக்கிய உலகம் பரபர என்று இருக்கிறது.  அரசியலே தோற்று விடும் போல் உள்ளது.  சரி, அரசியலில் காசு பார்க்கலாம்.  இலக்கியத்தில் ஒன்னுமே மிஞ்சாதே?  புகழ் கூட கிடைக்காதே?  அதிகாரமும் இல்லையே?  போன வாரம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரி மாதிரி ஒரு பெரிய வண்டியில் வீட்டுக்கு வந்தார்.  வண்டியின் முன்னே Fortuner என்று … Read more